Madarasi : " ஒரு நாள் நான் ஃபீல்ட் அவுட் ஆகும்போது! அனிருத் பேச பேச எமோஷனலான சிவகார்த்திகேயன்
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மதராஸி' திரைப்படம், செப்டம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ளது. ஸ்ரீலக்ஷ்மி மூவிஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ஷபீர், விக்ராந்த் என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இது இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது அப்போது அனிருத் பேசியதற்கு சிவகார்த்திகேயன் எமோஷனலாகி இருக்கிறார்.

அனிருத் - சிவகார்த்திகேயன் வெற்றி கூட்டணி
சிவகார்த்திகேயன் - அனிருத் கூட்டணி, எப்போதும் வெற்றிக் கூட்டணியாகவே அமைந்திருக்கிறது. 'மதராஸி' இவர்களது கூட்டணியில் உருவாகும் எட்டாவது படம். இருவரும் ஒரே காலகட்டத்தில் சினிமாவுக்குள் நுழைந்ததால், இவர்களது நட்பு மிகவும் ஆழமானது. இசை வெளியீட்டு விழாவில் பேசிய அனிருத், "நான் இன்று இந்த மேடையில் நிற்கிறேன்னா, அதுக்கு காரணம் சிவகார்த்திகேயன் தான். என்னுடைய முதல் பிளாக்பஸ்டர் படம் 'எதிர்நீச்சல்'. அது சிவகார்த்திகேயன் நடித்த படம்.
இப்போது அவர் ₹50, ₹100, ₹300 கோடி என வசூல் அடித்துவிட்டார். 'மதராஸி' டிரெய்லரில், 'இது என் ஊருடா, நான் நிப்பேன்'னு சொல்வார். அதுமாதிரி, இது என் எஸ்.கே, நான் வந்து நிப்பேன்" என்று உருக்கமாகப் பேசினார்.
மனம் உருகிய சிவகார்த்திகேயன்
அனிருத் மேலும், "ஒரு நாள் நான் ஃபீல்ட் அவுட் ஆவேன், அப்போது என் மனம் சிவகார்த்திகேயன் ஜெயிக்கிறதை பார்த்து, நான் ஜெயித்ததாக நினைத்து சந்தோஷப்படும்" என்று கூறியதைக் கேட்ட சிவகார்த்திகேயன், மேடைக்குக் கீழே கண் கலங்கிப் போனார்.
சிவகார்த்திகேயன் பதிலுரை
அனிருத்தின் பேச்சுக்கு மேடையில் பதிலளித்த சிவகார்த்திகேயன், "அவர் ஃபீல்ட் அவுட் எல்லாம் ஆக மாட்டார். அதற்கு வாய்ப்பே கிடையாது. ஷாருக்கான் தொடங்கி எல்லாரையும் பார்த்துவிட்டார். ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் கோடி என பல சாதனைகளை அவர் இன்னும் செய்ய வேண்டியிருக்கு" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். மேலும், "அனிருத்துடன் நான் எந்த அளவுக்கு நெருக்கம் என்றால், நான் எந்த படம் கேட்டாலும் உடனே 'ஓகே' சொல்லிவிடுவார். ஆனால் அப்படி நான் போய் கேட்கவே மாட்டேன். அதுதான் அவருக்கு நான் கொடுக்கிற மரியாதை. ஒரு வேளை கேட்க போனால், அவருக்கு ஏற்றமாதிரி சரியான படத்துடன் தான் போய் கேட்பேன். வெற்றியை எப்படி கையாள்வது என்பதற்கு அவர் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன்" என்றும் தெரிவித்தார்.
ஏ.ஆர்.முருகதாஸ் பாராட்டு
அதே விழாவில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ், "அனிருத் எனக்கு முதல் முறையாக 'துப்பாக்கி' போன்ற பெரிய படம் பண்ண வாய்ப்பு கொடுத்தார். அந்த நன்றிக்கடன் எனக்கு எப்போதுமே இருக்கு. இந்த படம் 'ஃபயரா' இருக்கும்" என்று உறுதியளித்தார். 'மதராஸி' திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு என மொத்தம் ஐந்து மொழிகளில் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகிறது. சிவகார்த்திகேயன், அனிருத், ஏ.ஆர். முருகதாஸ் என இந்த நட்சத்திரங்களின் கூட்டணி, ரசிகர்களுக்கு ஒரு பக்கா ஆக்சன் ட்ரீட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications