Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முட்டாள்தனமாக முடிவெடுத்த சிவகாமி.. அதிர்ச்சியில் சந்தியா.. சரவணன் முடிவால் எதிர்பாராத திருப்பம்

சந்தியா என்கவுண்டர் செய்ததால் பெரிய பாவம் செய்துவிட்டார் என்று அவரை சிவகாமி திட்டுகிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2இல் மார்ச் எட்டாம் தேதிக்கான எபிசோட் வெளியாகி இருக்கிறது.

சந்தியா மார்க்கெட்டில் ரவுடிசம் பண்ணிக் கொண்டிருந்த ரவுடியை என்கவுண்டர் செய்து இருக்கிறார்.

என்கவுண்டர் செய்தது பாவம் என்றும் சந்தியா மற்றும் சரவணனை சிவகாமி திட்டுகிறார்.

என்கவுண்டர் செய்த சந்தியா

என்கவுண்டர் செய்த சந்தியா

ராஜா ராணி சீரியலின் இரண்டாவது பாகத்தில் இன்றைய எபிசோட்டில் ஆரம்பத்தில் எஸ் பி ஏற்கனவே என்கவுண்டர் செய்ய சொன்ன ரௌடி மார்க்கெட்டுக்குள் புகுந்து இருக்கிறார். அங்கே சத்யாவின் போலீஸ் படைகள் அந்த ரவுடியை சுற்றி வளைக்கின்றனர். அப்போது அதே மார்க்கெட்டில் சிவகாமியும் வந்திருக்கிறார். ரவுடிக்கு சந்தியா போலீஸ் தன்னை சுற்றி வளைத்து விட்டது தெரிந்து, அங்கே ஓடிக்கொண்டிருந்த ஒரு நபர் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொண்டிருக்கிறார். பிறகு அவரை பிடிக்க வந்த ஒரு போலீஸ் ஆபீஸரை கத்தியால் வெட்டி விட்டு அவருடைய முதுகில் குத்த போகும் போது சந்தியா அந்த ரவுடியை என்கவுண்டர் செய்கிறார்.

சிவகாமியின் கோபம்

சிவகாமியின் கோபம்

அடுத்ததாக வீட்டுக்கு வேகமாக ரத்த கரையோடு வரும் சிவகாமியை பார்த்து அவருடைய கணவர் அதிர்ச்சியாகி என்ன ஆனது என்று கேட்க, அங்கு இருக்கும் தண்ணீரை எடுத்து தலைமுழுகியப்படி மார்க்கெட்டில் நடந்த விஷயத்தை கூறுகிறார். இதுக்கு தான் நான் நம்ம வீட்டில் போலீஸ் வேண்டாம் என்று சொன்னேன். இப்போ சந்தியா செஞ்ச பாவம் என்னுடைய மகனையும் சேர்ந்து பிடித்து விடும். என்னுடைய மகனுக்கு இப்படி ஒரு பொண்ணா கிடைக்க வேண்டும்? என்று சிவகாமி புலம்பியபடி புடவையை மாற்றிக் கொண்டு வந்து தான் கட்டி இருந்த புடவையை நடுத்தெருவில் வைத்து தீ வைத்து கொளுத்துகிறார்.

சந்தியாவின் விளக்கம்

சந்தியாவின் விளக்கம்

பிறகு சந்தியா அங்கே வர என்ன நடந்தது என்று சரவணன் கேட்க, இது எனக்கு எஸ் பி கொடுத்த ஆர்டர். எஸ்பி சொன்ன வேலையை தான் நான் சென்று இருக்கிறேன். நான் அப்பொழுது சுடவில்லை என்றால் அந்த ரவுடி இன்னும் பல பேரை வெட்டி இருப்பான் என்று தன்னுடைய நிலைமை எடுத்துச் சொல்ல, சரவணன் சந்தியாவுக்கு ஆறுதலாக பேசிக் கொண்டிருப்பதை கேட்டு சாமி கும்பிட்டு படி இருந்த சிவகாமி மீண்டும் வந்து சந்தியாவை திட்டுகிறார்.

சந்தியாவின் வேண்டுதல்

சந்தியாவின் வேண்டுதல்

அடுத்ததாக சந்தியா சரவணன் இடம் நான் மட்டும் அந்த ரவுடியை கொல்லவில்லை என்றால் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியை அவன் வெட்டி இருப்பான். அது மட்டுமில்லாமல் பல குழந்தைகளுடைய வாழ்க்கையை அந்த ரௌடி நாசமாக்கி இருக்கிறான். ஆனாலும் அவன் என்னுடைய கையால் இறந்து இருக்கிறார். அவருடைய குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளின் நிலைமை என்ன ஆகும் அவர்கள் யாரும் கஷ்டப்படக் கூடாது என்று வேண்டிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+