செய்தி வாசிக்கும் போது என்னை பாதித்த சம்பவம்.. தீயில் கருகிய குழந்தைகள்! ஸ்ரீவித்யா சங்கர் எமோஷனல்
சென்னை: நடிகையாகவும் செய்தி வாசிப்பாளராகவும் இருக்கும் ஸ்ரீ வித்யா சங்கர் தான் செய்தி வாசிக்கும் போது மறக்க முடியாத அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.
பல நாடுகளிலும் சின்ன சின்ன ஊர்களிலும் நடக்கும் விஷயங்கள் செய்தி சேனல்களின் வழியாகத்தான் எல்லோருக்கும் தெரியவரும். அந்த செய்தி சேனல்களில் செய்திகள் வாசிக்கும் போது என்னதான் தனக்குள் இருக்கும் கவலைகளையும் சந்தோஷங்களையும் வெளியே முகத்தில் காட்டிக் கொள்ளாமல் ஒரே விதமான ரியாக்சனோடுதான் வாசிக்க வேண்டும்.

அதில் சின்ன பிழை செய்தால் கூட அதைப் பார்க்கும், கேட்கும் ரசிகர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு விடும். அதனாலேயே செய்தி வாசிக்கும்போது அவர்களுக்குள் எந்த சிந்தனைகளும் கலக்கங்களும் ஏற்படாமல் தான் செய்தி வாசிப்பாளர்கள் வாசிக்கிறார்கள். ஆனால் சில செய்திகள் படிக்கும் போது அவர்களையும் மீறி அவர்களுக்குள் ஒருவித அழுத்தம் சோகம் வருகிறது என்று செய்தி வாசிப்பாளர் ஸ்ரீவித்யா சங்கர் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
ஸ்ரீவித்யா சங்கர் கலைஞர் டிவியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆனார். அதற்கு பிறகு பல சேனல்களில் செய்தி வாசிப்பாளராக இருந்திருக்கிறார். அதோடு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களில் பல சீரியல்களிலும் வில்லியாகவும், பாசிட்டிவ் கேரக்டரிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் தான் செய்தி வாசித்துக் கொண்டிருக்கும் போது என்னுடைய மனதை பாதித்த விஷயம் என்றால் அது கும்பகோணம் பள்ளியில் நடந்த தீ விபத்து என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.

மகன்களுக்காக பொறுமையாக இருக்கிறேன்! பாடகியுடன் தொடர்பா? வெளிப்படையாக பேசிய ஜெயம் ரவி
அந்த விபத்து பற்றி நான் வாசித்தது தான் என்னால் மறக்கவே முடியாது. செய்தி வாசித்துக் கொண்டிருக்கும் போது அந்த செய்தி மற்றும் அந்த குழந்தைகளின் புகைப்படங்கள், வீடியோக்களை பார்க்கும்போது என்னை அறியாமல் எனக்குள் கண்ணீர் மல்கி விட்டது.
அந்த வீடியோக்களில் குழந்தைகள் நெருப்பில் எரிந்து கரிக்கட்டையாக இருந்ததை பார்த்து அழுதுவிட்டேன். எமோஷனல் முகத்தில் காட்டக்கூடாது என்பதற்காக கஷ்டப்பட்டு நான் பேசினேன். ஆனால் அதைப் பேசி முடித்ததும் எனக்கு ரொம்ப நேரம் எதுவும் பேச முடியாமல் இருந்தது. அதுபோல நீ செய்தி வாசிப்பாளராக இருக்கும்போது நமக்கு பிடித்த தலைவர்கள், உறவினர்கள் யாராவது பற்றி செய்திகளில் படிக்கும் போது அதுவும் நமக்கு ஒரு தயக்கத்தையும், நடுக்கத்தையும் ஏற்படுத்திவிடும்.

அதையெல்லாம் தாண்டி தான் நாம் செய்திகளை மக்களுக்கு புரிகிற மாதிரி படிக்கனும். இப்போது இருக்கிற அட்வான்ஸ் எல்லாம் அப்போது கிடையாது. அதனால் நாம் எந்த இடத்திலும் தவறு செய்யாமல் செய்தியை சரியாக வாசித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று அந்த பேட்டியில் ஸ்ரீவித்யா சங்கர் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications