Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Pandian Stores 2 Episode: அரசியின் திடீர் முடிவு! சோகத்தில் குடும்பம்! பாண்டியனின் பிடிவாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை, ஆகஸ்ட் 14, 2025: விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில், இன்று, பாண்டியனின் பிடிவாதமான முடிவும், ராஜி, கதிரின் காதல் சண்டையும், ரசிகர்களை ஆர்வத்துடன் பார்க்க வைத்துள்ளது. இந்த எபிசோடில், சக்திவேலின் பிடிவாதமும், குடும்ப கெளரவத்திற்காக, குமாரை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று, பெரியவர்கள் சொல்வதும், ஒரு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Pandian Stores Vijay TV

செந்தில் - மீனாவின் காதல்

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், செந்தில், மீனாவைப் பார்த்து, "எனக்கு இன்னும் ஒரு நாலு நாளில் சம்பளம் வரப்போகுது. உனக்கு என்ன வேணும் என்று சொல்லு, வாங்கித் தருகிறேன்," என்று சொல்கிறார். ஆனால், மீனா, "எனக்கு எதுவுமே வேணாம்," என்று மறுத்துவிடுகிறார். பின்னர், "சம்பளம் வர்றதுக்கு இன்னும் கொஞ்சம் நாள் இருக்கு. அதுக்குப் பிறகு யோசிப்போம்," என்று சொல்கிறார்.

ராஜி - அரசியின் பேச்சு

மறுநாள் காலையில், ராஜி, அரசியைப் பார்த்து, "நல்லா தூங்கினியா?" என்று கேட்கிறார். அதற்கு அரசி, "நல்லா தான் தூங்கினேன்," என்று சொல்கிறார். பின், அரசி, ராஜியிடம், "உங்க அண்ணனுக்கு எதிராக இன்னைக்கு கோர்ட்டில் பேசப்போறேன் என்று நீங்க ஏதும் நினைக்கிறீர்களா?" என்று கேட்கிறார்.

ராஜியின் ஆதரவு

அதற்கு ராஜி, "நீ அவன் செஞ்ச துரோகத்தை பேசுறதை நினைத்து, எனக்கு சந்தோஷமாத் தான் இருக்கு," என்று சொல்கிறார். இது, ராஜி, கதிர் மீதும், அரசி மீதும், வைத்திருக்கும் அன்பை, உணர்த்துகிறது. குமார் மீது கொடுத்த வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு போவதற்கு அரசி மற்றும் குடும்பத்தினர் தயாராகி கொண்டிருக்கின்றனர்.

கோபத்தில் சக்திவேல்

சக்திவேல், முத்துவேலைப் பார்த்து, "உங்க பொண்ணு வீட்டுக்கு வர்றதுக்காக என்னவெல்லாம் செய்தீங்க. அதில கொஞ்சமாவது என் பையனுக்காக செய்தீங்களா?" என்று கேட்கிறார். அதற்கு முத்துவேல் நான் குமாரை வெளியே கொண்டு வருவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்து கொண்டு தான் இருந்தேன் நீ எதுவும் தெரியாமல் பேசிகிட்டு இருக்க என்று சொல்கிறார்.

மறுபக்கத்தில் சரவணன், அரசியிடம், "கோர்ட்டில் என்ன பிரச்சனை என்றாலும், உடனே எனக்கு கால் பண்ணு," என்று சொல்கிறார். பின், சக்திவேலின் அம்மா, பாண்டியனிடம், "குடும்ப கெளரவத்திற்காக, நீங்க குமார் மேல கொடுத்த புகாரை, திரும்ப வாங்கிக்க," என்று சொல்கிறார். ஆனால், பாண்டியன், "இந்த விஷயத்தில மட்டும் நான் உங்க பேச்சைக் கேட்க மாட்டேன்," என்று உறுதியாக மறுத்துவிடுகிறார்.

இவ்வாறு, பாண்டியனின் பிடிவாதமும், சக்திவேலின் வருத்தமும், குடும்பத்தில் ஒரு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த குடும்பப் பிரச்சனைகள், அடுத்தடுத்த எபிசோட்களில், எப்படித் தீர்க்கப்படுகின்றன என்பதை, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+