தனத்தால் நெஞ்சு வலியில் மூர்த்தி.. கண்ணன் சொன்ன பதில்.. கோபத்தில் குடும்பத்தினர்.. எதிர்பாராத முடிவு
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலின் செப்டம்பர் நான்காம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் மொத்த குடும்பத்தின் முன்பும் தனத்திற்கு தான் மார்பக புற்றுநோய் இருக்கிறது என்ற உண்மையை ஐஸ்வர்யா சொல்லிவிடுகிறார்.

அதை கேட்டு அதிர்ச்சியான மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்துவிட, மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஐஸ்வர்யா நான் சொன்னது எல்லாமே உண்மைதான் என்று சொல்ல, அதற்கு மீனா முதல்ல நீ உள்ள போ. லைக்குகாக தானே இப்படி எல்லாம் பேசி இருக்கா என்று மிரட்ட, அதற்கு ஐஸ்வர்யா நான் எதற்கு உள்ளே போகணும். நான் இதை லைக்குக்காகவா இதை எல்லாம் பண்ணுவேன். உண்மை எல்லாம் தெரிஞ்சு நீங்களும் முல்லை அக்காவும் தான் மறைச்சிகிட்டு இருக்கீங்க. பொய் சொல்றீங்க என்று ஐஸ்வர்யா போட்டுக் கொடுக்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அதற்கு கதிர் டேய் கண்ணா உள்ளே கூட்டிட்டு போ என்று மிரட்ட, மூர்த்தி அதிர்ச்சியாகி தனத்திடம் "இந்த புள்ள ஏதோ சொல்லுதே இப்ப எல்லாரும் பொய் பேச ஆரம்பிச்சிட்டாங்க, என்ன நடக்குது" என்று தனத்திடம் கேட்க, அதற்கு கதிர் அண்ணன் அப்படி எல்லாம் ஒண்ணுமே இல்ல நீங்க முதல்ல பயப்படாதீங்க என்று ஆறுதல் சொல்ல, அப்போது ஐஸ்வர்யாவின் சித்தி அவா ஏதோ உளறிக்கிட்டு இருக்கா. அவ சொல்ற பேச்சை நம்பிகிட்டு நீ கேள்வி கேட்காத அண்ணே என்று சொல்கிறார்.
அதற்கு ஐஸ்வர்யா மாமா நீங்க எவ்வளவு தான் கேட்டாலும் அக்கா உண்மையை சொல்ல மாட்டாங்க. ஏன்னா அக்காக்கு தான் மார்பக புற்றுநோய் இருக்கு என்று சொல்கிறார். அதற்கு மீனா ஐஸ்வர்யா கொஞ்சம் அமைதியா இரு. எதுவும் பேசாத என்று சொல்ல, நான் நல்லது நினைச்சு ஒரு விஷயம் பண்ணா எல்லாரும் என்ன குற்றம் சொல்றீங்களா? என்று கேள்வி கேட்க அந்த நேரத்தில் மூர்த்திக்கு தலை சுற்றுகிறது.

அதற்கு தனம் மாமா எனக்கு ஒன்னும் இல்ல. நான் நல்லா தானே இருக்கிறேன் என்று சொல்ல, தனத்தின் கையை தன் தலையில் தூக்கி வைத்து என் மேல சத்தியமா சொல்லு உனக்கு ஒன்னும் இல்லல்ல என்று மூர்த்தி கேட்க, தனம் டக்கென்று கையை எடுத்து விடுகிறார். அதை பார்த்ததும் அதிர்ச்சியான மூர்த்தி மயக்கம் போட்டு கீழே விழுகிறார். பிறகு எல்லோரும் தண்ணீர் தெளித்து அவரை தனி அறையில் படுக்க வைக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து கண்ணன் நீங்க இவ்வளவு கஷ்டத்துல இருக்கும்போது நான் வேற உங்களுக்கு கஷ்டமே இல்ல கஷ்டம் கொடுத்திருக்கேன் என்னை மன்னித்துவிடுங்கள் அண்ணி என்று கையெடுத்து கும்பிட்டு அழுது கொண்டிருக்க ஜீவா என்கிட்ட கூட இதை பற்றி ஒரு வார்த்தை சொல்லணும்னு உங்களுக்கு தோணல என்று கேட்க, அதைத்தொடர்ந்து குடும்பம் மொத்தமும் தனத்திடம் என்ன தனம் ஒரு வார்த்தை கூட சொல்லலையே என்று கேட்டுக் கொண்டிருக்க நான் நல்லாத்தான் இருக்கேன் என்று தனம் பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது அறையில் இருந்த மூர்த்தி மீண்டும் எழுந்து வந்து தனத்திடம் பேச, தனம் எனக்கு கேன்சர் வந்தது உண்மைதான். அதற்கு ஆபரேஷன் செய்ததும் உண்மைதான். கேன்சர் வந்ததில் நான் என்ன முதல் ஆளா? உலகத்துல எத்தனையோ பேருக்கு கேன்சர் வந்து இருக்கு. அதில் எத்தனை பேர் குணமாகி நல்லாத்தான வாழ்ந்துட்டு இருக்காங்க. அதே மாதிரி நானும் குணமாகத்தான் போறேன். அவ்வளவுதான். நான் சீக்கிரமா குணமாக்குவேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ஜாய் கிரிஸில்டா வக்கீலுடன் சீரியல் நடிகை செய்த சதி! நாஞ்சில் விஜயன் வெளியிட்ட ஆதாரம்.. வெளிவரும் ரகசியம் -
விஜய்க்காக நாஞ்சில் விஜயன் போட்ட வீடியோ.. அவருக்கே பிரச்சனை! போலீஸ் ஸ்டேஷனுக்கு போகும் சீரியல் நடிகை வைஷு -
சின்னத்திரை பிரபலம் வீட்டு பங்க்ஷனில் நடிகர் ராமராஜன்.. நெகிழ வைத்த காட்சி! வியந்து போன மதுரை -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா!












Click it and Unblock the Notifications