"அன்னைக்கு காரி துப்பினவங்க... இப்போ போட்டோ எடுக்க வர்றாங்க!" முதலமைச்சருக்காக வருத்தப்பட்ட பெப்சி விஜயன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய பெயராக இன்று முதலமைச்சர் விஜய் பார்க்கப்படுகிறார். நடிகராக இருந்தபோது அவரை ஆதரித்தவர்களும் இருந்தார்கள், கடுமையாக விமர்சித்தவர்களும் இருந்தார்கள். ஆனால் இன்று சூழ்நிலை முற்றிலும் மாறிவிட்டது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, தினமும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில், கடந்த காலத்தில் விஜயின் அரசியல் பயணத்தை கேலி செய்தவர்கள், அவரது வெற்றியை சந்தேகித்தவர்கள், தேர்தலுக்கு முன்பு கடுமையாக விமர்சித்தவர்கள் கூட இன்று அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த விவகாரம் குறித்து தற்போது சண்டைக்கலை இயக்குநரும் நடிகருமான பெப்சி விஜயன் பேசியிருக்கும் கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijay Pepsi Vijayan Karunas Tamil Politics TVK

விஜயை கடுமையாக விமர்சித்த கருணாஸ்

தமிழக அரசியலில் விஜய் களமிறங்கிய ஆரம்ப நாட்களிலிருந்தே அவரது அரசியல் வெற்றி குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியானது. அந்த சமயத்தில் நடிகரும் அரசியல்வாதியுமான கருணாஸ் பல இடங்களில் விஜயை விமர்சித்திருந்தார்.

"கூட்டம் கூடுறதெல்லாம் வோட்டா மாறிடாது" என்று அவர் வெளிப்படையாக கூறியிருந்தார். மேலும் சில அரசியல் விவகாரங்களிலும் விஜயின் நிலைப்பாடுகளை விமர்சித்து பேசியிருந்தார். அந்த வீடியோக்கள் அனைத்தும் தேர்தல் காலத்தில் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டன.

முதலமைச்சரான பிறகு நடந்த சந்திப்பு

ஆனால் சமீபத்தில் நடிகர் நாசருடன் இணைந்து கருணாஸ், முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்தார். அந்த சந்திப்பின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. அதைத்தொடர்ந்து, "அன்னைக்கு விமர்சனம்... இன்னைக்கு சந்திப்பு" என்ற விவாதம் இணையத்தில் கிளம்பியது.

சிலர் அதை சாதாரண மரியாதை சந்திப்பு என்றனர். சிலர் அரசியலில் இது இயல்பான விஷயம் என்றனர். ஆனால் விஜயின் ஆரம்பகால அரசியல் பயணத்தை நெருக்கமாக பார்த்தவர்கள் பலருக்கு இந்த காட்சி வேறொரு உணர்வை கொடுத்துள்ளது.

Vijay Pepsi Vijayan Karunas Tamil Politics TVK

உருக்கமாக பேசிய பெப்சி விஜயன்

இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய பெப்சி விஜயன், தனது ஆதங்கத்தை மறைக்காமல் வெளிப்படுத்தியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, "விஜய் சார் ஜெயிக்கிறதுக்கு முன்னாடி சினிமாவில் இருக்கிற பல நடிகர்கள் அவருக்கு ஆதரவு கொடுக்கல."

"அன்னைக்கு காரி காரி துப்புனவன் எல்லாம் இன்னைக்கு அவர் முதலமைச்சர் ஆனதும் போய் பார்க்கிறான். நமது துறையில் இருக்கிறவங்களே நமக்கு ஆதரவு தரலையே என்று அவருக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்..? அவருக்கு வலிக்குதோ இல்லையோ... எங்கள மாதிரி ஆட்களுக்கு வலிக்குது."
"அன்னைக்கு அவ்வளவு திட்டுன இல்ல... இன்னைக்கு ஏன் போய் பாக்குற?, "உங்களுக்கெல்லாம் ஒரு மனசாட்சி வேணாமா?" என்று மிகவும் உணர்ச்சிகரமாக பேசியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலை

பெப்சி விஜயனின் இந்த பேச்சு தற்போது விஜயின் அரசியல் பயணத்தை மீண்டும் நினைவுபடுத்தி வருகிறது. தேர்தலுக்கு முன்பு விஜயின் வெற்றி வாய்ப்பை கேள்விக்குறியாக பார்த்தவர்கள் கூட இன்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதனால் சமூக வலைதளங்களில், "வெற்றி பெற்ற பிறகு அனைவரும் அருகில் வருவார்கள். தோல்வி காலத்தில் யார் இருந்தார்கள் என்பதுதான் முக்கியம். விஜய்க்கு எதிராக பேசியவர்கள் இன்று புகைப்படம் எடுக்க வருவது காலத்தின் பதில்"என்ற கருத்துகளும் பரவி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+