“ரவிக்காக மட்டும்தான் பராசக்தி ஓடும்” – செகண்ட் ஹாஃப்பில் இருக்கும் சம்பவம்.. கெனிஷா இப்படி சொல்லிட்டாங்களே
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வெளிநாடுகளில் அன்-கட் வெர்ஷனாகவும், இந்தியாவில் சென்சார் குழு பரிந்துரைத்த திருத்தங்களுடன் படமும் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இன்று காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்ட நிலையில், ரசிகர்கள் ஆர்வத்துடன் திரையரங்குகளுக்கு படையெடுத்தனர்.
இந்த நிலையில், சென்னையில் நடிகர் ரவி மோகன் தனது நெருங்கிய தோழி கெனிஷாவுடன் பராசக்தி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்தார். அவரை கண்ட ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திரையரங்கின் முன்பு ஆள் உயர மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து ரசிகர்கள் கொண்டாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பராசக்தி படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருப்பது இந்த படத்தின் முக்கிய ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயனின் 25-ஆவது படமான இதில், முதன்முறையாக இன்னொரு ஹீரோவுக்கு எதிராக ரவி மோகன் முழுநீள வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த காரணத்தாலேயே, அவர் எப்படி அந்த பாத்திரத்தை டெலிவர் செய்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தில் இருந்தது.
படத்தை பார்த்த பிறகு, ரவி மோகனின் நடிப்பு குறித்து கெனிஷா பேசிய கருத்துகள் தற்போது கவனம் பெற்றுள்ளன. அவர் பேசுகையில், "எனக்கு நேர்மையாக சொல்லணும்னா, ரவிக்காக மட்டும்தான் பராசக்தி ஓடும். என் கண்ணுக்கு வேற யாரும் தெரியல. அவருக்காகவே இந்த படம் பண்ணுன மாதிரி இருக்கு. இந்த படத்துல அவர் தான் நம்பர் ஒன். குறிப்பாக செகண்ட் ஹாஃப்புல அவரை தாண்டி படமே இல்ல" என்று வெளிப்படையாக பாராட்டியுள்ளார்.

கெனிஷாவின் இந்த கருத்துகள், ரவி மோகனின் வில்லன் நடிப்பு படத்தில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதைக் காட்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். திருநாடன் என்ற கதாபாத்திரத்தில் ஸ்டைலிஷ், மிரட்டலான தோற்றத்தில் ரவி மோகன் திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சிக்கும் விசில் சத்தமும் கரகோஷமும் குறையவில்லை என்பதே முதல் நாள் ரிவ்யூக்களின் சுருக்கமாக இருக்கிறது.

படம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரவி மோகன், "திரையரங்குகளில் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கிறது. குறிப்பாக ஹிந்தி திணிப்புக்கு எதிராக வரும் வசனங்களை ரசிகர்கள் ரொம்பவே ரசிக்கிறார்கள்" என்று தெரிவித்தார். மேலும், ஜனநாயகன் படம் ரிலீஸாகாதது குறித்த கேள்விக்கு, "அது கண்டிப்பாக வரும். இப்போதைக்கு போகட்டும் என்று விஜய் அண்ணா விட்டிருக்கிறார்" என்றும் கூறினார்.
மொத்தத்தில், பராசக்தி திரைப்படத்தில் ரவி மோகனின் வில்லன் நடிப்பு, அவரது கரியரில் புதிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது. கெனிஷாவின் பாராட்டுகள் போலவே, ரசிகர்களும் ரவி மோகனை இந்த படத்தின் மிகப்பெரிய பலமாக கொண்டாட தொடங்கியுள்ளனர்.
-
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
"இந்தியாவின் எதிரி".. அஜர்பைஜானை குறிவைத்து அடித்த ஈரான்.. தீப்பற்றி எரியும் நாடு - அதிரடி












Click it and Unblock the Notifications