பாண்டியன் ஸ்டோர்ஸ்: என் பையன் மேலே தப்பு? மயிலுக்கு பாண்டியன் கொடுத்த தண்டனை! ராஜி உடைத்த உண்மை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 2025 டிசம்பர் 9ஆம் தேதிக்கான எபிசோடில் மயில் பற்றிய உண்மைகள் தெரிந்ததும் கோமதி மற்றும் பாண்டியன் இருவரும் கோபத்தில் பேசி இருக்கின்றனர். அதே நேரத்தில் இன்னொரு உண்மையை ராஜி கதிரிடம் சொல்லி இருக்கிறார். இனி என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மயில் பற்றிய உண்மைகள் தெரிந்ததும் மொத்த குடும்பத்தினரும் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் அமைதியாக இருக்கின்றனர். அப்போது கோமதி பாண்டியனிடம் உங்களுக்கு எதுவும் இல்லயே? நீங்க நல்லா இருக்கீங்களா? என்று சோகமாக கேட்கிறார். அதற்கு பாண்டியன், சரவணன் விஷயத்தில் எதையும் சரி பண்ணாமல் எனக்கு எதுவும் ஆகாது என்று சொல்கிறார்.

மறுபக்கத்தில் ராஜி தனக்கு தெரிந்த நகை விஷயம் பற்றி வீட்டில் சொல்லவா? வேண்டாமா? என்று குழப்பத்தில் இருக்கிறார். ஆனாலும் மயில் கெஞ்சியதால் இப்போதைக்கு எதுவும் சொல்ல வேண்டாம் என்று அமைதியாக இருக்கிறார். அடுத்ததாக கதிர் தூக்கம் வராமல் ஹாலுக்கு வருகிறார். அப்போது அங்கு அம்மா அப்பா இருவரும் தூக்காமல் சோகமாக உட்கார்ந்து இருப்பதை பார்த்து ரூமுக்குள் வருகிறார்.
அங்கு ராஜியிடம் வந்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ராஜியிடம் இப்படியும் ஆட்கள் இருப்பாங்களா? அண்ணா எவ்வளவு பாவம் தெரியுமா? அண்ணனை போய் இப்படி ஏமாற்றி இருக்கிறார்கள். இவ்வளவு விஷயங்களை தான் மறைச்சிருக்காங்களா? இல்ல வேற எதுவும் பொய் சொன்னாங்களான்னு கூட தெரியலையே என்று புலம்பி கொண்டிருக்கிறார்.
அப்போது ராஜி உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் என்று போலி நகை பற்றிய உண்மைகளையும் சொல்கிறார். இதை கேட்டு கதிர் அதிர்ச்சி ஆகுகிறார். பிறகு கதிர் நம்ம சைடுல இருந்து அவங்க கிட்ட இவ்வளவு நகை வேண்டும், அவங்க படிச்சிருக்கணும் என்றெல்லாம் கேட்கவே இல்லையே. அப்படி இருக்கும்போது அவங்க எதுக்காக இந்த விஷயத்துல பொய் சொன்னாங்க? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அதற்கு ராஜி மயில் அக்கா இதுல மட்டும் தான் பொய் சொல்லி இருப்பாங்கன்னு நினைச்சு நானும் மீனா அக்காவும் உண்மைய சொல்லாம மறைச்சிட்டோம் என சொல்கிறார். அடுத்த நாள் காலையில் விடிந்ததும் கதிர் வந்து பார்க்கும்போது ஹாலில் எல்லோரும் படுத்திருக்கிறார்கள். மயில் ரூமுக்குள் அழுது கொண்டே கீழே படுத்து இருக்கிறார். பிறகு செந்திலை பார்த்து இந்த விஷயத்தை சொல்ல வேண்டும் என்று கதிரும் ராஜியும் கிளம்பி போகின்றனர்.
அங்கு அவர்களிடம் நடந்த விஷயத்தை எல்லாம் சொன்னதும் செந்தில் அப்பா மீது தான் தப்பு என்று சொல்கிறார். அப்பா எதுவும் விசாரிக்காமல் கல்யாணம் பண்ணி வச்சதால்தான் இப்படி நடந்துச்சு என்று குறை சொல்கிறார். பிறகு எல்லோரும் வீட்டிற்கு வருகின்றனர். மறுபக்கத்தில் பாண்டியன் கோமதி இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது அரசி அழுது கொண்டு வருகிறார்.
அண்ணன் இப்ப கூட அழுதுட்டு இருக்கு அப்பா என்று சொன்னதும். என் பையனை இப்படி அழ வச்ச அவ நல்லாவே இருக்க மாட்டா என்று கோமதி மயிலுக்கு சாபம் போட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு சரவணன் வர அவருக்கு என்ன சமாதானம் சொல்வதென்று தெரியாமல் பாண்டியன் இருக்கின்றனர். அந்த நேரத்தில் மயில் ரூமில் இருந்து வந்து பாண்டியன் காலில் விழுகிறார். ஆனால் பாண்டியன் தள்ளி போய் நின்று கொள்கிறார்.
அப்போது மயில் நான் எந்த விஷயத்தையும் வேணுன்னு மறைக்கல, என்ன மன்னிச்சிடுங்க மாமா என்று கதறி கொண்டு இருக்கிறார். ஆனால் பாண்டியன் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. நாளைக்கு என்று வெளியான ப்ரோமோவில் மயிலின் அப்பாவும் அம்மாவையும் வரவைத்து பாண்டியன் மயிலை வீட்டை விட்டு கூட்டிக்கொண்டு போக சொல்கிறார்.
-
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்து அடி! -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?











Click it and Unblock the Notifications