தூங்க கூட முடியல.. ரொம்ப டார்ச்சர் பண்ணாங்க.. விலகலுக்கு இதுதான் காரணம்.. உண்மைகளை உடைத்த ரியா
ராஜா ராணி சீரியலில் இருந்து ரியா விலகியதற்கு காரணம் பற்றி கூறியிருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2 சீரியல் இருந்து ரியா விலகியதற்கு உண்மையான காரணம் இதுதான் என்று கூறியிருக்கிறார்.
ஒரே நாளில் எனக்கு இரண்டு முறை வேலை பார்க்கும் நிலை வந்தது என்றும் தனக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கவில்லை என்றும் பல காரணங்களை ரியா கூறியிருக்கிறார்.
தொடர்ந்து வேலை பார்த்து வந்ததால் உணவு கட்டுப்பாடு இல்லாமல் தான் உடல் எடை கூடி விட்டதாகவும் அதனால் தன்னுடைய கான்பிடென்ட் குறைந்து இருக்கிறது என்றும் ரியா கூறி இருக்கிறார்.

விலகலுக்கான காரணம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் இரண்டாவது முறையாக சந்தியா கேரக்டரில் நடித்து வந்த ரியா சமீபத்தில் வீடியோ வெளியிட்டு விலகி இருந்தார். ஆனால் அப்போது அதற்கு என்ன காரணம் என்று கூறாமல் இருந்த நிலையில் முதல் முறையாக தான் எதற்காக சீரியலை விட்டு விலகினேன் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் தனக்கு ஒரு நாள் கூட லீவு கொடுக்கவில்லை என்றும் ஆரம்பத்தில் தனக்கு மாதத்தில் 15ஆம் நாளில் இருந்து 30-ஆம் நாள் வரைக்கும் தான் கால்ஷீட் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆலியா மானசா வெளியேறிய நேரத்தில் கைவசம் எந்த எபிசோடுகளும் இல்லை என்பதற்காக என்னை இரண்டு ஷிப்ட் வேலை பார்க்க சொன்னார்கள். நானும் பார்த்தேன் பிறகு சில மாதங்கள் கழித்து எனக்கு ஒரு சில நாட்கள் விடுமுறை தந்திருந்தார்கள்.

அதிகப்படியான நேரம்
ஆனால் அதற்குப் பிறகு காலை தொடங்கி இரவு வரை முழு நேரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். மற்றவர்களுக்கு ஆறு மணி உடன் முடிவடைந்து விடும். முதலில் வளசரவாக்கம் பகுதியில் சூட்டிங் எடுத்து கொண்டிருந்தனர். ஆனால் அதற்குப் பிறகு போலீஸ் ட்ரைனிங் காக வண்டலூர் பகுதியில் சூட்டிங் மாற்றினார்கள். காலை 7:30 மணிக்கு சூட்டிங் தொடங்கிவிடும் என்பதால் நான் வீட்டில் இருந்து 6:30 மணிக்கு எழுந்து செல்ல வேண்டும். அப்படி சென்றாலும் ஆறு முப்பது மணிக்கு மற்றவர்களுக்கு சூட்டிங் முடியும் நிலையில் எனக்கு மட்டும் இரவு 9 மணி 10 மணி வரை சூட்டிங் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.
சூட்டிங் முடிவடையும் நிலையில் நான் மட்டும் இரவு ஒன்பது முப்பது வரை சூட்டிங் நடித்துக் கொண்டிருந்தேன். இதனால் எனது குடும்பத்தோடு நான் வளர்க்கும் செல்லப் பிராணியிடம் கூட என்னால் நேரம் செலவழிக்க முடியவில்லை.

விடுமுறையே கிடையாது
குறிப்பாக டிரைனிங்கில் அந்த அறையில் சரவணன் ஆங்காங்கே தோன்றும் காட்சிகள் எல்லாம் இரவு 10:00 மணி வரை சூட்டிங் எடுக்கப்பட்டது. இதனால் என்னால் போனில் கூட என் குடும்பத்துடன் பேச முடியவில்லை. எனக்கு இது முதல் சீரியல் என்பதால் என்னால் இந்த சூழ்நிலைகளை கையாளவும் தெரியவில்லை. இன்றைக்கு எடுக்கும் சூட்டிங் வைத்து தான் நாளை அடுத்த நாள் சீரியல் ஒளிபரப்பாகும் எனவே கடைசி நிமிடம் தயாரித்து சீரியல் எடுக்கப்பட்டது. எனக்கு மிகவும் மன உளைச்சலாக இருந்தது. உடைமாற்ற கூட நேரம் கொடுக்க முடியாமல் என்னை அவசரப்படுத்தினார்கள். இதனால் தான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், மாதத்தில் ஒன்று முதல் 15 நாட்கள் லீவு தர வேண்டும். 15 முதல் 35 ஆம் தேதி வரை சூட்டிங் ஆனால் எனக்கு ஒன்று முதல் 15 நாட்கள் லீவு கிடைக்காது. ஆறு நாட்கள் மட்டுமே லீவு கிடைக்கும் அதுவும் இடையில் ஒரு நாள் கிடைக்கும். அந்த லீவு போவதே தெரியாது. அடுத்த நாள் கிளம்பி சூட்டிங் செல்வது போல தான் இருக்கும்.

சீரியல் நேரம் மாற்றம்
இதே நிலைமை தொடர்ந்து கொண்டிருந்ததால் எனக்கு தூக்கம் வரவில்லை. பிரஷர் அதிகமானது மன அழுத்தம் அதிகமானது. இதனால் எனக்கு உடல் எடை ஏறிக்கொண்டே போனது என்னால் உணவு பழக்கத்தையும் டயட்டையும் ஃபாலோ பண்ண முடியவில்லை. இதனால் தான் சீரியலை விட்டு விலகினேன். நான் சீரியலை விட்டு விலகிய போது என்னை திருப்தி படுத்திக் கொள்ளும் வகையில் எந்தவித முயற்சியும் அவர்கள் எடுக்கவில்லை. அது மட்டுமல்லாமல் இந்த சீரியல் விரைவில் மதிய நேரத்திற்கு மாற்றப்பட இருக்கிறது. அதனால் இந்த சீரியலின் புகழ் குறையலாம் என்றும் அவர் கூறினார்.
-
வருணுடன் திருமணத்தை நிறுத்தியது இதனால்தான்! அப்பவே வெளிப்படையாக பேசிய திரிஷா.. காரணம் இதுதானாமே! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்!












Click it and Unblock the Notifications