Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தனத்தால் நெஞ்சு வலியில் மூர்த்தி.. கண்ணன் சொன்ன பதில்.. கோபத்தில் குடும்பத்தினர்.. எதிர்பாராத முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலின் செப்டம்பர் நான்காம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

அதில் மொத்த குடும்பத்தின் முன்பும் தனத்திற்கு தான் மார்பக புற்றுநோய் இருக்கிறது என்ற உண்மையை ஐஸ்வர்யா சொல்லிவிடுகிறார்.

Pandian Stores Serial September 4th promo and episode reaction

அதை கேட்டு அதிர்ச்சியான மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்துவிட, மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஐஸ்வர்யா நான் சொன்னது எல்லாமே உண்மைதான் என்று சொல்ல, அதற்கு மீனா முதல்ல நீ உள்ள போ. லைக்குகாக தானே இப்படி எல்லாம் பேசி இருக்கா என்று மிரட்ட, அதற்கு ஐஸ்வர்யா நான் எதற்கு உள்ளே போகணும். நான் இதை லைக்குக்காகவா இதை எல்லாம் பண்ணுவேன். உண்மை எல்லாம் தெரிஞ்சு நீங்களும் முல்லை அக்காவும் தான் மறைச்சிகிட்டு இருக்கீங்க. பொய் சொல்றீங்க என்று ஐஸ்வர்யா போட்டுக் கொடுக்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

Pandian Stores Serial September 4th promo and episode reaction

அதற்கு கதிர் டேய் கண்ணா உள்ளே கூட்டிட்டு போ என்று மிரட்ட, மூர்த்தி அதிர்ச்சியாகி தனத்திடம் "இந்த புள்ள ஏதோ சொல்லுதே இப்ப எல்லாரும் பொய் பேச ஆரம்பிச்சிட்டாங்க, என்ன நடக்குது" என்று தனத்திடம் கேட்க, அதற்கு கதிர் அண்ணன் அப்படி எல்லாம் ஒண்ணுமே இல்ல நீங்க முதல்ல பயப்படாதீங்க என்று ஆறுதல் சொல்ல, அப்போது ஐஸ்வர்யாவின் சித்தி அவா ஏதோ உளறிக்கிட்டு இருக்கா. அவ சொல்ற பேச்சை நம்பிகிட்டு நீ கேள்வி கேட்காத அண்ணே என்று சொல்கிறார்.

அதற்கு ஐஸ்வர்யா மாமா நீங்க எவ்வளவு தான் கேட்டாலும் அக்கா உண்மையை சொல்ல மாட்டாங்க. ஏன்னா அக்காக்கு தான் மார்பக புற்றுநோய் இருக்கு என்று சொல்கிறார். அதற்கு மீனா ஐஸ்வர்யா கொஞ்சம் அமைதியா இரு. எதுவும் பேசாத என்று சொல்ல, நான் நல்லது நினைச்சு ஒரு விஷயம் பண்ணா எல்லாரும் என்ன குற்றம் சொல்றீங்களா? என்று கேள்வி கேட்க அந்த நேரத்தில் மூர்த்திக்கு தலை சுற்றுகிறது.

Pandian Stores Serial September 4th promo and episode reaction

அதற்கு தனம் மாமா எனக்கு ஒன்னும் இல்ல. நான் நல்லா தானே இருக்கிறேன் என்று சொல்ல, தனத்தின் கையை தன் தலையில் தூக்கி வைத்து என் மேல சத்தியமா சொல்லு உனக்கு ஒன்னும் இல்லல்ல என்று மூர்த்தி கேட்க, தனம் டக்கென்று கையை எடுத்து விடுகிறார். அதை பார்த்ததும் அதிர்ச்சியான மூர்த்தி மயக்கம் போட்டு கீழே விழுகிறார். பிறகு எல்லோரும் தண்ணீர் தெளித்து அவரை தனி அறையில் படுக்க வைக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து கண்ணன் நீங்க இவ்வளவு கஷ்டத்துல இருக்கும்போது நான் வேற உங்களுக்கு கஷ்டமே இல்ல கஷ்டம் கொடுத்திருக்கேன் என்னை மன்னித்துவிடுங்கள் அண்ணி என்று கையெடுத்து கும்பிட்டு அழுது கொண்டிருக்க ஜீவா என்கிட்ட கூட இதை பற்றி ஒரு வார்த்தை சொல்லணும்னு உங்களுக்கு தோணல என்று கேட்க, அதைத்தொடர்ந்து குடும்பம் மொத்தமும் தனத்திடம் என்ன தனம் ஒரு வார்த்தை கூட சொல்லலையே என்று கேட்டுக் கொண்டிருக்க நான் நல்லாத்தான் இருக்கேன் என்று தனம் பேசிக் கொண்டிருக்கிறார்.

Pandian Stores Serial September 4th promo and episode reaction

அப்போது அறையில் இருந்த மூர்த்தி மீண்டும் எழுந்து வந்து தனத்திடம் பேச, தனம் எனக்கு கேன்சர் வந்தது உண்மைதான். அதற்கு ஆபரேஷன் செய்ததும் உண்மைதான். கேன்சர் வந்ததில் நான் என்ன முதல் ஆளா? உலகத்துல எத்தனையோ பேருக்கு கேன்சர் வந்து இருக்கு. அதில் எத்தனை பேர் குணமாகி நல்லாத்தான வாழ்ந்துட்டு இருக்காங்க. அதே மாதிரி நானும் குணமாகத்தான் போறேன். அவ்வளவுதான். நான் சீக்கிரமா குணமாக்குவேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+