“ரவிக்காக மட்டும்தான் பராசக்தி ஓடும்” – செகண்ட் ஹாஃப்பில் இருக்கும் சம்பவம்.. கெனிஷா இப்படி சொல்லிட்டாங்களே
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வெளிநாடுகளில் அன்-கட் வெர்ஷனாகவும், இந்தியாவில் சென்சார் குழு பரிந்துரைத்த திருத்தங்களுடன் படமும் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இன்று காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்ட நிலையில், ரசிகர்கள் ஆர்வத்துடன் திரையரங்குகளுக்கு படையெடுத்தனர்.
இந்த நிலையில், சென்னையில் நடிகர் ரவி மோகன் தனது நெருங்கிய தோழி கெனிஷாவுடன் பராசக்தி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்தார். அவரை கண்ட ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திரையரங்கின் முன்பு ஆள் உயர மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து ரசிகர்கள் கொண்டாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பராசக்தி படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருப்பது இந்த படத்தின் முக்கிய ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயனின் 25-ஆவது படமான இதில், முதன்முறையாக இன்னொரு ஹீரோவுக்கு எதிராக ரவி மோகன் முழுநீள வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த காரணத்தாலேயே, அவர் எப்படி அந்த பாத்திரத்தை டெலிவர் செய்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தில் இருந்தது.
படத்தை பார்த்த பிறகு, ரவி மோகனின் நடிப்பு குறித்து கெனிஷா பேசிய கருத்துகள் தற்போது கவனம் பெற்றுள்ளன. அவர் பேசுகையில், "எனக்கு நேர்மையாக சொல்லணும்னா, ரவிக்காக மட்டும்தான் பராசக்தி ஓடும். என் கண்ணுக்கு வேற யாரும் தெரியல. அவருக்காகவே இந்த படம் பண்ணுன மாதிரி இருக்கு. இந்த படத்துல அவர் தான் நம்பர் ஒன். குறிப்பாக செகண்ட் ஹாஃப்புல அவரை தாண்டி படமே இல்ல" என்று வெளிப்படையாக பாராட்டியுள்ளார்.

கெனிஷாவின் இந்த கருத்துகள், ரவி மோகனின் வில்லன் நடிப்பு படத்தில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதைக் காட்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். திருநாடன் என்ற கதாபாத்திரத்தில் ஸ்டைலிஷ், மிரட்டலான தோற்றத்தில் ரவி மோகன் திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சிக்கும் விசில் சத்தமும் கரகோஷமும் குறையவில்லை என்பதே முதல் நாள் ரிவ்யூக்களின் சுருக்கமாக இருக்கிறது.

படம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரவி மோகன், "திரையரங்குகளில் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கிறது. குறிப்பாக ஹிந்தி திணிப்புக்கு எதிராக வரும் வசனங்களை ரசிகர்கள் ரொம்பவே ரசிக்கிறார்கள்" என்று தெரிவித்தார். மேலும், ஜனநாயகன் படம் ரிலீஸாகாதது குறித்த கேள்விக்கு, "அது கண்டிப்பாக வரும். இப்போதைக்கு போகட்டும் என்று விஜய் அண்ணா விட்டிருக்கிறார்" என்றும் கூறினார்.
மொத்தத்தில், பராசக்தி திரைப்படத்தில் ரவி மோகனின் வில்லன் நடிப்பு, அவரது கரியரில் புதிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது. கெனிஷாவின் பாராட்டுகள் போலவே, ரசிகர்களும் ரவி மோகனை இந்த படத்தின் மிகப்பெரிய பலமாக கொண்டாட தொடங்கியுள்ளனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications