"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள்
சென்னை: தமிழ்நாடு - கேரளா உறவு என்றாலே அது மொழி, கலாச்சாரம், வியாபாரம், சினிமா என பல்வேறு தளங்களில் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த உறவாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், அந்த உறவுக்குள் அவ்வப்போது சர்ச்சைகளையும் உருவாக்குவது சில திரைப்படங்கள்தான்.
தற்போது அந்த பட்டியலில் புதிதாக இணைந்திருப்பது 'Dridam' திரைப்படம்.
திரையரங்குகளில் பெரிதாக கவனம் பெறாத இந்த படம், தற்போது ஓடிடியில் வெளியாகிய பிறகு தமிழ்நாட்டில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. காரணம், படத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு பேர் வங்கிக் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் போல காட்சிப்படுத்தப்பட்டிருப்பதுதான். இதைப் பார்த்த பல தமிழ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

இதற்கு முன்பு நடந்த சம்பவங்கள்
உண்மையில் இந்த கோபம் Dridam படத்தால் மட்டும் உருவானது அல்ல. பல ஆண்டுகளாக மலையாள சினிமாவில் சில திரைப்படங்கள் தமிழர்களை நெகட்டிவான மோசமான கதாபாத்திரங்களாக சித்தரித்து வருவதாக தமிழ் ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஒரு காலத்தில் "பாண்டி" என்ற வார்த்தையே மலையாள படங்களில் அடிக்கடி பயன்படுத்தப்பட்டது.
சில படங்களில் தமிழர்கள் என்றாலே,
* குண்டர்கள்
* ரவுடிகள்
* கடத்தல்காரர்கள்
* நில அபகரிப்பாளர்கள்
* கல்வியறிவு இல்லாதவர்கள்
* ஏமாற்றுபவர்கள் என்ற மாதிரியான பிம்பங்கள் தொடர்ந்து உருவாக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

'Pandippada' முதல் 'Dridam' வரை
குறிப்பாக Pandippada திரைப்படத்தில் தமிழ் வில்லன் - மலையாள ஹீரோ என்ற கட்டமைப்பு பெரிதும் பேசப்பட்டது. அதில் கேரள மக்கள் புத்திசாலிகள், தமிழர்கள் ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்கள் என்ற அடிநாதம் இருப்பதாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
அதன்பிறகு வெளியான சில திரைப்படங்களிலும் தமிழர்கள் எதிர்மறையாகவே காட்டப்பட்டனர். இப்போது Dridam திரைப்படமும் அதே பாதையில் பயணிப்பதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் குவிந்து வருகின்றன.
தமிழர்கள்தான் கொள்ளையர்களா?
Dridam திரைப்படத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என காட்டப்படுவது பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. "கேரளாவில் குற்றவாளிகள் இல்லையா?, ஒரு கதைக்கு வில்லன் வேண்டும் என்றால் அவசியம் தமிழன்தான் வேண்டுமா?, ஏன் மீண்டும் மீண்டும் தமிழர்களை குற்றவாளிகளாகவே காட்டுகிறார்கள்? என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

அதிகரிக்கும் மீம்ஸ்
படத்தின் காட்சிகளை பகிர்ந்து பலரும் கலாய்த்து வருகின்றனர். ஒருவர், "மலையாள சினிமாவில் வில்லன் தேவைப்பட்டால் தமிழன்... ஹீரோ தேவைப்பட்டால் மலையாளி... இந்த ஃபார்முலா எப்போ மாறும்?" என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர், "தமிழர்களை வைத்து வில்லன் உருவாக்குறது பழைய டெம்ப்ளேட் பாஸ்... கொஞ்சம் அப்டேட் ஆகுங்க" என்று விமர்சித்துள்ளார். இந்த பதிவுகள் ஆயிரக்கணக்கான பகிர்வுகளை பெற்று வருகின்றன.
இன்றும் அதே நிலை
ஏனென்றால் இது 1990களோ 2000களோ இல்லை. இன்று தமிழ் நடிகர்கள் மலையாள படங்களில் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். மலையாள நடிகர்கள் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார்களாக கொண்டாடப்படுகிறார்கள். பகத் பாசில், துல்கர் சல்மான், பிரித்விராஜ், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் போன்ற பலரை தமிழ் ரசிகர்களே கொண்டாடி வருகின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட பழைய டெம்ப்ளேட்டை பயன்படுத்துவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்கள் தான் வில்லனா?
சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகும் சில கருத்துகள்: "கதை எழுத சிரமமா? தமிழனை வில்லன் ஆக்கிடு... மலையாளியை ஹீரோ ஆக்கிடு... இதுதான் இன்னும் சிலருடைய ஃபார்முலா!" "கேரளாவில் நடக்கும் குற்றத்துக்கும் தமிழன்தான் காரணமா?", "தமிழர்கள் இல்லாமல் சில படங்களுக்கு வில்லன் கிடைக்கவே மாட்டேங்குதோ?", "மொழி அடையாளத்தை வைத்து கதாபாத்திரங்களை உருவாக்குறது பழைய சினிமா. இப்போ பார்வையாளர்கள் அதைவிட வளர்ந்துட்டாங்க." என்று பலர் பதிவிட்டு வருகின்றனர்.

இனியாவது மாறுமா இந்த பிம்பம்?
ஒரு திரைப்படத்தில் தமிழன் வில்லனாக வரக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. அதேபோல் மலையாளி வில்லனாகவும் வரலாம். ஆனால் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே எதிர்மறையாக சித்தரிக்கும்போது அது கேள்விகளை உருவாக்குகிறது.
சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது மக்களைப் பற்றிய பிம்பங்களையும் உருவாக்குகிறது. அதனால்தான் தற்போது பலர், "கேரள ரசிகர்கள் தமிழ்ப் படங்களை கொண்டாடுகிறார்கள்... தமிழ் ரசிகர்கள் மலையாளப் படங்களை கொண்டாடுகிறார்கள்... ஆனால் சில இயக்குநர்கள் மட்டும் இன்னும் பழைய மனநிலையிலேயே இருக்கிறார்களா?" என்று கேள்வி வருகிறது.
ஒரு காலத்தில் இந்த மாதிரியான காட்சிகள் சாதாரணமாக கடந்து போயிருக்கலாம். ஆனால் இன்று சமூக வலைதள காலம். ஒவ்வொரு காட்சியும் ஆயிரக்கணக்கான மக்களால் விவாதிக்கப்படுகிறது. அதனால் தமிழர்களை திருடர்கள், ரவுடிகள், குற்றவாளிகள் என்ற ஒரே கோணத்தில் சித்தரிக்கும் பழைய சினிமா டெம்ப்ளேட்டை இனிமேலாவது கைவிட வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.
-
"கொலை மிரட்டல்... பாலியல் வன்கொடுமை மிரட்டல்... திரையுலகை அதிரவைத்த நடிகை பார்வதி பரபரப்பு பேச்சு -
வேடன் விவகாரம்... அமைச்சர் சந்திப்பால் மீண்டும் வெடித்த சர்ச்சை! சின்மயி கேள்விக்கு ரசிகர்கள் சொல்வது என்ன? -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
நந்தனாவை சேரில் இருந்து விரட்டி.. உடனே ராதிகா கும்பிட்டு.. பாரதிராஜா இறுதிச் சடங்கில் என்ன நடந்தது -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்














Click it and Unblock the Notifications