கண் கலங்க வைத்த நீயா நானா.. இது பலருக்கும் பாடம்.. கடந்து வந்த வலி, கோபிநாத்தை மிரட்டி விட்ட அம்மா!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி எப்போதுமே சிந்திக்க வைக்கும் தலைப்புகளுக்காக பிரபலமானது. ஆனால் இந்த வார எபிசோடு, பலரையும் நேராக மனசுக்குள் தொட்டது என்று சொல்லலாம். இந்த வார தலைப்பு "காதல் பிரேக்கப்பால் வலியை அனுபவித்தவர்கள்... அதை கடந்து வர அவர்களுக்காக குடும்பம் பட்ட கஷ்டம்". ஸ்டேஜ்ல பேசின ஒவ்வொருவரின் கதையும், அதை பார்த்தவர்களுக்கும் அவர்களோட பழைய நினைவுகளை மீண்டும் கொண்டு வந்த மாதிரி இருந்தது.

தவறான புரிதல்
ஒரு பெண் பேசும்போது சொன்ன கதை பலரையும் உருக்கியது. "நாங்க 8 வருடமா காதலிச்சோம். ஆரம்பத்துல நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருந்தது. நான் எப்போதும் சப்போர்ட் பண்ணுவேன். ஆனா வீட்டிலிருந்து கல்யாணம், லைஃப் செட்டில் ஆகணும் என்று பிரஷர் வந்துச்சு. அதை நான் அவங்கிட்ட சொன்னேன்."
அந்த நேரத்தில் அந்த பையன் படிப்பு முடிச்சு வேலை தேடி கொண்டிருந்தாராம். ஆனா அவ்வளவு சீக்கிரம் செட்டில் ஆக முடியாத நிலை. "ஒருநாள் எனக்கு வேலை கிடைச்சுச்சு என்று சொன்னார். நான் அப்பாயின்மென்ட் லெட்டர் பார்க்கணும்னு ஆசைப்பட்டு, அதை போட்டோ எடுத்துக்காட்ட சொன்னேன். ஆனா அதை அவர் தவறாக எடுத்துக்கிட்டார். 'அதை காட்டினா தான் நீ என்னை காதலிப்பியா?'ன்னு கேட்டார்... அதுவே பிரேக்கப்பாக மாறிடுச்சு" என்று அந்த பெண் கண்ணீர் மல்க சொன்னார்.
அதற்குப் பிறகு அந்த பையன் வேற எங்கேஜ்மென்ட், கல்யாணம் எல்லாம் ஆகிவிட்டதாம். "அவர் திரும்பி வருவார் என்று நான் ரொம்ப நம்பினேன்... அந்த வலியிலிருந்து வெளியே வர ரொம்ப கஷ்டப்பட்டேன்" என்றார்.
அம்மாவின் ஆறுதல்
அந்த பெண் தொடர்ந்து, "அந்த நேரத்தில் என்னோட அம்மா தான் என்னை காப்பாத்தினாங்க. எல்லோருடைய வீட்டில் மாதிரி திட்டவே இல்ல. 'உனக்கு நாங்க இருக்கோம்... நீ தான் எங்களுக்கு முக்கியம்'ன்னு சொல்லி புரிய வைத்தாங்க" என்றார்.
அம்மா முன்னாடி அழ கூட முடியாத அந்த நிலை... ஆனால் ஒரு கட்டத்தில், அம்மா-அப்பா எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்னு புரிஞ்சதுக்குப் பிறகு தான், மெதுவா அந்த வலியிலிருந்து வெளியே வர ஆரம்பிச்சேன் என்று சொன்னது, பலரையும் சோகமாக்கியது.
இன்னொரு கதை
அதேபோல் ஒரு இளைஞன் பேசும்போது, "நான் படிப்பு, வசதி குறைவா இருக்கேன் என்று சொல்லி நான் லவ் பண்ண பொண்ணு என்னை விட்டுட்டாங்க. அந்த வலியிலிருந்து வெளியே வர ரொம்ப கஷ்டப்பட்டேன்" என்றார். அந்த நேரத்தில் அவருக்கு துணையாக இருந்தது குடும்பம்தான் என்றார்.
அதை கேட்ட கோபிநாத், அவருடைய அம்மாவிடம் "உங்க பையனை எப்படி மீட்டீங்க?" என்று கேட்டார். அதற்கு அவர் அம்மா சொன்னது இன்னும் அதிகம் உருக்கியது, "நாங்க அவன்கிட்ட எப்போதுமே ஆறுதலா பேசுவோம். அவன் சாப்பிடலனா நானும் சாப்பிட மாட்டேன். அவன் கஷ்டப்படுறதை பார்த்தா நானே அழுவேன்... அப்படித்தான் மெதுவா அவன் திரும்பி வந்தான்" என்றார்.
அம்மாவின் லவ்
மற்றொரு பெண் பேசும்போது, அவங்க அம்மா சொன்ன ஒரு டயலாக் ஸ்டூடியோவையே சிரிக்க வைத்தது. "என் பொண்ணு இவ்வளவு கஷ்டப்படுறத பார்க்க முடியல... நீ சொல்லு, அந்த பையன நான் போய் தூக்கிட்டு வர்றேன். அவனை தூக்குற அளவுக்கு எனக்கு இன்னும் தெம்பு இருக்கு!" என்று கெத்தா சொன்னார். அதை கேட்ட அந்த பெண்ணே சிரிச்சுட்டாராம்.
பலரின் வாழ்க்கை
இந்த வார 'நீயா நானா' எபிசோடு, சாதாரண விவாதமா இல்ல. ஒவ்வொருவரோட வாழ்க்கை கதைகள் பேசப்பட்ட ஒரு உணர்ச்சி நிறைந்த மேடையாக இருந்தது. காதல் பிரேக்கப் வலி எல்லாருக்கும் இருக்கும்... ஆனா அந்த வலியிலிருந்து வெளியே கொண்டு வர்றது பெரும்பாலும் குடும்பமும் நண்பர்களும் தான் என்பதைக் கொஞ்சம் கூட மறக்க முடியாத மாதிரி இந்த எபிசோடு நினைவுபடுத்தியது.
-
விஜயிடம் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி எடுத்திருக்கிறேன்.. அதில் அவர் சொன்ன விஷயம் இதுதான்! ஓபனாக உடைத்த கோபிநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
கொலை மிரட்டல் விடுறாங்க.. பயமா இருக்கு.. கமிஷனர் ஆபீஸில் பதறிய வாட்டர் மெலன் திவாகர்! -
சிறகடிக்க ஆசை சீரியல் அணிலா ஸ்ரீகுமாருக்கு 3வது கல்யாணம்.. குழந்தைகள் முன்பே நடந்த சம்பவம்! குவியும் வாழ்த்து -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
சிறகடிக்க ஆசை: எலக்ஷனில் ஜெயித்த மீனா.. பிறகு நடந்த எதிர்பாராத சம்பவம்! மனம் மாறும் விஜயா.. சிந்தாமணியின் பிளான் -
ராத்திரி நேரத்து பூஜையில்.. விஜய் டிவி நிகழ்ச்சியில் டிஸ்கோ சாந்தி போட்ட டான்ஸ்! அசந்து போன ரம்பா! -
பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்: முத்துவேல் பற்றி தெரிய வந்த பெரிய உண்மை.. அதிர்ச்சியில் கதிர்! உடையும் குடும்பம் -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா!














Click it and Unblock the Notifications