Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீயா நானா: ஒழுக்கமா பிள்ளை வளர்த்துட்டு வந்து பேச வாங்க... பெண்ணை சாடிய கோபிநாத்.. அதிர்ந்த அரங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் அக்டோபர் 22ஆம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

இதில் இந்த வாரம் சொந்தத்திற்குள் திருமணம் செய்வதை எதிர்க்கிறேன் என்றும் சொந்தத்திற்குள் திருமணம் செய்வதை ஆதரிக்கிறேன் என்றும் இரண்டு தரப்பினர்கள் விவாதிக்கின்றனர்.

Neeya Naana Show October 22th Promo 4 and fans reaction

அதில் நான்காவது ப்ரோமோவில் ஒரு பெண்ணிடம் கோபிநாத் சண்டை போடுவது போன்று பேசி இருக்கிறார். இது வைரலாகி வருகிறது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் நீயா நானா நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை பற்றியதாகவே விவாதங்கள் இருந்து வருகிறது. அந்த வரிசையில் இந்த வாரம் சொந்தத்திற்குள் திருமணம் செய்வதை எதிர்க்கிறேன் VS சொந்தத்திற்குள் திருமணம் செய்வதை ஆதரிக்கிறேன் என்று இரு அணியாக பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

நீயா நானா: நீ மட்டும் தான் இந்தியனா? கோபிநாத் முன்பு கோபத்தில் கிரிக்கெட் பிரபலம்
அதில் பலர் தங்களுடைய கருத்துக்களை கூறிக் கொண்டிருக்கின்றனர். அப்போது சொந்தத்துக்குள் என்னுடைய அத்தை பையனையோ அல்லது மாமா பையனையோ நான் கல்யாணம் பண்ணி இருந்தால் என்னுடைய அம்மா வந்து என் கூடவே தங்கலாம் என்று ஒரு பெண் தன்னுடைய ஆசையை சொல்கிறார். அதற்கு எதிர் தரப்பில் இருக்கும் பெண் புதுசா வெளியில் திருமணம் செய்யும்போது புதிய சொந்தங்கள் நமக்கு கிடைக்கும் என்று சொல்கிறார்.

அதை தொடர்ந்து சொந்தத்துக்குள் திருமணம் செய்ய வேண்டும் என்ற அணியில் இருந்து ஒரு ஆண் சொந்த மாமா தாய் மாமா வீட்டுல இருக்கிற உரிமை எனக்கு வெளியே எங்க போனாலும் கிடைக்காது என்று கூறுகிறார்.இப்படியாக பல பேர் பல கருத்துக்களை கூறிக் கொண்டிருக்கின்றனர்.

அதை தொடர்ந்து இன்னொரு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கோபிநாத் தனக்கே உரிய நக்கல் நையாண்டித்தனத்தோடு பேசி இருக்கிறார். அப்போது அங்கு இருக்கும் ரோஸ் கலர் புடவை கட்டிய பெண் ஒருவரிடம் கோபிநாத், ரொம்ப டாக்ஸியான பொண்ணு எப்ப பாரு அடம் பிடித்துக் கொண்டே இருக்கும். சந்தேகப்படுது, பாத்திரத்தை தூக்கி போட்டு உடைக்கிறது... அந்தப் பொண்ணு நான் தான்.

அப்போ வசந்தி அத்தை பஞ்சாயத்துக்கு வாராங்க என்று சொல்ல, அங்கு இருக்கும் இன்னொரு ரோஸ் கலர் புடவை கட்டிய பெண், என்னம்மா சொல்லுற பேச்சை கேட்டுகிட்டு இருக்க மாட்டியா? என்று கோபிநாத்திடம் கேட்க, அதற்கு கோபிநாத் அந்த பெண்ணிடம் உங்க வேலைய பாத்துட்டு போங்க, உங்க பேச்சை எதுக்குங்க கேட்கணும் என்று சொல்ல,

Neeya Naana Show October 22th Promo 4 and fans reaction

அந்த நேரத்தில் முதலில் கோபிநாத் பேசிய ரோஸ் கலர் புடவை கட்டிய பெண் கோபிநாத் பேசிக் கொண்டிருக்கும்போது இடையில், அது அசலில் பெண்ணு எடுத்தால் இருக்கும் என்று பேச போக அந்த பெண்ணை பேசவிடாமல் கோபிநாத் உங்க வீட்டு பொண்ணுனா? யாரும் அப்படி வச்சுக்க மாட்டாங்களா? நீங்க முதல்ல ஒழுக்கமா புள்ளை வளர்த்துட்டு வந்து பேச வாங்க என்று குழாய் அடியில் சண்டை போடுவது போன்று பேசிக் கொண்டிருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது அதே நேரத்தில் கோபிநாத்தா இப்படி எல்லாம் பேசுறது. தொகுப்பாளர் என்று பார்த்தால் இவர் போட்டியாளர்களிடம் இப்படி மல்லுக்கு நிற்கிறாரே என்று கேள்விகள் குவிந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+