Radhakirushnan Serial: லாக்டவுன்...ஷூட்டிங் ஸ்பாட்டில் ராதாகிருஷ்ணன் சீரியல் குழுவினர்!
டெல்லி: ராதாகிருஷ்ணன் நடிகர்கள் சுமேத் முட்கல்கர், மல்லிகா சிங் மற்றும் 180 பேர் கொண்ட குழுவினர் லாக்டவுன் காலத்தில் படப்பிடிப்பு இடத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
கோவிட் 19 தொற்று காரணமாக லாக்டவுன் அமலில் இருக்கும் நிலையில், பிரபல புராண சீரியலான ராதாகிருஷ்ணன் நடிகர்கள் மற்றும் குழுவினர் ஏறக்குறைய ஒரு மாதமாக உமர்கானில் உள்ள படப்பிடிப்பு இடத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.
முன்னணி நடிகர்களான சுமேத் முட்கல்கர், முறையே கிருஷ்ணா மற்றும் ராதாவாக நடிக்கும் மல்லிகா சிங், என்று ராதாகிருஷ்ணன் குழுவினர் மொத்தம் 180 பேர் அதே செட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மல்லிகா சிங் தாய்
சீரியலில் ராதாவாக நடிக்கும் மல்லிகா சிங் எப்போதும் தனது தாயுடன் ஷூட்டிங் செல்வது வழக்கம் என்பதால் அம்மா இப்போதும் உடன் தங்கி இருக்கிறார் என்று கூறி உள்ளார். ஆனால் குடும்பத்தின் மற்ற நபர்கள் லாக்டவுன் நேரத்தில் அங்கங்கு இருந்தாலும். மும்பை வந்து சேர்ந்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.

எப்போதும் ஷூட்டிங்
எப்போதும் ஷூட்டிங் என்று குடும்பத்தை விட்டு தனித்து சென்று வேலை பார்க்கும் மற்ற நடிகர் நடிகைகள் இந்த லாக்டவுன் பீரியடில் கூட குடும்பத்துடன் இல்லாமல் இங்கு வந்து மாட்டிக்கொண்டனர் என்று தன்னுடன் தங்கி இருக்கும் 180 நடிகர்கள் பற்றி வருத்தப்பட்டு கூறி இருக்கார்.

தயாரிப்பாளர் பொறுப்பு
தங்கள் குழுவினரை நிகழ்ச்சித் தயாரிப்பாளர் பொறுப்பாக கவனித்துக் கொள்வதாகவும், வேண்டிய ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் மல்லிகா கூறி இருக்கார். மருத்துவர்கள் கண்காணிப்பில் அனைவரும் நலமுடன் இருக்கிறோம் என்றும் கூறி உள்ளார்.

சீரியல் ஷூட்டிங் செட்
சீரியல் ஷூட்டிங் எடுக்கப்பட்டு வரும் செட்டில்தான் அனைவரும் தங்கி இருக்கிறோம் என்று கூறி இருக்கும் மல்லிகா, செட்டுக்கு தினமும் டாக்டர் வந்து பார்க்கிறார் என்றும், உணவு மற்றவற்றுக்கு தங்களுக்கு எந்தவித குறையும் இல்லை என்றும் கூறி உள்ளார். அனைவரும் தங்களது ரயில் டிக்கெட்டுகளை கேன்சல் செய்து விட்டோம் என்றும் மல்லிகா சிங் கூறியுள்ளார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications