மனோபாலாவின் ஆத்மா சாந்தி அடைவதற்கு அரவிந்த் சுவாமி இதை பண்ணலாம்.. வேண்டுகோள் வைத்த பிரபலம்
சென்னை: நடிகராகவும் இயக்குனராகவும் இருந்து வந்த மனோபாலா சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை குறைவால் மரணம் அடைந்தார்.
அவருடைய இறப்பு பற்றி பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் தன்னுடைய வருத்தத்தையும் மனோபாலா பற்றிய பல தகவல்களையும் பகிர்ந்து இருக்கிறார்.
அதில் நடிகர் அரவிந்தசாமி மனோபாலாவிற்காக சதுரங்க வேட்டை 2 படம் வெளியாவதற்கு முயற்சி செய்யலாம் என வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

நடிகராகவும், இயக்குனராகவும் இருந்து வந்த மனோபாலாவின் மறைவு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரையும் பாதித்திருக்கிறது. அனைவரிடமும் அன்பாக பழக கூடிய ஒரு நடிகராகவும் இயக்குனராகவும் ஒரு சிறந்த மனிதராகவும் வலம் வந்தார் என்று பலரும் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
யாரிடமும் பகைமை பாராட்டாமல் அனைவரிடமும் நல்ல மனதோடு பழகக்கூடிய ஒரு மனிதர் என்றும் கோபத்திற்கும் மனோபாலாவிற்கும் மிகப்பெரிய தூரம் என்றும் அவரை சுற்றியுள்ள நெருங்கிய நண்பர்கள் பலர் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். ஆகாய கங்கை என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் முதன் முதலில் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்த மனோபாலா பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்திருக்கிறார்.

அதைத்தொடர்ந்து 40க்கும் மேற்பட்ட பல படங்களை இயக்கியும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் நிரூபித்து இருக்கிறார். அது மட்டுமல்லாமல் நடிகை ராதிகாவை வைத்து மனோபாலா பல படங்களை இயக்கியுள்ளாராம். திரைத்துறையில் சிக்கனமாக படம் எடுப்பதில் மனோ பாலாவை மிஞ்ச வேறு யாரும் இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.
சில வருடங்களுக்கு முன்பு வெளியான சதுரங்க வேட்டை திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த திரைப்படத்தை தயாரித்தவர் மனோபாலா தான். எச்.வினோத் இயக்கத்தில் வெளிவந்த அந்த படம் மிகப்பெரிய வசூலையும் பெற்று தந்தது. அதை தொடர்ந்து பராசுரன் என்ற திரைப்படத்தை மனோபாலா தயாரித்திருக்கிறார்.

இந்த நிலையில் தான் பிரபல சினிமா தயாரிப்பாளரான கே. ராஜன் மனோபாலாவை குறித்து ஒரு செய்தியை பகிர்ந்து இருக்கிறார். அதில் சதுரங்க வேட்டை படம் நல்ல ஒரு வரவேற்பு பெற்று தந்தது. அதை தொடர்ந்து இரண்டு மூன்று படங்களை தயாரித்த மனோபாலாவிற்கு ஓரளவுதான் வசூல் வந்ததாம். ஆனால் நடிகர் அரவிந்த்சுவாமியை வைத்து தயாரித்த படமான சதுரங்க வேட்டை 2 படம் முற்றுப்பெற்ற நிலையிலும் இன்னும் அந்த படம் வெளிவராமல் இருக்கிறதாம்.
அந்தப் படத்தில் ஏதோ ஒரு பிரச்சனை இருப்பதாகவும், அந்த பிரச்சனை காரணமாக வழக்கு தொடரப்பட்டதாகவும் கூறுகிறார். ஆதனால் அரவிந்த்சுவாமி நினைத்தால் அந்த வழக்கை விரைவில் முடித்து அந்த படத்தை வெளியிட உதவலாம் எனவும் அதில் கூறி இருக்கிறார். மேலும் மனோபாலாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்றால் அரவிந்தசாமி இதை செய்ய வேண்டும் என்று வேண்டுகோளையும் கே. ராஜன் வைத்திருக்கிறார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications