Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kumara Sambhavam: கதிருக்குள்ள இப்படி ஒரு காமெடியனா? - குமார சம்பவம் முதல் பார்வை விமர்சனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் குமரன் தங்கராஜன். சீரியலில் அமைதியான, பொறுப்பான கதிர் கதாபாத்திரத்தில் நடித்துப் பலரின் அன்பைப் பெற்ற அவர், தற்போது வெள்ளித்திரையில் ஹீரோவாகக் கால் பதித்துள்ளார். குமார சம்பவம் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகியுள்ள குமரன், சீரியலில் பார்த்த ரசிகர்களுக்குப் பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளார். அந்தப் படம் எப்படி இருக்கிறது? வாங்க பார்க்கலாம்.

Kumaran Thangarajan Pandian Stores vijay tv

கதைக்களம்

சினிமா இயக்குநராக ஆசைப்படும் கதாநாயகன் குமரன், ஒரு சமூக ஆர்வலரான இளங்கோ குமரவேலு மற்றும் அவரது தாத்தா ஜி.எம்.குமார் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசிக்கிறார். ஒருநாள், ஜி.எம்.குமார் தனது வீட்டை விற்று, பேரன் குமரன் படம் எடுக்க உதவுவதற்காக, இளங்கோ குமரவேலுவுக்கு உயில் எழுதி வைக்கிறார். ஆனால், திடீரென இளங்கோ மர்மமான முறையில் இறந்துபோக, அனைவரின் சந்தேகப் பார்வையும் குமரன் மீது விழுகிறது.

கொலை செய்தது யார்? குமரன் இயக்குநராக ஆனாரா? என்பதைப் பற்றி, வழக்கமான கிரைம் த்ரில்லராக இல்லாமல், ஒரு டார்க் காமெடி ஜானரில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இதுவே, படத்திற்கு ஒரு பெரிய பலம் என்று சொல்லலாம்.

குமரன் முதல் முறையாக ஹீரோ

குமார சம்பவம் படம், கதிர் என்ற அமைதியான கதாபாத்திரத்தை மட்டுமே பார்த்த ரசிகர்களுக்கு ஒரு புதிய குமரனைக் காட்டுகிறது. நகைச்சுவை, சண்டைக் காட்சிகள், ரொமான்ஸ் எனப் பல பரிமாணங்களிலும் குமரன் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, நகைச்சுவை அவருக்கு இயல்பாகவே வருவதாகப் பல விமர்சனங்கள் கூறுகின்றன. ஒரு அறிமுக நடிகர் என்கிற தடமே தெரியாத அளவுக்கு அவர் நன்றாகவே நடித்துள்ளார். ஜி.எம்.குமார் மற்றும் இளங்கோ குமரவேலின் அனுபவ நடிப்பு படத்திற்குப் பலம் சேர்க்கிறது. நடிகர் பாலசரவணனின் நகைச்சுவை, ரசிகர்களைச் சிரிக்க வைக்கிறது.

பலம் மற்றும் பலவீனம்

கொலை மர்மத்தை, சீரியஸாக இல்லாமல் காமெடி ஜானருக்குள் கொண்டு சென்றது ஒரு புதுமையான முயற்சி. படத்தின் இரண்டாம் பாதியில் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை, யாரையும் அவமானப்படுத்தாத நகைச்சுவை இருக்கிறது. இசையமைப்பாளர் அச்சு ராஜாமணியின் இசை மற்றும் ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவு படத்திற்கு ஒரு நல்ல உணர்வை கொடுக்கிறது. கதை சொல்லும் முறை மற்றும் இளங்கோவின் இறப்புக்கான காரணம் சொல்லப்பட்ட விதம் புதுமையாக உள்ளது.

படம் சலிப்பை ஏற்படுத்தும் விஷயங்கள்:

சில காட்சிகள் சீரியல் போல நீளமாக நகர்வதால், பார்ப்பவர்களுக்குச் சற்றுச் சலிப்பு ஏற்படலாம். திரைக்கதை சில இடங்களில் தொய்வாக உள்ளது. மொத்தத்தில், சந்தானம், சிவகார்த்திகேயன், கவின் என விஜய் டிவியில் இருந்து வந்த ஹீரோக்களின் வரிசையில், தற்போது குமரனும் இணைந்துள்ளார். குமார சம்பவம், இந்த வார இறுதியில் குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+