அச்சச்சோ தங்கச்சி குடிக்கறாளே...!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியல் மர்மம் நிறைந்ததா, நீலாம்பரி நிலாவை தன் மகனுக்கு கட்டாய கல்யாணம் பண்ணிவைக்க துடிப்பதா இருக்கறதுனால சீரியல் நல்லாருக்கு.
நிலாவின் காதலன் கார்த்திக்கை நீலாம்பரி கடத்தி வச்சுடறாங்க. அதுக்கு முன்னால நிலாவுக்கு, சஞ்சய்க்கும் நடக்க இருந்த எங்கேஜ்மென்ட் மோதிரம் காணாம போனதுல நின்னு போயிருது.
அந்த மோதிரத்தை சுட்டது, அக்காவுக்கு பேசி முடிக்க இருக்கும் சஞ்சயை காதலிக்கும் நிலாவின் தங்கச்சி ஸ்வேதாதான்.
பையன் கேட்டானே ஒரு கேள்வி... சொன்னானே ஒரு வார்த்தை... நெஞ்சுல சுருக்!
நிலாவை வெளியில அழைச்சுக்கிட்டு போயிட்டு வரேன்னு சஞ்சய் சொல்றான். நிலாவின் அம்மா ஒத்துக்கறாங்க. ஆனா, நிலாவுக்கு இஷ்டம் இல்லை. நீலாம்பரி சும்மாதான்ம்மா.. இதுல வேற ஒண்ணும் இல்லை.. நீ போயிட்டு வான்னு சொல்றாங்க.
நிலா தங்கச்சி ஸ்வேதாவும், தம்பியும் கூட வந்தாதான் போவேன்னு சொல்ல, ஸ்வேதாதான் காத்துகிட்டு இருக்காளே... உடனே கிளம்பறாங்க. அங்கே போனா சஞ்சய் கூட்டிகிட்டு போன இடம் பார். நிலா டிரிங்ஸ் எடுத்துக்கலை
ஸ்வேதாவும், தம்பியும் எடுத்துக்கறதை பார்த்த நிலா சத்தம் போட, ரெண்டு பேரும் மதிக்கலைங்க. அதிலும் தங்கச்சி ஸ்வேதா இருக்காளே..அவ சஞ்சய் கூட குடிச்சுட்டு ஆட்டமும் போடறா.
தனியாக வெளியே வந்து நின்ன பசங்க நிலாவை டீஸ் பண்றாங்க. இதை பார்த்த நீலாம்பரியின் தம்பி நிலாவை காப்பாத்தி வீட்டில் விட்டுட்டு போறான். பாருக்கு கூட்டிட்டு போனது தெரிஞ்சும் நிலாவின் அம்மா இதெல்லாம் பணக்கார வீட்டுல சகஜம்தானேன்னு சொல்றாங்க.
நிலா பாவம், அப்போ கூட என் மேல இரக்கமே இல்லையாம்மா உங்களுக்குன்னு நிலா சொல்லிட்டு அழறா.