அம்பிகா, ராதாவுக்கு 5 ஏக்கர் அரசு நிலம்? மீனா சொத்துக்கு பாதுகாப்பு? துயரமாய் போன சாவித்ரி: பிரபலம்
சென்னை: பொருளாதாரத்தை கட்டமைக்கக்கூடிய வழிகள் சில நடிகைகளுக்கு தெரிவதில்லை.. இதனால் சிலர் வறுமையில் சிக்குகிறார்கள், மேலும் சிலர் பொருளாதார பாதுகாப்புக்காக அரசியலுக்குள் நுழைகிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். தற்போது நடிகை மீனா அரசியலுக்கு வருவது குறித்தும் கருத்து கூறியிருக்கிறார். இது சம்பந்தமான பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Fine Time Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாண்டியன், "மீனாவுக்கு மத்திய அமைச்சர் பதவி என்று பரப்பி விடுகிறார்கள்.. வேலை வெட்டி இல்லாதவர்கள், கண்டண்ட் இல்லாதவர்கள், பரபரப்புக்காக செய்திகளை வெளியிடுவோர், வேறு சிந்தனையே இல்லாதவர்கள்தான் இந்த மீனா செய்தியை பெரிதாக்கி கொண்டிருக்கிறார்கள்.. பாஜக என்றில்லை, எந்த கட்சியிலுமே ஒரு நடிகை மத்திய அமைச்சராக முடியாது.

அம்பிகா, ராதா
நடிகைகள் அம்பிகா, ராதா இருவரும் 80களில் கோலோச்சினார்கள்.. ராதாவின் மகள்களும் நடிக்க வந்துவிட்டார்கள்.. இது இயற்கையான விஷயம்.. இன்று அம்பிகா, ராதா இருவருக்குமே பல்லாயிரக்கணக்கான சொத்துக்கள் உண்டு.. எம்ஜிஆர் மரணப்படுக்கையில் இருந்தபோது, அம்பிகா, ராதா, அம்மா சரசம்மா இவர்கள் 3 பேரும் ஏவிஎம் ஸ்டுடியோ போல தாங்களும் ஒரு ஸ்டுடியோ கட்ட வேண்டும் என்றும், அதற்கான இடம் ஒதுக்கி தர வேண்டும் என்றும் கேட்டார்கள்.
அதற்காக 5 ஏக்கர் நிலம் இலவசமாக தரப்பட்டது.. அதுதான் ஏஆர்எஸ் கார்டன், ஏக்கரா 50 கோடிக்கு இன்று போகும். இதைக்கேள்விப்பட்ட பாரதிராஜா, நான்தானே இவர்களை அறிமுகப்படுத்தினேன் என்று சொல்லவும், அவருக்கும் 5 ஏக்கர் நிலம் தரப்பட்டது. பிறகு பாரதிராஜா அதனை ஒரு ஓட்டலுக்கு விற்றுவிட்டார்..
மீனாவின் சொத்துக்கள்
இப்படி நடிகைகளுக்கு பல்லாயிரக்கணக்கான சொத்துக்கள் உண்டு. இந்த சொத்துக்களை காப்பாற்ற அரசியல் பாதுகாப்பும் தேவைப்படுகிறது. மீனாவின் நிலைமையும் கிட்டத்தட்ட இப்படித்தான்..
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என மீனாவுக்கு நிறைய சொத்துக்கள் உண்டு.. சின்ன வயதிலேயே நடிக்க வந்துவிட்டார்.. இந்த சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய தேவையும் இருக்கிறது.. தொழிலதிபர்களால் பொருளாதார ரீதியான அழுத்தமும் மீனாவுக்கு உண்டு.
எல்லா சொத்துக்களையும் விற்றுவிட்டு, திருவனந்தபுரத்தில் அமைதியாக வாழ வேண்டும் என்று மீனா நினைத்தார். ஆனால், அனைத்து சொத்துக்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு விற்பதற்கு மீனாவால் முடியவில்லை என்பதால்தான், அரசியல் ஆதரவு தேவைப்படுகிறது" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
டாக்டர் காந்தராஜ்
சமீபத்தில் BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு தந்திருந்த டாக்டர் காந்தராஜ் பேட்டியில், "அம்பிகா, ராதாவுக்கு சென்னை போரூரில் எம்ஜிஆர் நிலத்தை வழங்கியது, பெரிய ரகளையாகிவிட்டது.. அதுதான் ஏஆர்எஸ் கார்டன்.. இத்தனைக்கும் அம்பிகா, ராதா இருவருமே எம்ஜிஆருடன் ஒரு படத்திலும் நடிக்கவில்லை..
தன்னுடைய ஊர்க்காரர்கள் என்று அரசு நிலத்தை தந்துவிட்டதாக மிகப்பெரிய விமர்சனத்துக்கு ஆளாகிவிட்டது. அதிலும் படுத்த படுக்கையில், அவர்களை கூப்பிட்டு தந்தார்.. எம்ஜிஆர் ஜானகி கல்லூரி இன்று உள்ளது.. 16 ஏக்கர் அரசு நிலத்தை அப்படியே தன்னுடைய பெயருக்கு மாற்றிக் கொண்டதும், கெட்ட பெயராகிவிட்டது..
சிஏஜி அறிக்கை
சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் என்ஜினியரிங் கல்லூரிகளை அனுமதி தந்து கட்ட வைத்தார் எம்ஜிஆர் என்றுதான் விமர்சனங்கள் பெருகின. ராமச்சந்திரா கல்லூரி, எம்ஜிஆர் ஜானகி கல்லூரி தொடர்பான வழக்குகள் இன்றும் நிலுவையில் உள்ளன.
பல நல்ல விஷயங்களை எம்ஜிஆர் செய்திருக்கிறார். ஆனால், வளர்ச்சி திட்டங்களைவிட கவர்ச்சியான உதவிகளையே அதிகம் செய்தார்.. இதைத்தானே சிஏஜி அறிக்கையாக தாக்கல் செய்தது" என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
தனித்து வாழ்வதில் சிக்கல்
அதேபோல, மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தந்திருந்த பேட்டியில், "100 கோடி, 500 கோடி சம்பாதித்தாலும், அதை நடிகைகள் பாதுகாப்பது என்பதுதான் இன்றைய மிகப்பெரிய சிக்கலே.. இந்த சொத்துக்களை பாதுகாக்கவே, நடிகர்களுக்கு, தயாரிப்பாளர்களுக்கு, 2வது, 3வது மனைவியாக திருமணம் செய்து கொள்ளவும் முனைகிறார்கள்.
மேலும், பெண்கள் தனியாக வாழ்வதில் சிக்கல் இன்றும் நம்முடைய சமுதாயத்தில் நிலவுகிறது. துணையில்லாத ஏக்கம் மட்டுமே ஆண்களுக்கு இருக்கும். ஆனால், பெண்களுக்கு அதையும் தாண்டி, பாதுகாப்பு பிரச்சனைகளும் சமுதாயத்தில் உள்ளது என்று கூறியிருந்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications