Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வயிற்றில் அடிபட்டு துடிக்கும் ஐஸ்வர்யா..மருத்துவமனையில் தவிக்கும் கண்ணன்..இனி நடப்பது இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ஏப்ரல் 27 முதல் 29ஆம் தேதி வரைக்கும் ஆன ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

யூட்யூபில் வீடியோ போட வேண்டும் என்று ஐஸ்வர்யா ஆசைப்பட்டு கடைசியில் வயிற்றில் அடிபட்டு வலியில் துடிக்கிறார்.

கண்ணன் மருத்துவமனையில் மருந்து வாங்க பணம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

Pandian Stores Serial 2023 April 27th to 29th April promo Highlights

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் யாரும் எதிர்பார்க்காத திருப்பம் நடந்திருக்கிறது. கண்ணனும் ஐஸ்வர்யாவும் புதியதாக யூடியூப் சேனல் தொடங்கியிருக்கும் நிலையில் அதில் டான்ஸ் ஆடி வீடியோ போடுவதற்காக முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் கடனுக்கு இஎம்ஐ கட்டுவதற்கு இனி முடியாது என்று கண்ணன் இன்றைய எபிசோட்டில் கூறியதால் கண்ணன் ஐஸ்வர்யா என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்று தொடங்கி இன்றைய எபிசோட்டில் ஐஸ்வர்யா சமையல் செய்து அதை வீடியோவாக வெளியிட்டிருந்தார். ஐஸ்வர்யா சமையல் செய்வதை கண்ணன் தான் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.

Pandian Stores Serial 2023 April 27th to 29th April promo Highlights

இந்த நிலையில் அடுத்ததாக டான்ஸ் ஆடி இவர்கள் இருவரும் ஜோடியாக வீடியோ எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஐஸ்வர்யா கீழே விழுந்து வயிற்றில் அடிபட்டு விடுகிறது. இதனால் வயிறு வலியில் ஐஸ்வர்யா துடிக்க கண்ணன் ஐஸ்வர்யாவை மருத்துவமனையில் சேர்க்கின்றனர். அங்கு ஸ்கேன் பார்த்த டாக்டர்கள் அடுத்து சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் குறிப்பிட்ட மருந்து வேண்டும் என்று கண்ணனிடம் சொல்கின்றனர்.

கண்ணன் தன்னிடம் இருக்கும் மருந்தை வாங்குவதற்காக தன்னுடைய காரை கொடுக்க காதலில் பணம் இல்லை என்று அங்கு இருப்பவர்கள் சொல்ல, கார்டில் பணம் இல்லாமல் கண்ணன் தவித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் கண்ணன் கதிருக்கு தான் போன் செய்யப் போகிறாராம்.

Pandian Stores Serial 2023 April 27th to 29th April promo Highlights

வலியில் துடித்துக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யாவுக்கு உதவுவதற்காக கதிர் மருத்துவமனைக்கு ஓடி வருகிறார். அது மட்டுமல்லாமல் மருத்துவமனைக்கு தேவையான பணத்தையும் கட்டுகிறாராம். இதற்குப் பிறகு ஐஸ்வர்யாவும் கண்ணனும் தங்களுடைய தவறை புரிந்துகொண்டு திருந்தி மீண்டும் குடும்பத்தோடு ஒன்றாக சேர இருக்கிறார்கள். ஏற்கனவே வளைகாப்பு நான் செய்ய மாட்டேன் என்று ஐஸ்வர்யாவின் சித்தி கூறி இருக்கிறார்.

Pandian Stores Serial 2023 April 27th to 29th April promo Highlights

ஐஸ்வர்யாவை ஓடிப்போய் கல்யாணம் பண்ண முடியும் ஆனால் ஓடிப் போய் வளைகாப்பும் பிரசவம் பார்க்க முடியாது என்று மல்லியும் திட்டி இருக்கிறார். இதனால் அப்போது தனம் தான் நாங்கள் ஐஸ்வர்யாவுக்கு பிரசவ பார்த்துக் கொள்ளுவோம் என்று கூறியிருக்கிறார். இதை நினைத்து பார்த்து ஐஸ்வர்யா மீண்டும் தனத்திடம் மன்னிப்பு கேட்டு ஒன்றாக குடும்பத்தோடு சேர இருக்கிறாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+