Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திரை உலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதின் வரலாறு...திறமையின் பெருமை

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய திரைப்படத் துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்க்களுக்கு இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருந்தாகும்.

இந்த விருதானது திரைப்படத் துறையின் தந்தை என கருதப்படும் தாதா சாகேப் பால்கே என்பவரின் நினைவாக வழங்கப்படுகிறது.

இந்த விருதினை இந்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் வாங்கி இருக்கிறார்.

திரைத் துறையின் உயரிய விருது

திரைத் துறையின் உயரிய விருது

இந்திய திரைப்படத் துறையை உலக அளவில் கௌரவிக்கும் விதமாக திரைத் துறையில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு இந்திய அரசால் ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதினை இதுவரைக்கும் 50 வெற்றியாளர்கள் வாங்கியிருக்கின்றனர். இதில் இந்த முறை நடிகர் ரஜினிகாந்த் இந்த விருதினை வாங்கி இருக்கிறார். இது இவருடைய ரசிகர்களுக்கு மட்டுமின்றி தமிழ் திரை உலகிற்கும் மகிழ்ச்சியை கொடுக்கும் விதமாக இருந்து வருகிறது.

உச்சபட்ச விருதின் பெருமை

உச்சபட்ச விருதின் பெருமை

சினிமா உலகின் உச்சபட்ச விருதான தாதா சாகேப் பால்கே விருது பெறுவது என்பது சினிமா உலகின் நடிப்பு,இயக்கம், இசை பாடல் என்று அனைத்து துறையினருக்கும் இருக்கும் மிகப்பெரிய கனவு ஆகும். இந்த விருதானது இந்திய சினிமாவின் தரத்தை உலகறியச் செய்த ஜாம்பவான்களே இதுவரை பெற்று வந்துள்ளனர்.1969 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் வரும் இந்த விருதினை பிற மொழியை சார்ந்த பிரபலங்களே பெரும்பாலும் பெற்றிருந்தாலும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் இயக்குனர் இமயம் கே. பாலச்சந்தர் போன்ற தமிழ் சினிமாவின் காட்பாதர்களும் இவ்விருதினை பெற்று தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்துள்ளனர். இறுதியாக சலங்கை ஒலி,சங்கராபரணம்,சிப்பிக்குள் முத்து, போன்ற தமிழ் சினிமாவின் எவர்கிரீன் படங்களை இயக்கிய கே. விசுவநாதன் (யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவின் தாத்தாவாக வருபவர்) அவர்கள் பெற்றிருந்தாலும், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி திரையுலக சார்பாகவும் சேர்த்து பெற்றிருந்தார்.

இந்திய சினிமாவின் தொடக்கம்

இந்திய சினிமாவின் தொடக்கம்

நாசிக்கில் பிறந்த தாதாசாகேப் பால்கே இந்தியாவிற்கு சினிமாவை முதல் முதலில் அறிமுகப்படுத்தியவர். தொடக்கத்தில் வெளிவந்த படங்கள் எதுவும் கலர் படங்கள் இல்லை, அதுமட்டுமல்லாமல் ஒலியும் இல்லாமல் ஊமை படங்களாக தான் இருந்தன. அந்த நேரத்தில் பால்கே தனது தீவிர முயற்சியினால் சினிமாவை எழுதி இருக்கிறார். அவருடைய முதல் திரைப்படத்திற்கு அரிச்சந்திரா என்று பெயரும் வைத்திருக்கிறார். இந்த படத்திற்கு நடிகர்களை வெளியே இருந்து தேடாமல் தனது குடும்ப உறுப்பினர்களில் 18 பேரை இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். இதுதான் முதல் திரைப்படமாக இருந்தாலும் ஒரு குடும்பப் படமாக இருந்தது. அதனால் முதல் இந்திய சினிமா ஒரு குடும்பப் படம் என்று இப்ப வரைக்கும் அனைவராலும் கூறப்பட்டு வருகிறது. அதனால் தான் தாதாசாகேப் பால்கே இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார்

ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்

ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்

சினிமா என்றால் பலருக்கும் பிடித்த ஒன்று தான். அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை பலரும் இதற்கு அடிமையாக இருந்து வருகின்றனர். தாங்கள் ரசித்த சினிமா துறையில் உள்ளவர்களின் மீது ரசிகர்கள் பெரிய அளவில் அன்பு வைத்து வருகின்றனர். இதன் காரணமாக தான் பல நடிகர்கள் அரசியல் கட்சி தலைவர்கள் ஆகவும் மாறிவிடுகிறார்கள். அந்த அளவிற்கு ரசிகர்கள் சினிமாவின் மீது மோகத்தில் இருக்கும்போது சினிமா துறைக்கு கிடைக்கும் விருதுகளும் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. சினிமா துறையில் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதினை நடிகர் ரஜினிகாந்த் வாங்க இருப்பது அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரிய கொண்டாட்டத்தை கொடுத்திருக்கின்றது. சமூக வலைத்தளத்தில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து ரசிகர்கள் பலர் பட்டையை கிளப்பி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+