Kalyana Veedu Serial: இவ்ளோ ரணகளத்திலும் கல்யாண வீடு குதூகலம்!
சென்னை: கோவிட் 19 தொற்றால் நாடெங்கும் லாக்டவுன் என்றாலும் சன் டிவியின் கல்யாண வீடு சீரியல் மட்டும் இன்னும் காட்சிகள் விறு விறுவென்றும், கலகலப்புடனும் சென்றுக்கொண்டு இருக்கிறது.
எவ்வளவு எபிசோட் ஷூட் செய்து ரிசர்வில் வைத்து இருந்தார்களோ.. முன் எச்சரிக்கை நடவடிக்கை என்பது போல இன்னும் காட்சிகள் இழுவை இல்லாமல், ஒரு ஃபிளாஷ்பேக் என்று இல்லாமல் எபிசோட் சுறுசுறுப்பாக நகர்கிறது.
கல்யாண வீடு சீரியலில் இந்த நேரத்திலும் அவுட்டோர் காட்சிகள் நிறைய என்று ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த ஒரு மாதமாகவே கல்யாண வீடு சீரியலில் அவுட்டோர் காட்சிகள் நிறைய இருக்கின்றன,

உடனடி தீர்வு
திருமுருகன் ஸ்பெஷல் என்று சீரியலில் இழுவை இருக்காது என்பதை சொல்லலாம். ஒரு முடிச்சு வைத்து உடனுக்குடன் அதற்கு தீர்வும் வைத்து, வேறு முடிச்சுடன் சீரியலை பயணிக்க வைப்பதில் திருமுருகன் ஒரு கைத்தேர்ந்த இயக்குநர். அதை அவர் இந்த சீரியலில் முழுவதுமாக கையாண்டு இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

டிக்டாக் விபரீதம்
டிக்டாக் விபரீதம் என்று ஒரு நடுத்தர வயது பெண், ஒரு கல்லூரி மாணவி என்று இருவரையும் அதில் சிக்க வைத்து, நடுத்தர வயதுப் பெண்ணின் விபரீதத்துக்கு உடனடியாக தீர்வும் கண்டு இருக்கிறார். இந்த ஒரு விஷயத்தை முடிச்சாக வைத்தே பல எபிசோடுகளை இழுவையாக்கி விஷயத்தை கிடப்பில் போடும் சீரியல்களுக்கு மத்தியில் கல்யாண வீடு கொஞ்சம் பரபர சீரியல்தான்.

கூட்டு பாலியல் கொடுமை
கடந்த வருடம் கூட்டு பாலியல் வன்கொடுமை என்று ஒரு விஷயத்தை கையில் எடுத்து, அதற்கு தீர்வு சொல்கிறேன் என்று சிக்கலில் மாட்டிக்கொண்ட திருமுருகன், பல முறை வருத்தம் தெரிவித்தார். அதை மனதில் கொண்டு, கலா, சகுந்தலா சகோதரிகள் பேசும் வசனம்...கோபி அப்பாவின் இரண்டாவது மனைவியை பற்றி பேசும் வசனம் இதில் கவனம் செலுத்தி இருந்தால் சீரியல் இன்னும் தரமாக இருந்து இருக்கும்.

சின்ன பெண் மோகம்
ஒரு கல்லூரி பெண்ணின் டிக்டாக் மோகத்தை காண்பித்து இருக்கும் இயக்குநர் அதற்கான கதை நகர்வு கொஞ்சம் விபரீதமான பாணியில் பயணிப்பதாக காண்பித்து வருகிறார். முள்ளில் நடப்பது மாதிரியான இது போன்ற நிகழ்வுகள் காட்சிகளாக்கும்போது இம்மி பிசகினாலும் விமர்சனத்துக்கு உரியதாக மாறிவிடும். கவனம் தேவை...!












Click it and Unblock the Notifications