நீயா நானாவில் ஏற்பட்ட பரபரப்பு.. உண்மை மாதிரி இல்லை என கோபிநாத் முகத்துக்கு நேரா பேசிய பெண்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் ஏப்ரல் 30ஆம் தேதிக்கான 2வது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இந்த வாரம் எபிசோட்டின் ஆன்லைன் காதல் அழகானது என்றும் ஆன்லைன் காதல்கள் சரிவராது என்று இரு தரப்பினர் பேசியிருக்கின்றனர்.

அதில் ஒரு பெண் ஆன்லைன் காதல் செய்தவர்கள் குறித்து இது உண்மை மாதிரி இல்லை என முகத்துக்கு நேராக பேசியிருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் சுவாரஸ்யமான தலைப்பில் விவாதம் நடைபெற இருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் ஆன்லைன் காதல் அழகானதா அல்லது அது சரி வராது என்றும் இருதரப்பு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆன்லைன் மூலமாக பலர் கடல் கடந்து காதல் செய்து சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். அதே ஆன்லைன் மூலமாக பலர் தங்களுடைய வாழ்க்கைகளை இழந்து பொன்னான உயிரை துறந்தவர்களும் இருக்க தான் செய்கிறார்கள். தினமும் செய்திகளில் நாம் கேட்கும் அதிகமான வார்த்தைகளில் ஒன்றாக இந்த ஆன்லைன் இருந்து வருகிறது. இந்த ஆன்லைனால் உலகத்தில் பல பிரச்சனைகள் நடந்து கொண்டிருப்பது இந்த வார நீயா நானாவில் விவாதத்தில் இருக்கிறார்கள்.
பொதுவாக ஆன்லைனில் உண்மையாக இருப்பவர்களும் இருக்கிறார்கள்.பொய்யான முகத்திரையில் ஒளிந்து கொண்டு சூழ்ச்சி செய்பவர்களும் இருக்கிறார்கள். உண்மையாக இருப்பவர்கள் பலர் சூழ்ச்சி செல்பவர்களிடம் மாட்டிக்கொண்டு இருப்பது பற்றி தினமும் நாம் கேள்விப்படும் ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் ஆன்லைன் காதல் அழகானது என ஒரு தம்பதி பேசியிருக்கிறார்கள்.
அதில் ஒரு பெண் நான் ஒரு பெங்காலி எங்களுக்கு இடையில் ரிலேஷன்ஷிப் வந்து எட்டு வருடம் ஆகிறது. பிறகு எங்களுக்கு கல்யாணம் ஆகி 5 வருடம் ஆகிறது என்று கூறுகிறார். அதைத் தொடர்ந்து இன்னொரு ஆண் என்னுடைய மனைவிக்கு ஊரு ஸ்ரீலங்கா நாங்க பேச ஆரம்பித்தோம்.

அதற்கு பிறகு பிடித்துப் போனது என்று சொல்ல, அதற்கு அவருடைய மனைவி அவர் பேசுறது எல்லாம் உண்மையாக இருந்தது. அதனால ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தது. கல்யாணம் பண்ணனும்னு தெரியாது என்று தன்னுடைய கதையும் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருக்கிறார்.
அதற்கு எதிர் தரப்பில் ஆன்லைன் காதல் ஆபத்து என்று சொல்லும் அணியில் இருந்த ஒரு பெண் ஆன்லைனில் பார்த்து மேரேஜ் பண்ணுறவங்க எல்லாம் உண்மை கிடையாது. அது பாக்குறதுக்கு உண்மை போல இல்லை என்று கூறுகிறார். தற்போது இந்த பிரமோ வைரலாகி வருகிறது.
இதற்கு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் கடந்த வார எபிசோடில் ஒரு அப்பா சொன்ன வார்த்தை இந்த எபிசோட்டுக்கு நினைவு வருகிறது. அது நிஜ ரோஜாக்கு சமமாக ஆயிரம் கோடி பிளாஸ்டிக் மலர்கள் வைத்ததாலும் நிஜத்தில் ஈடாகாது என்று சொன்னது என கூறி இருக்கிறார். அதுபோல இன்னும் பலர் ஆன்லைன்ல செத்தவன் லிஸ்ட் பெருசா போகும் என்று கிண்டல் செய்திருக்கிறார். இப்படியாக பல கருத்துக்கள் குவிந்து வருகிறது.
-
சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் ஏமாந்து நிற்கும் சீரியல் நடிகை.. கதறி அழுது வெளியிட்ட வீடியோ! வெளிவந்த ரகசியங்கள் -
பரிதாப நிலையில் “எங்கேயும் காதல்” பட பாடகர்.. கேபிஒய் பாலா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ.. கலங்க வைத்த காட்சி -
நீயா நானாவில் யாமினி சொன்ன காதல் கதை.. கண்கலங்கி நின்ற கோபி நாத்.. கடைசியில் சொன்ன ‘நச்’ அட்வைஸ் -
சூப்பர் சிங்கர் அருணா கல்யாணத்தில் சுவாரசியம்! ஒன்று சேர்ந்த விஜய் டிவி பிரபலங்கள்.. அதுவும் யாரெல்லாம்னு பாருங்க -
இதுவும் கடந்து போகும்.. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் மறுபக்கம்.. நீயா நானாவில் கண் கலங்கிய அம்மா -
சித்திரை திருநாளில் கிடைத்த பரிசு.. இரண்டு வருடம் கழித்து பிறந்த குழந்தை.. பிரதீப் ஆண்டனி நெகிழ்ச்சி பதிவு -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி போட்ட பிளான்.. செக் வைத்த ரோகிணி! அடித்து விரட்டிய மீனா! சந்தோஷத்தில் முத்து -
திவாகருக்குள் தான் ஜாதி வெறி இருக்கு.. குக் வித் கோமாளியில் நடந்தது இதுதான்! கானா வினோத் ஆதங்கம் -
“குக் வித் கோமாளி” போட்டியாளர் மனைவியிடம் திவாகர் ஆபாசமாக அப்படி பேசினாரு! அதனால் தான் பிரச்சனை! மாகாபா விளக்கம் -
சிறகடிக்க ஆசை: மனோஜ்க்கு நடந்த நிச்சயதார்த்தம்.. விஜயாவை சிக்க வைத்த ஸ்ருதி.. முத்துக்கு தெரிந்த விஷயம் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா












Click it and Unblock the Notifications