Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜாதியை சொல்லி பிரச்சனை.. மன்னிப்பு கேட்ட பார்த்திபன்! ஆனால், ப்ளூ சட்டை மாறன் இப்படி கலாய்ச்சிட்டாரே

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் பேசிய சாதி தொடர்பான கருத்து சர்ச்சை இன்னும் அடங்காத நிலையில், தற்போது திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ள பதிவு புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

Parthiban Blue Sattai Maran

என்ன நடந்தது?

பவன் கல்யாண் நடித்த Ustaad Bhagat Singh படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்த்திபன், தன்னை அறிமுகப்படுத்தும் போது "நான் ஒரு நாயுடு அப்பாயி" என்று கூறியிருந்தார்.

இந்த ஒரு வார்த்தை தான் தமிழகத்தில் பெரிய சர்ச்சையாக மாறியது. "தமிழ்நாட்டில் சாதி பற்றி பேசாத நீங்கள், அங்கு சென்று இப்படிச் சொல்வது ஏன்?" என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

இரண்டு மாநிலம்

தமிழ் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்த இந்த பேச்சுக்கு, ஆந்திராவில் வேற மாதிரி ரியாக்ஷன் கிடைத்தது. அதே மேடையில் பவன் கல்யாண் பற்றி "அவர் அடுத்த முதல்வர் ஆகுவார்" என்று பார்த்திபன் கூறியதும், அங்குள்ள ரசிகர்கள் கைதட்டி வரவேற்றனர். இதனால், ஒரே பேச்சுக்கு இரண்டு மாநிலங்களில் முற்றிலும் வேறுபட்ட எதிர்வினை உருவானது.

மன்னிப்பு கேட்டும் சர்ச்சை குறையவில்லை

இந்த விவகாரம் பெரிதாகியதும், பார்த்திபன் சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்தார். "எந்த உள்நோக்கமும் இல்லாமல் தான் அந்த வார்த்தையை பயன்படுத்தினேன். இனி இப்படிச் சம்பவம் நடக்காது" என்று அவர் கூறியிருந்தாலும், ரசிகர்கள் அதை முழுமையாக ஏற்க தயாராக இல்லை.

ப்ளூ சட்டை மாறன்

இந்நிலையில், திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பதிவில், "எப்போதாவது தவறினால் பரவாயில்லை... அடிக்கடி தவறுது" என்று சுருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இந்த ஒரு வரி பதிவு தான் தற்போது வைரலாகி வருகிறது. அவர் ஏற்கனவே பலமுறை பார்த்திபண்ணி சீண்டி போஸ்ட் போட்டு இருக்கிறார். அந்த வரிசையில் இப்போதும் அவர் கருத்து தெரிவித்திருக்கிறார். இதனால் சிலர் பார்த்திபனே மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடித்து வைத்து விட்டார். இவர் எதற்கு இதை சீண்டி பார்க்கிறார் என்று ப்ளூ சட்டை மாறனை திட்டி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் இரு தரப்பு கருத்து

இந்த பதிவை ஆதரித்து சிலர், சில நாட்களுக்கு முன்புதான் திரிஷா பற்றி பேசி சர்ச்சை உருவானது அது முடிவதற்குள், "மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்குவது தவறே" என்று கூறுகின்றனர். மற்றொரு தரப்பு, "ஒரு மனிதர் மன்னிப்பு கேட்ட பிறகும் தொடர்ந்து விமர்சிப்பது சரியா?"
என்று கேள்வி எழுப்புகின்றனர்.

தொடர்ந்து சர்ச்சையில் பார்த்திபன்

சமீப காலமாகவே பார்த்திபன் பெயர் பல சர்ச்சைகளில் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. முன்னதாக திரிஷா கிருஷ்ணன் தொடர்பான கருத்து, அதன் பின்னர் சாதி பேச்சு-இப்படி தொடர்ந்து விவாதங்களில் சிக்கியுள்ள நிலையில், இந்த புதிய விமர்சனமும் அந்த பட்டியலில் சேர்ந்து விட்டது.

ஒரு மேடையில் சொன்ன ஒரு வரி... அதற்கு பிறகு வந்த விளக்கம்... இப்போது அதற்கு மேலாக வரும் விமர்சனங்கள்... இப்படி பார்த்திபன் விவகாரம் இன்னும் பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதில் ப்ளூ சட்டை மாறன் பதிவு புதிய தீப்பெட்டியாக மாறியுள்ளது. இந்த சர்ச்சை இங்கேயே முடிவடையுமா? அல்லது இன்னும் நீளுமா? என்பதே இப்போது கேள்வியாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+