வயிற்றில் அடிபட்டு துடிக்கும் ஐஸ்வர்யா..மருத்துவமனையில் தவிக்கும் கண்ணன்..இனி நடப்பது இதுதான்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ஏப்ரல் 27 முதல் 29ஆம் தேதி வரைக்கும் ஆன ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
யூட்யூபில் வீடியோ போட வேண்டும் என்று ஐஸ்வர்யா ஆசைப்பட்டு கடைசியில் வயிற்றில் அடிபட்டு வலியில் துடிக்கிறார்.
கண்ணன் மருத்துவமனையில் மருந்து வாங்க பணம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் யாரும் எதிர்பார்க்காத திருப்பம் நடந்திருக்கிறது. கண்ணனும் ஐஸ்வர்யாவும் புதியதாக யூடியூப் சேனல் தொடங்கியிருக்கும் நிலையில் அதில் டான்ஸ் ஆடி வீடியோ போடுவதற்காக முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் கடனுக்கு இஎம்ஐ கட்டுவதற்கு இனி முடியாது என்று கண்ணன் இன்றைய எபிசோட்டில் கூறியதால் கண்ணன் ஐஸ்வர்யா என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்று தொடங்கி இன்றைய எபிசோட்டில் ஐஸ்வர்யா சமையல் செய்து அதை வீடியோவாக வெளியிட்டிருந்தார். ஐஸ்வர்யா சமையல் செய்வதை கண்ணன் தான் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் அடுத்ததாக டான்ஸ் ஆடி இவர்கள் இருவரும் ஜோடியாக வீடியோ எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஐஸ்வர்யா கீழே விழுந்து வயிற்றில் அடிபட்டு விடுகிறது. இதனால் வயிறு வலியில் ஐஸ்வர்யா துடிக்க கண்ணன் ஐஸ்வர்யாவை மருத்துவமனையில் சேர்க்கின்றனர். அங்கு ஸ்கேன் பார்த்த டாக்டர்கள் அடுத்து சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் குறிப்பிட்ட மருந்து வேண்டும் என்று கண்ணனிடம் சொல்கின்றனர்.
கண்ணன் தன்னிடம் இருக்கும் மருந்தை வாங்குவதற்காக தன்னுடைய காரை கொடுக்க காதலில் பணம் இல்லை என்று அங்கு இருப்பவர்கள் சொல்ல, கார்டில் பணம் இல்லாமல் கண்ணன் தவித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் கண்ணன் கதிருக்கு தான் போன் செய்யப் போகிறாராம்.

வலியில் துடித்துக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யாவுக்கு உதவுவதற்காக கதிர் மருத்துவமனைக்கு ஓடி வருகிறார். அது மட்டுமல்லாமல் மருத்துவமனைக்கு தேவையான பணத்தையும் கட்டுகிறாராம். இதற்குப் பிறகு ஐஸ்வர்யாவும் கண்ணனும் தங்களுடைய தவறை புரிந்துகொண்டு திருந்தி மீண்டும் குடும்பத்தோடு ஒன்றாக சேர இருக்கிறார்கள். ஏற்கனவே வளைகாப்பு நான் செய்ய மாட்டேன் என்று ஐஸ்வர்யாவின் சித்தி கூறி இருக்கிறார்.

ஐஸ்வர்யாவை ஓடிப்போய் கல்யாணம் பண்ண முடியும் ஆனால் ஓடிப் போய் வளைகாப்பும் பிரசவம் பார்க்க முடியாது என்று மல்லியும் திட்டி இருக்கிறார். இதனால் அப்போது தனம் தான் நாங்கள் ஐஸ்வர்யாவுக்கு பிரசவ பார்த்துக் கொள்ளுவோம் என்று கூறியிருக்கிறார். இதை நினைத்து பார்த்து ஐஸ்வர்யா மீண்டும் தனத்திடம் மன்னிப்பு கேட்டு ஒன்றாக குடும்பத்தோடு சேர இருக்கிறாராம்.
-
தேர்தல் பற்றி விஜய் பேசிய டயலாக், சிறகடிக்க ஆசையில் ரீ கிரியேட்! இதை கவனிச்சீங்களா? இனிவரும் பிரச்சனை? -
பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்: முத்துவேல் பற்றி தெரிய வந்த பெரிய உண்மை.. அதிர்ச்சியில் கதிர்! உடையும் குடும்பம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன












Click it and Unblock the Notifications