Naam Iruvar Namakku Iruvar Serial: நீங்க சொல்றது புரியலை.. ஆனா, கையை மட்டும்...?
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் தேவி பேசறது புரியலையாம் . ஆனா, அவ தன் கன்னத்துல ஒரு கையை வச்சு இருந்தா இன்னொரு கையை மட்டும் எடுத்து இன்னொரு கன்னத்துல வச்சுக்கத் தெரியுதா மாயன்?
மாயனும் தேவியும் நெருங்கி வரும் தருணம் இது. மாயனின் தங்கை கல்யாணத்துக்காக இருவரும் வெயிட்டிங்
ஆனால், இன்னொரு கதாபாத்திரமான அரவிந்தை தாமரைதான் இன்னும் ஏத்துக்காமா இருக்கா. அரவிந்த் பேசிப் பேசி தாமரை மனதை மற்ற முயற்சி செய்துகிட்டு வர்றான்.
மாயனை பருகி
தேவி பார்வையே இன்னிக்கு வித்தியாசமா இருக்க.. மாயன் கொஞ்சம் பேச்சு வந்தும் வராதவனாக என்னங்க.. அப்படி பார்க்கறீங்கன்னு அவனுக்கே கேட்காதபடி கேட்கிறான். தேவி பார்வையால் அவனை பருகுவது போல பார்க்கிறாள்.
இன்னொரு கையையும்
தேவி மாயனின் கன்னத்தில் ஒரு கையை வைக்கிறாள். இன்பத்தில் உறைந்து போன மாயன், அப்போதும் சுதாகரித்து அவளின் இன்னொரு கையையும் எடுத்து தனது இன்னொரு கன்னத்தில் வச்சுக்கறான். கூடவே இல்ல.. இந்த கை சும்மா இருக்கேன்னுதான்னு சொல்லிக்கறான்.
தாமரை மலராய்
தேவி மாயன் முகத்தை தாமரை மலராய் கையில் ஏந்தி கண்ணோடு கண் பார்க்கிறாள். என்னங்க வழக்கமா நான்தான் உங்க கன்னத்தை இப்படி தடவுவேன். இன்னிக்கு என்ன நீங்க புதுசான்னு அவன் பிரேக் ஆகி பிரேக் ஆகி பேச..தேவி ஒரு கையை எடுத்து விடுகிறாள்.
முட்டாளுக்கும் நல்லவனுக்கும்
நல்லவனுக்கும் முட்டாளுக்கும் நூலிலிழைதான் வித்தியாசம். ஒரு செகண்ட் அசந்தால் நல்லவனை முட்டாளாக்கிருவாங்கன்னு தேவி சொல்றா. என்னவோ சொல்றீங்க.. எனக்கு எதுவும் புரியலீங்கன்னு சொல்றான் மாயன்.