நெஞ்சத்தை கிள்ளாதே : பாட்டி கொடுத்த அறிவுரை.. சகுந்தலாவுக்கு காத்திருந்த ஷாக் - இன்றைய எபிசோட்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நெஞ்சத்தை கிள்ளாதே. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாட்டி உன்கிட்ட பேசணும் வா என்று மதுமிதாவை கூப்பிட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, பாட்டி மரியாதை இல்லாமல் வா போ என்று கூப்பிடுவதை பார்த்து மதுமிதா ஷாக் ஆகிறாள். உன் புருஷனை கூப்பிடு என்று சொல்ல மதுமிதா கௌதம் என்று பெயரை சொல்லி கூப்பிடுகிறாள். அவன் எவ்வளவு பெரிய ஆளு, மரியாதையை கொடுக்காமல் பேசாதே.. உனக்கு அது புரியனும்னு தான் அப்படி கூப்பிட்டேன் என்று சொல்கிறார்.

இதை தொடர்ந்து மாயாவும், ஜீவாவும் சென்னை வந்து இறங்க ஜீவா வீட்டிற்கு கூப்பிட மாயா முதலில் எங்க வீட்டிற்கு தான் போகணும் என்று சொல்லி ஜீவாவுடன் வீட்டிற்கு வருகிறாள். அவளை பார்த்ததும் பாட்டி இந்த வீட்டிற்கு எதுக்கு டி வந்த என்று கோபப்படுகிறார்.

கௌதம் மாயாவுக்கு சப்போர்ட் செய்து பேச மாயா மன்னிப்பு கேட்க பாட்டி உள்ளே கூப்பிடுகிறார். அதன் பிறகு எல்லாரும் சாப்பிட உட்கார மது நான் பரிமாறுகிறேன் என்று சொல்ல பாட்டி நீ உட்காரு. இதையெல்லாம் செய்ய வேலைக்காரர்கள் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்.

அடுத்து வேலைக்காரர்கள் பரிமாற அவர்களை நிறுத்த சொல்லிய பாட்டி மருமகளுக்கு நீ தானே பரிமாறனும் என்று சொல்லி பரிமாற வைக்க எல்லாம் இன்னைக்கு ஒரு நாளைக்கு தான் டி என்று வன்மத்துடன் பரிமாறுகிறாள் சகுந்தலா. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.












Click it and Unblock the Notifications