நடிகரின் பண்ணை வீட்டு உல்லாசம்.. ரூ.280 கோடி ரஜினிக்கு சம்பளமா? தமிழகத்துக்கு செய்தது என்ன: பிரபலம்
சென்னை: "ரஜினி படங்களை மக்கள் புறக்கணிக்கணும். ஆனால், சினிமா தியேட்டரில் முதலமைச்சரை தேடுகிற அளவுக்கு அரசியலே தெரியாத மூடர்களின் நாடு இது.. இதன்விளைவுதான் கூலி படத்துக்கு ரஜினியின் 280 கோடி ரூபாய் சம்பளம்.. இது ஏழை விவசாயிகளின் பணம்.. ரஜினிகாந்த்தை தமிழகத்தின் பிதாமகன் என்று நினைக்கிறார்கள்.. திராவிட இயக்கங்கள் தூக்கி பிடிப்பதன் விளைவுதான், 280 கோடி ரூபாய்" என்று பத்திரிகையாளர் பாண்டியன் சாடியிருக்கிறார்.
BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ள பத்திரிகையாளர் பாண்டியன், கூலி படத்தில் மொத்த பட்ஜெட்டுமே ரஜினிக்குதான்.. ரஜினியை காண்பித்துதான் அதை பணமாக்க வேண்டியிருக்கிறது. ஹீரோயினுக்காக, டைரக்டருக்காக படம் ஓடாது..

பிரம்மாண்டங்களை எடுக்கிற டைரக்டர் என்பதைதாண்டி, லோகேஷ் கனகராஜ் ஒன்றுமே இல்லை.. ஸ்ரீதர், பாலச்சந்தர் போல படங்களை எடுத்தவர்கள் கிடையாது.. பல படங்களை வெட்டி ஒட்டி, பிட்டு பிட்டாக சேர்த்து ஒரு படமாக்கி விடுபவர்கள்தான், அட்லி, அருண்குமார் போன்றோர் எல்லாம்.. இது ஒரு மாஃபியா சூதாட்டம்..
ரஜினி ஏழை மக்களுக்கு செய்தது என்ன
280 கோடி வாங்குகிற ரஜினி, வெறும் 20 கோடியாவது இந்த மக்களுக்கு இலவச கல்வி, மருத்துவமனை உதவி செய்திருக்கிறாரா? அந்த 280 கோடியும் ஹவாலாவில் வெளிநாடு முதலீடாக சென்றுவிடுகிறது.
ராகவேந்திரா கல்யாண மண்டபம், அரசுக்கு வரி கட்டுவதேயில்லை.. ஆசிரமம் பள்ளிக்கூடம் ஆசிரம நிலத்தில் உள்ளது.. அட்மிஷன் சீட் ஒரு லட்சத்துக்கு கிடைக்கிறது.. இதுவொரு மேட்டுக்குடி கலாச்சாரம்.. ஆனால், அரசு நிலத்தை ஆக்கிரமித்து பள்ளிக்கூடம் கட்டி, அதற்கு வரிகட்ட முடியாமல் கோர்ட்டுக்கு போனார்கள்.. இந்த மக்களை சுரண்டி வெளிநாடுகளில் முதலீடு செய்பவர்கள்.. இவர்களின் படத்தை 2 ஆயிரம் 3 ஆயிரம் தந்து டிக்கெட் வாங்குகிறார்கள்.
திராவிட இயக்கங்கள்தான் காரணம்
தமன்னா டான்ஸ் இல்லாமல், ரஜினி படம் ஓடாதா? வேற கதையே இல்லையா? சமூக சிந்தனையே இல்லையா? சத்ய ஜித்ரே பற்றி தெரியாதா? எத்தனையோ டைரக்டர்கள் சமூக கருத்துள்ள படத்தை சொல்லியிருக்கிறார்கள்.
