பாண்டியன் ஸ்டோரின் இறுதி கட்டம்.. பாபநாசம் படத்தை மிஞ்சிய கதை.. ரசிகர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் 7ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ஜனார்த்தனனின் இந்த நிலைமைக்கு காரணம் பிரசாந்த் தான் என்பதை மீனா மூர்த்தி வீட்டில் அனைவரிடமும் கூறுகிறார்.

அதைத்தொடர்ந்து பிரசாந்தை மாட்ட வைக்க வேண்டும் என்று மொத்த குடும்பமும் பிளான் போடுகின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் விஜய் டிவியில் 5 வருடங்கள் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகி சாதனை படைத்திருக்கிறது. அதே நேரத்தில் ஆயிரம் எபிசோடுகளை தாண்டிய முதல் சீரியல் என்றும் இந்த சீரியல் சாதனை படைத்திருக்கும் நிலையில் தற்போது இந்த சீரியலில் இறுதி கட்டம் வந்திருக்கிறது.

அண்ணன் தம்பியின் ஒற்றுமையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் தற்போது இறுதி அத்தியாயத்தில் இருக்கும் நிலையில் என்ன மாதிரி கதை முடிவு வரும் என்று அதிகமான ரசிகர்கள் காத்திருந்தனர். அதே நேரத்தில் இதுவரைக்கும் தன்னுடைய குடும்பத்தின் மீது நம்பிக்கையாய் இருந்த மீனா பிரசாந்தின் சூழ்ச்சியால் தன்னுடைய அப்பாவை கொலை முயற்சி செய்தது ஜீவா மற்றும் கதிர் தான் என்று தப்பாக புரிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி இருந்தார்.
அதே நேரத்தில் வீட்டிற்கு வந்து மீனாவிடம் பேச வந்த முல்லையையும் மீனா அவமானப்படுத்தி அனுப்பி இருந்தார். இந்த நிலையில் இனி பிரசாந்த் தான் இத்தனை பிரச்சனைக்கும் காரணம் என்பது யார் மூலமாக தெரிய வரும் என்று எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது. இந்த நிலையில் இன்று அக்டோபர் ஐந்தாம் தேதியில் இருந்து ஏழாம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் ஜீவாவும் கதிரும் அந்த நேரத்தில் எங்க இருந்தாங்க என்கிற சின்ன ஆதாரம் கிடைத்தால் கூட அவங்கள ஈசியா வெளிய கொண்டு வந்து விடலாம் என்று மூர்த்தி ஐஸ்வர்யா கண்ணன் முல்லையிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது மீனா வீட்டிற்குள் வருகிறார் மீனாவை பார்த்ததும் முல்லை கோபத்தில் வீட்டிற்குள் போகப் போகிறார். அப்போது மூர்த்தி அவரை நிற்க சொல்லிவிட்டு மீனா என்னதான் சொல்ல வருதுன்னு கேட்போம் என்று மீனா என்னப்பா இப்ப வந்திருக்க என்று விசாரிக்கிறார்.
அப்போது மீனா மாமா இந்த எல்லா பிரச்சனைக்கும் காரணம், எங்க அப்பாவை அடிச்சது மேனேஜர் சாரை கொலை பண்ணுனது எல்லாத்துக்கும் காரணம் அந்த பிரசாந்த் தான். அவனை போலீஸில் பிடிச்சு கொடுத்து ஜீவாவையும் கதிரையும் ரெண்டு பேரையும் வெளியே கொண்டு வரணும் என்று சொல்ல, அதற்கு மூர்த்தி மீனா எனக்கு ஒரு யோசனை வருது பா அதை மட்டும் நம்ம சரியா செஞ்சிட்டோம்னா அவன் காலம் முழுக்க ஜெயில்ல தான் இருக்க வேண்டும் என்று சொல்ல எல்லோரும் சரி என்று சொல்கின்றனர்.
அதைத்தொடர்ந்து மருத்துவமனையில் ஜனார்த்தனனின் ரூம் அருகில் மீனா, மீனாவின் அம்மா, மீனாவின் தங்கை என மூன்று பேரும் காத்திருக்க அப்போது பிரசாந்த் நீங்க எவ்வளவு நேரம் தான் இப்படி ரெஸ்ட் இல்லாம முழிச்சி இருப்பீங்க? நீங்க வீட்டுக்கு போங்க நான் பாத்துக்குறேன் உங்க அப்பாவ என்று சொல்லி மூன்று பேரையும் அனுப்பி வைக்கிறார். அதைத்தொடர்ந்து எல்லோரும் போகும்போது பிரசாந்த் வெளிய அக்கம்பக்கம் பார்த்துவிட்டு ரூமிற்குள் போகிறார்.
அப்போது பிரசாந்தை கையும் களவுமாக பிடிப்பதற்காக ரூமிற்குள் ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் ஒளிந்து இருக்கின்றனர். அதேபோல ஹாஸ்பிடலில் முல்லையின் அப்பா, மூர்த்தி என ஆளாளுக்கு ஒவ்வொரு பக்கமாக இருந்து வெளியே வருகின்றனர் இப்படியாக வெளியான ப்ரோமோவை பார்க்கும் போது கடைசி நேரத்தில் இவர்கள் கூட்டுக் குடும்பமாக சேர்ந்து பாபநாசம் திரைப்படத்தை மிஞ்ச வைக்கும் அளவிற்கு மிரட்டுறாங்களே? இவங்க போடுற பிளானால் எப்படியும் பிரசாந்து மாட்டி விடுவான். ஜீவா கதிரை, வெளியே கொண்டு வந்து அடுத்த வாரத்தோடு சீரியல் முடிவுக்கு வந்துவிடும்.
-
மதுரை முத்துவின் மகள்களுக்கு நடந்த பங்க்ஷன்.. நெகிழ வைத்த தந்தை பாசம்! வியந்து போன மதுரை மாநகரம் -
சின்னத்திரை பிரபலம் வீட்டு பங்க்ஷனில் நடிகர் ராமராஜன்.. நெகிழ வைத்த காட்சி! வியந்து போன மதுரை -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின்












Click it and Unblock the Notifications