அண்ணன் தம்பிகளை இணைக்க கதிர் எடுத்த முடிவு.. கண்ணனை பிரிக்க ஐஸ்வர்யா செய்த சூழ்ச்சி
சென்னை: முல்லையின் வளைகாப்பிற்கு ஜீவா அனைவருக்கும் ஒரே கலரில் சட்டை எடுத்து இருக்கிறார்.
ஐஸ்வர்யா வளைகாப்பு ஃபங்ஷனில் கண்ணனை குடும்பத்தோடு சேர்ந்து விடாமல் இருக்க பிளான் போடுகிறார்.
மண்டபத்தில் வேலை செய்ய யாரும் இல்லாமல் தனியாக கதிர் வேலை செய்து கொண்டிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஏப்ரல் 18ம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில், ஜீவாவை சந்தித்த கதிர் அனைவருக்கும் ஒரே கலரில் ஃபங்ஷனில் போட்டுக்கொள்ள சட்டை எடுத்து இருக்கிறேன். அதனால் நீயும் போட்டுக் கொண்டு வந்து விடு என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். அப்போதைக்கு ஜீவாவும் சரி வருகிறேன் என்று கூறி இருக்கிறார்.

அடுத்ததாக ஐஸ்வர்யா வீட்டில் ஐஸ்வர்யாவின் சித்தி வாங்கி வைத்த பொருள்களை எல்லாம் பார்த்து பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கே கதிர் வருகிறார் பிறகு கண்ணுக்கு வாங்கிய சட்டை தைத்து வருவதற்கு நேரம் ஆகிவிட்டது என்று கூறி கண்ணனுக்கும் சட்டையை கொடுத்துவிட்டு செல்ல, ஐஸ்வர்யாவும் அவருடைய சித்தியும் இவங்களுக்கு இது ஒன்னு தான் குறை. நான் எப்படியும் வளைகாப்பு பங்ஷனுக்கு இந்த சட்டையை போட விட மாட்டேன் என்று கூறுகிறார்.
அடுத்ததாக தனம் முல்லைக்கு வாங்கிய தங்க நகையை மூர்த்தி இடம் காட்டிக் கொண்டு இருக்க, மண்டபத்தில் கதிர் வேலை பார்த்து கொண்டிருக்கிறார். அலங்கார வேலைகளை தனியாக பார்த்துக் கொண்டிருக்கும் கதிர், இதற்கு முன்பு ஒவ்வொரு பங்க்ஷனிலும் தான் செய்ததையும் அண்ணன் தம்பிகள் சந்தோசமாக இருந்ததையும், ஜீவா செய்த செயலையும் நினைத்து பார்க்கிறார். அப்போது அங்கு வரும் மூர்த்தியும் கதிர் தனியாக வேலை செய்வதை பார்த்து பீல் பண்ணி தனக்கு ஜீவா மேக்கப் போட்டு விட்டதை நினைத்துப் பார்க்கிறார்,
ஐஸ்வர்யாவும், கண்ணனும் வீட்டில் தனியாக உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது கண்ணனுக்கு தங்கள் வீட்டில் நடந்த பங்க்ஷனில் தான் ஆட்டம் போட்டது எல்லாம் நினைவுக்கு வருகிறது. இதற்கு முன்பு வீட்டில் பங்க்ஷன் நடக்கும் போதெல்லாம் நாங்கள் சந்தோஷமாக இருப்போம் என்று பேசிக் கொண்டிருக்க, ஐஸ்வர்யா இனி வேறு ஏதாவது பங்க்ஷன் வரும்போது நீ போய் டெக்கரேஷன் எல்லாம் பண்ணு என்று கூறுகிறார்.

அடுத்ததாக மீனாவும் ஜீவாவும் வீட்டில் தனியாக அமர்ந்து இருக்க, அப்போது மீனா ஜீவாவிடம் நாளைக்கு நாம பங்க்சனுக்கு போறோம் தானே என்று கேட்கிறார். அதற்கு பதில் சொல்லாமல் ஜீவா அப்படியே அமர்ந்திருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது..
-
கொலை மிரட்டல் விடுறாங்க.. பயமா இருக்கு.. கமிஷனர் ஆபீஸில் பதறிய வாட்டர் மெலன் திவாகர்! -
சிறகடிக்க ஆசை சீரியல் அணிலா ஸ்ரீகுமாருக்கு 3வது கல்யாணம்.. குழந்தைகள் முன்பே நடந்த சம்பவம்! குவியும் வாழ்த்து -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி












Click it and Unblock the Notifications