நீங்க நேரில் விட.. டிவியில்தான் ரொம்ப அழகா பேசறீங்க.. புன்னகை இதழ் விரித்த ரோஜா!
சென்னை: சன் டிவியின் லொள்ளுப்பா நிகழ்ச்சியில் நடிகை ரோஜாவும் நடுவர். இது நகைச்சுவை நிகழ்ச்சி என்பதால் ஒவ்வொரு வார
எபிசோடிலும் நகைப்புக்கு உரிய சில விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.
அவர் பேசும் கொஞ்சு தமிழ் கேட்க அருமையாக இருக்கிறது. நாஞ்சில் சம்பத் சிறப்பு விருந்தினராக வந்திருந்ததால், அரசியல் குறித்தும் அவர் பேச நேர்ந்தது. ஒரு கட்சி பிரச்சாரத்துக்கு என்று முதன் முதலில் அரசியலை ஆரம்பித்தவர் ரோஜா.
பிரச்சாரத்துக்கு போகும்போது ரொம்ப ஜாலியா இருக்கும், எழுதி கொடுத்ததை பேசிடுவோம், கைத்தட்டல் வாங்கிடுவோம். ஆஹா நடிகை அழகா இருக்காங்களேன்னு கூட்டமும் வரும்.
ஆனா, நாம ஒரு கட்சியில் சேர்ந்து நமக்காக நாம் பேசும்போதுதான் ரொம்ப இன்சல்ட் அனுபவிக்க வேண்டி வரும். இதெல்லாம் சகஜம்னு எடுத்துக்கிட்டா அரசியலில் பொழைச்சோம்.. இல்லேன்னா கஷ்டம்.
அப்படீன்னா ராத்திரி 9.30 மணிக்கு வரப் போவது யாரு.. பரபரக்கும் டிவி உலகம்!
இப்போ நான் எம்எல்ஏ வா இருக்கேன். சொந்த காசை போட்டு தொகுதிக்கு நல்லது பண்ணினாலும், தொகுதி நிதியில் நல்லது செஞ்சாலும் ம்ம் சும்மா செய்யறாங்களா, ஓட்டு வாங்கறதுக்கு செய்யறாங்கன்னு சொல்லுவாங்க.
இதை விட காமெடி என்னன்னா நீங்க நேரில் பேசறதை விட டிவியில பேசறப்போ நல்லாருக்குன்னு சொல்லுவாங்க. ஏன்னு கேட்டா, நாங்க டிவியை நிப்பாட்டிடுவோம்லனு சொல்லுவாங்க. இப்படி காண்டுல கலாய்ப்பாங்க என்று சிரித்தபடி கூறினார்.