விஜய் பிரண்ட் சஞ்சீவ்வை சுற்றும் பிரச்சனை.. உண்மை தெரியாமல் பேசாதீங்க! ஓபனாக உடைத்து பேசிய ப்ரீத்தி சஞ்சீவ்
சென்னை: நடிகர் விஜய் மற்றும் அவரது நெருங்கிய நண்பரான சஞ்சீவ் குறித்து பல ஆண்டுகளாக பரவி வரும் வதந்திகள் மற்றும் ட்ரோல்கள் குறித்து, சஞ்சீவின் மனைவி ப்ரீத்தி சஞ்சீவ் சமீபத்திய பேட்டியில் விரிவாக பேசியுள்ளார். இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்று வருகிறது.

விஜயின் நண்பர் சஞ்சீவ்
பேட்டியில் ப்ரீத்தி கூறியதாவது, தனது கணவர் சஞ்சீவ் மற்றும் விஜய் இருவரும் சிறு வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இருப்பினும், சஞ்சீவ் பொதுவெளியில் விஜய் குறித்து பேசும் போது சமூக வலைதளங்களில் ட்ரோல்கள் அதிகமாக வருகின்றன. "அவர் விஜயை பின்பற்றுகிறார், அவரைப் போல நடிக்கிறார்" போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆரம்பத்தில் இத்தகைய விமர்சனங்களை கவனித்து இருக்கிறேன் ஆனால் இப்போ எல்லாம் அதை கண்டுக்கிறதே இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
உண்மை இதுதானா?
மேலும், சஞ்சீவ் சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்துவதில்லை என்றும், அவரது சோசியல் மீடியா அக்கவுண்டில் முக்கியமான பதிவுகளை நான்தான் போஸ்ட் போடுகிறேன் என்று கூறினார். இதனால், சமூக வலைதளங்களில் வரும் நெகட்டிவ் கருத்துக்கள் அவரை நேரடியாக பாதிக்கவில்லை என்றும், அவற்றை தானே பார்த்து வருவதாகவும் விளக்கினார். உண்மை நிலை தெரியாமல் சிலர் தவறாக விமர்சிப்பது வருத்தமளிக்கிறது என்றும் கூறினார்.
விஜய் சஞ்சீவ் இணைந்து நடித்த படங்கள்
நடிகர் விஜய் மற்றும் சஞ்சீவ் இடையேயான நட்பு தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. இருவரும் இணைந்து நடித்த பத்ரி மற்றும் மாஸ்டர் போன்ற பல படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. தனது தொழில்வாழ்க்கை குறித்து பேசும்போது, ப்ரீத்தி சஞ்சீவ் பல ஆண்டுகளாக சின்னத்திரையில் நடித்து வருவதாகவும், தற்போது மூன்று முடிச்சு என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருவதாகவும் தெரிவித்தார். குடும்பங்களில் சீரியல்கள் எவ்வாறு இயல்பாக இடம்பிடிக்கின்றன என்பதையும் சிரிப்புடன் பகிர்ந்தார்.
சீரியல் அனுபவம்
அரசியல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, ஆரம்பத்தில் தமக்கு அரசியல் குறித்து அதிக புரிதல் இல்லை என்றும், கமல்ஹாசன் அரசியலுக்கு வந்த பிறகு தான் அதைப் பற்றி அறிந்து கொள்ள தொடங்கியதாகவும் ப்ரீத்தி கூறினார். மேலும், தற்போது அரசியலில் செயல்பட்டு வரும் விஜய் குறித்து பேசும்போது, அவர் எந்த உயரத்திற்குப் போனாலும், தங்களுடைய உறவு மாற்றமில்லை என்றும், ரசிகர்களைப் போல மரியாதை கொண்ட உறவாகவே தொடரும் என்றும் பேசி இருக்கிறார் .
மொத்தத்தில், சஞ்சீவ் - விஜய் நட்பு குறித்து பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ப்ரீத்தி சஞ்சீவ் அளித்த இந்த பேட்டி அமைந்துள்ளது.
-
சொன்னா கேளுங்களே முடியலை.. திருப்பூருக்கு வரும் தவெக விஜய்! கடைசி வரை இழுபறி! ஆனந்த் சொன்ன வார்த்தை! -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
கன்னியாகுமரியில் அதிமுக - பாஜக கூட்டணி வாக்குகளை விஜய் கைப்பற்றுகிறார்.. பத்திரிகையாளர் சுவாமிநாதன்! -
திருப்பரங்குன்றம்: அவ்வளவு பஞ்சாயத்து நடந்துட்டு இருக்கு.. விஜய் மட்டும் வாய் திறக்கலையே! -
விஜய்யின் தவெக கட்சியில் இணைந்த பிக் பாஸ் தினேஷ்.. அதற்கு அவர் சொன்ன காரணம் தான் ட்விஸ்ட் -
சிக்னலில் நின்ற விஜய் வாகனம்.. யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென தவெக தொண்டர் செய்த செயல்! -
கன்னியாகுமரியில் விஜய் ஓட்டிய சைக்கிள்… விலை இவ்வளவு தானா? அதை வாங்கும் போது நடந்த சம்பவம் -
விஜய் என்கிட்ட கேட்ட கேள்வி.. நான் எதிர்பார்க்கல! சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்! ஓபனாக பேசிய ராதாரவி -
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெல்வாரா? வெறும் 20 பேர்தானாமே! குஷியில் இனிகோ இருதயராஜ்! -
ஜனநாயகன் படத்தை இணையத்தில் லீக் செய்தது விஜய்யா? சென்சாரா? புது பாயிண்ட் சொல்லும் எஸ்.வி.சேகர் -
ஜனநாயகன் படம் ஹைதராபாத் ஸ்டுடியோவில் கசிந்ததா.. எடிட்டர் சங்கம் அளித்த விளக்கம் -
ஆதார் கார்டு போல தமிழ்நாடு சிட்டிசன் பிரிவலன்ஞ் கார்டு வழங்கப்படும்.. குமரியில் விஜய் பேச்சு












Click it and Unblock the Notifications