சொந்த ஊருக்கு கூட போக முடியலையே.. நீயா நானாவில் கதறிய நபர்.. இனி நிலைமை மாறுமா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் வரவு எட்டணா செலவு பத்தணா என்று தலைப்பில் விவாதம் நடந்தது.
அதில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருந்த விலைக்கும் இப்போது இருக்கும் நிலையை பார்த்து நீங்கள் மிரண்டு போனது என்ன என்று கோபிநாத் கேள்வி கேட்டிருந்தார்.

அதில் பலர் சில வருடங்களுக்கு முன்பு இருந்த விலைக்கும் இப்போது இருக்கும் வித்தியாசத்தை கூறிக் கொண்டிருக்கையில் ஒரு நபர் தன்னுடைய சொந்த ஊருக்கு போவதற்கு போக்குவரத்து செலவு அதிகரித்திருப்பது பற்றி பேசி இருக்கிறார்.
நீயா நானா நிகழ்ச்சியில் அடிப்படை வாழ்க்கையில் என்ன மாதிரி பிரச்சனை எல்லாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோமோ அந்த மாதிரியான தலைப்புகளில் விவாதங்கள் நடத்தப்படுவது வாடிக்கைதான். அந்த வகையில் இந்த வாரமும் வரவு எட்டணா செலவு பத்தணா என்ற தலைப்பில் விவாதம் வைத்து விலை ஏற்றத்தால் செலவு அதிகம் ஆகிறதா? அல்லது வருமானத்தை மீறி மக்கள் செலவு செய்கிறார்களா? என்ற அடிப்படையில் விவாதம் நடைபெற்றது.

அதற்கு ஒரு தரப்பினர் சில வருடங்களுக்கு முன்பு இருந்த விலை இப்போது பல மடங்கு அதிகரித்து விட்டது. அதனால் நடுத்தர வர்க்கத்து மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருக்கையில் செலவுகளை குறைத்துக் கொள்ளம் வேண்டும் என்ற எதிர் அணியில் இருந்த பலர் மேல் தட்டு மக்களின் மனநிலையிலேயே பதில் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
இந்த விவாதம் சுவாரசியமாக போய்க் கொண்டிருந்த நிலையில் கோபிநாத் நீங்கள் இப்போது உள்ள விலையேற்றத்தை பார்த்து மலைத்துப் போன விஷயம் என்றால் என்ன என்று கேட்க, அதில் ஒரு பிரபலம் எல்லாருக்கும் தெரிந்ததுதான் சில வாரங்களுக்கு முன்பு இருந்த தக்காளி விலை இப்போது எப்படி இருக்கிறது? என்று உங்கள் எல்லாருக்குமே தெரியும் என்று சொல்ல, அதை தொடர்ந்து இன்னொரு நபர் ஆமாம் நான் சில வாரங்களுக்கு முன்பு வாங்கிய மருந்து பொருட்கள் கூட பத்து ரூபாயில் இருந்தது.

அடுத்த வாரம் வாங்கும் போது 17 ரூபாய் ஆகிவிடுகிறது என்று கூறுகிறார்.அதைத்தொடர்ந்து இன்னொரு பெண் சில வாரங்களுக்கு முன்பு சீயக்காய் மூன்று ரூபாயில் இருந்தது கூட இப்போது ₹4 ஆகிவிட்டது. இதெல்லாம் அடிப்படை சின்ன விஷயமாகத்தான் தெரியும். ஆனால் இதுவும் எங்களுக்கு கஷ்டமாக தானே இருக்கிறது என்று சொல்கிறார்.
அதை தொடர்ந்து இன்னொரு நபர் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு முன்பு செல்லும்போது இருந்த தொகைக்கும் இப்போது இருக்கும் போக்குவரத்து செலவுக்கும் அதிக அளவில் டிஃபரண்ட் வந்து விட்டது என்று சொல்கிறார். இப்படியே போனால் சொந்த ஊருக்கு கூட போக முடியாது போல என்றும் அவர் வருத்தத்தை தெரிவிக்க, இதைத்தான் நாங்களும் அனுபவிக்கிறோம் என்று பல ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
எல்லாரும் மன்னிச்சிருங்க.. வாழ்க்கையில் நடந்த சோகம்! உருக்கமாக பேசிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி -
விஜய் சேதுபதி இவ்வளவு ஓபனா பேசுவாருன்னு நினைக்கலையே! வெடவெடுத்து போன VJ பார்வதி! அடுத்த பஞ்சாயத்து -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
சிறகடிக்க ஆசை அப்டேட்: நிஜ கேரக்டரை காட்டிய சைக்கோ அருண்.. முத்துவால் உடைந்த உண்மை.. விஜயாவுக்கு ஆப்பு -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
சிறகடிக்க ஆசை: போலி சாமியார் பற்றி உண்மையை நிரூபித்த முத்து! விஜயாக்கு தெரிய வந்த இன்னொரு உண்மை! செம சம்பவம் -
“ஏ.ஆர். ரஹ்மானுக்கே இந்த நிலைமை என்றால், எனக்கு..? ‘கருப்பு’ படத்தில் நடந்த அதிர்ச்சி அனுபவம்! நடிகை ஆனந்தி ஓபன்! -
Youth OTT: ஓடிடியில் வெளியாகும் யூத் படம்! எப்போ, எதில் பார்க்கலாம்? கென் கருணாஸ் ரசிகர்களுக்கு குட் நியூஸ் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications