For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Pandian Stores Serial: ஏங்க.. முல்லைன்னு பேர் சொல்லி கூப்பிட்டா பிடிச்சுருக்குங்க!

Google Oneindia Tamil News

Recommended Video

    Pandian Stores Week In Short full episode | Kathir Mulla Romantic Song

    சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புருஷன் கதிர் தன்னை முல்லைன்னு பேர் சொல்லி கூப்பிட்டா அது தனக்கு ரொம்ப பிடிச்சு இருப்பதாக சொல்கிறாள். அப்போ இதுவரைக்கும் உன்னை நான் பேர் சொல்லிக் கூப்பிட்டது இல்லையான்னு கேட்கிறான் கதிர்.

    இல்லைங்க.. இந்தா.. ஏய் அப்படித்தான் கூப்பிடுவீக என்று சொல்கிறாள் முல்லை. ஓ..அப்படி கூப்பிட்டா உனக்கு புடிக்காது இல்லேன்னு சொல்றான் கதிர். இல்லைங்க அப்படி சொல்லலை.. பேர் சொல்லி கூப்பிடறது எனக்கு பிடிச்சு இருக்குன்னு சொன்னேன் என்று சொல்கிறாள் முல்லை.

    சரி, தண்ணி எடுத்துட்டு வரேன்னு முல்லை போக, நில்லு தண்ணி எங்கே போயிரும்.. உன்கிட்டே நான் பேசணும் என்று உட்கார சொல்கிறான் கதிர். என்னங்க சொல்லுங்க என்று அவன் அருகில் அமர்ந்துக்கொள்கிறாள் முல்லை.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப அமைப்பு

    பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப அமைப்பு

    பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப அமைப்பு மாதிரி எல்லார் குடும்பமும் இருந்துவிட்டால் நித்தம் நித்தம் மகிழ்ச்சிதான். சந்தோஷம்தான், குதூகலம்தான். ஒருவருக்கு ஒருவர் பாசமாக இருப்பது என்ன, ஒருத்தருக்கு இன்னொருத்தர் கட்டுப்படுவது என்ன...ஒருத்தர் கோபம் கொண்டாலும், மற்றவர்கள் டேக் இட் ஈஸி என்று புரிந்து நடந்துக்கொள்வது என்ன... தமிழக குடும்பங்கள் இப்படித்தான் இருந்தது.காலப் போக்கில் தனிக்குடித்தனம் அது இது என்று குடும்ப அமைப்பே மாறிவிட்டது துரதிர்ஷ்டம்தான்.

    போட்டோ கதை

    போட்டோ கதை

    முல்லையையும் கதிரையும் பாரதி கண்ணம்மா சீரியலின் அகிலன் போட்டோ எடுத்தாலும் எடுத்தான். அந்த போட்டோவை வச்சே பல காட்சிகள் ரொம்ப இதமா போரடிக்கமாத்தான் சென்று கொண்டு இருக்கிறது.முதலில் முல்லை போட்டோவை மட்டும் லேமினேஷன் செய்து எடுத்து வந்து அறையில் மாட்டும்போது ஒரு சுகமான நினைவு அதையே வீட்டில் பெரியவரான அண்ணண் முல்லை, கதிர் இருவர் இருக்கும் போட்டோவையும் பிரேம் செய்து வந்து நடுஹாலில் மாட்டும்போது ஒரு சுகமான நினைவு என்று காட்சிகள் மனதுக்கு ரொம்ப இதமாக இருக்கிறது.

    மாமனார் வீட்டுக்கு

    மாமனார் வீட்டுக்கு

    ஜீவாவை மாமனார் வீட்டுக்கு அழைப்பு விடுக்க, அன்றிலுருந்து ஜீவாவுக்கு மனது திக் திக்கென்று அடித்துக்கொள்கிறதாம். உங்களை எல்லாம் விட்டுட்டு நான் எப்படி மாமனார் வீட்டுக்கு போவேன். அங்கு போயி உங்களை விட்டுட்டு எப்படி இருப்பேன்னு முகத்தை உம்மென்று வச்சுக்கிட்டு, நான் போகலை என்று அடம் பிடிக்கிறான். என்ன வெளிநாட்டுக்கா போறே.. இதோ இருக்கும் உன் மாமனார் வீட்டுக்குதானேடா..போயிட்டு வந்துடு என்கிறார், போய்ட்டு வரதுன்னா பரவைல்லைண்ணே.. ரெண்டு நாள்னா எப்படிண்ணே என்று மீண்டும் முகத்தை தூக்கி வச்சுக்கறான். ரொம்ப பண்ணாதே ஜீவா என்று பொண்டாட்டி மீனா அலுத்துக்கறா.

    கோயில் விபூதி பிரசாதம்

    கோயில் விபூதி பிரசாதம்

    தனமும்,முல்லையும் கோயிலுக்கு போயிட்டு வர்றாங்க. அப்போ தனம் தனது புருஷனிடம் மட்டும் விபூதி எடுத்துக்கோங்க மாமான்னு சொல்லிட்டு, மற்றவர்கள் அதாவது கொழுந்தன்கள் எல்லாருக்கும் தானே விபூதியை பூசிவிடுவது நல்ல சீன்.எனக்கு என்று மீனா கேட்க, உனக்கும்தான் மீனா என்று தனம் மீனாவின் நெற்றியிலும் விபூதி வைத்து விடுகிறாள். இன்றும் பல வீடுகளில் இந்த நடைமுறை உள்ளது. அத்தோடு படுக்கைக்குப் போகும்போது பாட்டியா இருப்பவங்க, அல்லது தாத்தாவா இருக்கறவங்க வீட்டில் இருக்கும் அனைவருக்கும் விபூதி வைத்து படுக்கைக்கு அனுப்பி வைப்பார்கள்.

    English summary
    Pandian Stores Family Structure Model All the family is happy for the time being. Happiness is good. What is affectionate to one another, what is restricted to one another ... One is angry but others understand that it is easy ... Tamil families are like that.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X