ரஜினி படத்தையெல்லாம் மக்கள் புறக்கணிக்கணும். ஆனால், சினிமா தியேட்டரில் முதலமைச்சரை தேடுகிற அளவுக்கு அரசியலே தெரியாத மூடர்களின் நாடு இது.. இதன்விளைவுதான் ரஜினியின் 280 கோடி ரூபாய் சம்பளம்.. இது ஏழை விவசாயிகளின் பணம்.. ரஜினிகாந்த்தை தமிழகத்தின் பிதாமகன் என்று நினைக்கிறார்கள்.. திராவிட இயக்கங்கள் தூக்கி பிடிப்பதன் விளைவுதான், கூலி படத்துக்கு 280 கோடி ரூபாய் சம்பளம்.
ரஜினியின் கடைசி படம்
உலகத்தில் இவ்வளவு பெரிய சம்பளத்தை யாருக்கும் தந்ததே கிடையாது.. எப்படியாவது மிளகாய் அரைத்து விடலாம் என்ற எண்ணம்தான்.. ரஜினி மட்டுமே ஸோலோவாக இப்போதெல்லாம் நடிப்பதில்லை.. அவருடன் 10 நடிகர்கள் வருகிறார்கள்..
ரஜினிக்காக படம் ஓடுவதில்லை. அதனால் பல மாநிலங்களிலிருந்து பிரபலங்களை அழைத்து வந்து மசாலா படமாக தரவேண்டியிருக்கிறது.
70 வயசுல ரஜினியால ஓட முடியல, ஆட முடியல. அதனால் பல டூப்புகளை பயன்படுத்தி ரசிகர்களின் தலையில் கட்டிவிடுகிறார்கள். பாதி ஷூட்டிங், மீதி கம்ப்யூட்டரிலேயே கிராஃபிக்ஸ் செய்துவிடுகிறார்கள். இதுதான் ரஜினியின் கடைசி படம்.. இதற்கு பிறகு வேற யாரும் ரஜினியை வைத்து படம் எடுக்க மாட்டார்கள்" என்றெல்லாம் காட்டமாக கூறியிருக்கிறார்.
எம்ஜிஆர் காது கேளாதோருக்கு பள்ளி
சமீபத்தில்கூட இதேபோல ரஜினி குறித்து விமர்சனங்களை முன்வைத்திருந்தார் தமிழா தமிழா பாண்டியன்.. "சினிமா தொழிலாளர்களுக்காக ரஜினி என்னதான் செய்திருக்கிறார்? எம்ஜிஆரின் காதுகேளாதோருக்கு பள்ளி, கண் பார்வையற்றோர் பள்ளி, ஊனமுற்றோர் பள்ளி என அத்தனையும் இருக்கிறதே? ரஜினியின் இலவச பள்ளி எங்கே? இலவச மருத்துவமனை எங்கே?
ரஜினி படத்துக்கு டிக்கெட் கிடைக்காவிட்டால், உடனே தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதுபோன்ற ரசிகர்களை வைத்து கூலி படத்தை 1000 கோடிக்கு விற்க போகிறார். கொரோனா நேரத்தில் எத்தனை பேருக்கு மருத்துவ உதவி செய்தார் ரஜினி? சென்னையில் வெள்ளம் வந்தபோது எத்தனை கோடி தந்தார்? லிஸ்ட் எங்கே?
பண்ணை வீடு
பல்லாயிரம் கோடி குடும்பத்துக்கு சேர்த்து வைத்துக் கொண்டு, திரைப்பட தொழிலாளர்களுக்கு எதுவுமே செய்யவில்லை. கேளம்பாக்கத்தில் உள்ள ரஜினியின் பண்ணை வீட்டுக்கு செல்பவர்களை எத்தனை மாதம் கழித்து வெளியே அனுப்புகிறார்கள்? அங்கு நடக்கும் ஆட்டம், பாட்டம், மேட்டுக்குடி சீரழிவு கலாச்சாரத்தை வெளியே சொல்லிவிடக்கூடாது என்பதற்காக 6 மாதம் கழித்துதான் அனுப்புகிறார்கள்.. அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கும் வீடு, குழந்தை, குடும்பம் இருக்காதா? இதை பற்றி 500 பக்கம் எழுதலாம்" என்று சாடியிருந்தது நினைவுகூரத்தக்கது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications