வளைகாப்பை நிறுத்திய கண்ணன்.. மூர்த்தி செய்த அதிரடி.. அவமானப்படுத்திய ஜீவா.. பரபரப்பான திருப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கதிர் ஜெயிலில் இருக்கும் விஷயத்தை பற்றி மீனா ஜீவாவிடம் கூறுகிறார்.

கண்ணன் இனி வளைகாப்பு நடத்த வேண்டாம் என்று நிறுத்தி விடுகிறார்.

Pandian Stores serial 2023 May 27th promo and Episode Highlights

நான் பணம் வாங்கி கொடுத்தவங்களுக்கு பணம் கரெக்டா கொடுக்க வேண்டும் என்று ஐஸ்வர்யாவின் சித்தி மிரட்டுகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மே 27 ஆம் தேதிக்கான எபிசொட்டின் ஆரம்பத்தில் மீனா ஜீவாவுக்கு போன் பண்ணி இங்க வரவில்லையா என்று கூப்பிட, நான் இப்ப வந்து விடுவேன் என்று சொல்ல, இங்கே வளைகாப்பு நடக்குமா? இல்லையா? தெரியல ஜீவாவை போலீஸ் அரெஸ்ட் பண்ணி இருக்காங்க என்று கூறுகிறார்.

ஜீவா புரியாமல் என்ன நடந்தது என்று கேட்க கண்ணன் வீட்டுச் செலவுக்காக கிரெடிட் கார்டில் லட்சக்கணக்கில் பணம் கடன் வைத்திருப்பதால் அதை கட்ட முடியாமல் இருக்க கடன்காரங்கள் வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்து கண்ணனையும் அடித்து விட்டு ஐஸ்வர்யாவையும் தப்பா பேசி இருக்காங்க, அதனால் கதிர் அடித்திருக்கிறார். அதான் போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்க, முல்லையும் அழுதுட்டே இருக்காங்க என்று கூறுகிறார்.

ஜீவா நான் போலீஸ் ஸ்டேஷன் போய் பார்க்கிறேன் என்று கூறுகிறார். வீட்டில் ஐஸ்வர்யா அழுது கொண்டு இருக்க கண்ணன் முகத்தில் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருக்க மீனா திட்டுகிறார். அப்போது போன் வர அதை எடுத்து ஐஸ்வர்யா மண்டபத்தில் இருந்து பேசுறாங்க நீ பேசு என்று கண்ணனிடம் கொடுக்க, கண்ணன் வளைகாப்பு நடக்காது எல்லாரும் வீட்டுக்கு போயிருங்க என்று கூறுகிறார்.

இதை கேட்டு அதிர்ச்சியான ஐஸ்வர்யாவின் சித்தி வளைகாப்பு நடக்கும் பணம் கிடைக்கும் என்று சொன்னதால்தான் நான் வட்டிக்கு பணம் வாங்கி தந்திருக்கிறேன். நான் வட்டிக்கு வாங்கி இருக்கவங்க லேசு பட்டவங்க கிடையாது. எப்படியாவது பணம் தந்துவிடு என்று சொல்ல, எல்லாமே இங்கே எதிர்பார்க்காமல் நடக்குது என்று ஐஸ்வர்யாவும் அழுது கொண்டிருக்கிறார்.

இதை தொடர்ந்து மீனா முல்லையின் வீட்டிற்கு செல்ல அங்கு முல்லை அழுது கொண்டிருக்க, முல்லையின் அம்மா மாப்பிள்ளை எதுக்காக இப்படி பண்ணினாரு என் பொண்ணு அழுது கிட்டு இருக்கா என்று சொல்ல, மீனா வளைகாப்பு பங்க்ஷனை கண்ணன் வேண்டான்னு சொல்லிட்டான் அவனால் வந்த பிரச்சனைதான் என்று நடந்த விஷயங்கள் எல்லாவற்றையும் சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

முல்லை அம்மா கண்ணனை திட்டிக் கொண்டிருக்க அதே நேரத்தில் கண்ணன் கதிரை பார்க்க போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்ல, அங்கிருக்கும் போலீஸ்காரர்கள் கண்ணனை திட்டுகின்றனர். எத்தனை பேர் தான் இப்படி வருவீங்க என்று திட்ட கண்ணன் கதிரிடம் மன்னிப்பு கேட்கிறார். பிறகு வெளியே வந்து நிற்க, அப்போது ஜீவா அங்கே வர, ஜீவாவும் கதிரிடம் போய் பேசிவிட்டு வெளியே வந்து கண்ணனை திட்டுகிறார்.

Pandian Stores serial 2023 May 27th promo and Episode Highlights

பிறகு மூர்த்தி வக்கீல் இடம் பேசிக் கொண்டிருக்கும்போது ஜீவா, அண்ணா எப்படியாவது கதிரை வெளியே எடுத்து விட வேண்டாம் என்று பேசிக் கொண்டிருக்க கண்ணனை பார்த்ததும் மூர்த்தி கோபத்தோடு இவனை எதுக்கு இங்க கூட்டிட்டு வந்தா? எல்லாத்துக்கும் காரணமே இவன்தான் என்று திட்டுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+