பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: கோமதி எடுத்த முடிவால் கலங்கி நிற்கும் குடும்பம்.. பாண்டியனுக்கு பெரிய தண்டனை! இது தேவைதான்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 ஏப்ரல் நான்காம் தேதிக்கான எபிசோடில், கோமதி குடும்பத்தினர் புரிந்து கொள்ளாததால் வீட்டை விட்டு வெளியே போகிறார். இதுவரைக்கும் திமிராக இருந்தால் பாண்டியன் கோமதி இடம் இப்போது கெஞ்சு கொண்டிருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோடு
பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலின் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், கோமதி வீட்டை விட்டு வெளிய போறேன் என்று சொன்னதை வீட்டில் உள்ள யாருமே நம்பவில்லை. என்னம்மா காமெடி பண்ணிட்டு இருக்க, மறுபடியும் டிராமா போட போறியா என எல்லோரும் கிண்டலடிக்கிறார். இதனால் கடுப்பான கோமதி, வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
கோமதி வெளியே போனது பார்த்ததும், ராஜியும், அரசியும் அவரை தடுத்து நிற்க்க செல்கிறார்கள். அவர்கள் பேச்சை கேட்காத கோமதி விறுவிறுவென நடையை கட்டுகிறார். உடனே சரவணன், நான் போய் அம்மாவை கூட்டிட்டு வர்றேன் என சொல்லி கிளம்புகிறார். ஆனால் மீனா அவரை தடுத்து நிறுத்திவிடுகிறார்.
அப்போது கதிர், நீ எதுக்குனே போற, நமக்கு முன்னாடி அம்மாவுக்கு சொந்தம் அப்பா தான். அதனால, அப்பா போய் கூப்பிட்டா தான் அம்மா வருவாங்க. நம்ம அழைச்சு ஒரு பிரயோஜனமும் இல்ல. அதனால அப்பா போய் அம்மாவை சமாதானப்படுத்தி கூட்டிட்டு வரச் சொல்லு என சொல்கிறார். இதையடுத்து கோமதியின் அம்மா காந்திமதி, பாண்டியனிடம், மாப்ள போய் அவளை கூட்டிட்டு வாங்க என சொன்ன உடன் வேறு வழியின்றி பாண்டியன் கோமதி பின்னாலேயே செல்கிறார்.
கோமதி போகும் இடம் எல்லாம் வந்து தயவு செஞ்சு வீட்டுக்கு வந்துரு என கெஞ்சுகிறார். ஆனால் கோமதி கேட்கவில்லை. பாண்டியனின் பேச்சைக் கேட்காமல் கோமதி விறுவிறுவென நடந்து செல்கிறார். ரோட்டில் செல்பவர்கள் எல்லாம் பாண்டியனை வேடிக்கை பார்க்கிறார்கள். இதனால் அவருக்கு அவமானமாக இருக்கிறது. இருந்தாலும் கோமதி பின்னாடியே கெஞ்சுகிட்டே போகிறார். மறுபுறம் வீட்டில் இருக்கும் செந்தில், மீனாவிடம் நீ தான் இப்படி ஒரு ஐடியாவை அம்மாவுக்கு கொடுத்தியா என கேட்கிறார்.
இதனால் டென்ஷன் ஆகும் மீனா, உங்க அம்மா என சின்ன குழந்தையா நாங்க சொல்லி கொடுத்து செய்யுறதுக்கு, அவங்களுக்கு கோபம் வந்து கிளம்பிட்டாங்க, அதுக்கு நான் என்ன பண்றது என செம டோஸ் கொடுக்கிறார். கடைசியாக கோமதி ஒரு இளநீர் கடைக்கு சென்று இளநீயை வாங்கி குடித்துவிட்டு, காசு அவர்கிட்ட வாங்கிக் கோங்க என சொல்லிவிட்டு செல்கிறார்.
பின்னர் பாண்டியன் காசை கொடுத்துவிட்டு, சரி வா வீட்டுக்கு போகலாம் என அழைக்கிறார். இளநீர் வாங்கி கொடுத்ததுக்காக நான் வீட்டுக்கெல்லாம் வர மாட்டேன் என சொல்லி மீண்டும் கோமதி முரண்டு பிடிக்கிறார். இதனால் அவரை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமால் பாண்டியன் மாட்டிக் கொண்டு முழிக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications