Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூனைக்கண் புவனேஸ்வரி.. ஓவர்நைட்டில் ஏறிய மார்க்கெட்.. இதுவா காரணம்? அப்ப ஓவியா வீடியோ? பிரபலம் பளீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ஓவியாவின் வீடியோ லீக் ஆன சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திவிட்ட நிலையில், இதுகுறித்து போலீசிலும் புகார் தரப்பட்டுள்ளது. இதனிடையே இந்த விவகாரத்தை ஓவியா எதிர்கொண்ட விதம் பாராட்டத்தக்கது என்று பலரும் சொல்லி வரும் நிலையில், மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தன்னுடைய கருத்தையும் தெரிவித்துள்ளார்.

King 24X7 என்ற யூடியூப் சேனலுக்கு, சபிதா ஜோசப் தந்துள்ள பேட்டியில், ஓவியா பற்றி பேசியிருக்கிறார்.. இதுகுறித்து சபீதா ஜோசப் சொன்னதாவது:

buvaneswari oviya

"வடகிழக்கு பருவமழைக்கு முன்பேயே ஓவியா புயல் வீச ஆரம்பித்துவிட்டது. சென்னையில் புயல் வந்தால் சென்னையே மூழ்கிடும், அவ்வளவுதான் என்றார்கள்.. ஆனால், கடைசியில் சூரியன் ஓர் அறை அறைந்து, அனைத்து புரளியையும் துரத்தியடித்துவிட்டது.

மறுப்பு: ஓவியா விஷயத்தை பொறுத்தவரை 2 விதமாக எடுத்துகொள்ளலாம்.. அந்த வீடியோ வெளிவந்ததுமே, அதில் உள்ளது தான்தான்னு என்றும் சொல்லவில்லை.. தான் இல்லை என்றும் மறுக்கவில்லை. எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை..

வீடியோவில் உள்ளது தான்தான் என்றாலும் பிரச்சனை, தான் இல்லை என்று சொன்னாலும் பிரச்சனை. அதனாலதான் போலீசுக்கு போயிட்டாங்க ஓவியா.

வீடியோ வெளியீடு: 2 பேரும் சந்தோஷமாக இருக்கும்போது வீடியோ எடுப்பதும், பிரச்சனை என்று வரும்போது, இருவரில் ஒருவர் அந்த வீடியோவை வெளியிடுவதும் சாதாரணமாகிவிட்டது. ஆனால், ஓவியாவின் வீடியோவை வெளியிட்டது யார்? அல்லது பணத்துக்காக வெளியிட்டார்களா? என்று தெரியவில்லை. அதனால்தான் போலீசுக்கு சென்றிருக்கிறார்.

ஒருவேளை, வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றால், உடனடியாக ஓவியா பதிலளித்திருப்பார்.. "இது நானில்லை.. எனவே, யாரும் இந்த வீடியோவை பார்க்காதீங்க, இது ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கியிருக்கிறார்கள்" என்றெல்லாம் விளக்கம் சொல்லியிருப்பார்.. ஆனால் அப்படி மறுக்கவில்லையே. அப்படி ஓவியா மறுத்திருந்தால் பலரும் குரல் அவருக்காக கொடுத்திருப்பார்கள். என் அக்கா குஷ்புதான் முதல் எதிர்ப்பு குரல் எழுப்பியிருப்பாங்க..

கிசுகிசுக்கள்: திரிஷாவுக்கு ஏற்கனவே இப்படி ஒரு சம்பவம் நடந்தபோது, அவங்க உடனே மறுப்பு சொன்னாங்க.. ஆனால் நயன்தாரா உள்ளிட்டோர் இதுபோன்ற பல கிசுகிசுக்களை கடந்து போயிடுவாங்க.. ஆனால், ஓவியாவேகூட இப்படியொரு பரபரப்பை கிரியேட் செய்திருக்கலாம். இப்போதைக்கு கையில் வேலை இல்லை.. வருமானம் இல்லை. அவங்களுக்கு ஒரு தொழில் தேவை. இப்படி பரபரப்பை கிளப்பினால், வாய்ப்புகள் எளிதாக வரும்.

இப்படித்தான், பூனைக்கண் புவனேஸ்வரிக்கு மார்க்கெட் ஏறியது. அப்போது எங்களை எல்லாம் அழைத்து, ஒரு விஷயத்தை பற்றி எழுத சொன்னார். அதன்படியே நாங்களும் எழுதினோம்

என்ன தப்பு: அதாவது, நீங்கள் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணுவீங்களா? என்ற கேள்வியை செய்தியாளர்களாகிய நாங்கள் கேட்டதுமே, அதுல என்ன சார் தப்பு? ன்னு சொன்னாங்க.

புவனேஸ்வரியின் இந்த பதில்தான், மறுநாளே அவங்களுக்கு மார்க்கெட் எகிற காரணமாக இருந்தது. உடனே 19 சீரியல்களும் மளமளன்னு அவங்களுக்கு புக் ஆனது. அதுமாதிரி ஓவியாவுக்கும் இனிமேல் நிறைய வாய்ப்புகள் வரலாம்" என்பது முதல் பல்வேறு விஷயங்களை அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் சபீதா ஜோசப்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+