குழந்தைப் பருவத்திலும் அதே பாவனை.. அப்பவே அப்படி தானா ராஜுவை பார்த்து திகைத்த ரசிகர்கள்
சென்னை: ராஜுவின் குழந்தைப்பருவ புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் குதூகலித்து வருகின்றனர்.
அதே பார்வையால் அப்போதே அனைவரையும் கவர்ந்து இழுத்திருக்கிறார் என்று பார்ப்பவர்கள் பீல் பண்ணி வருகின்றனர்.

ஐந்தாவது சீசனின் வின்னர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் ஐந்தாவது சீசனின் டைட்டில் வின்னர் ஆக ஜெயித்து இருக்கும் ராஜுவின் குழந்தைப்பருவ புகைப்படத்தை பார்த்து அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பல நாட்களுக்கு பிறகு இவருடைய குழந்தைப்பருவ புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் அதிகமாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அவருடைய புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றது. பார்த்ததும் கண்டுபிடிக்க முடியாத வண்ணம் ராஜுவின் குழந்தைப்பருவம் இருந்தாலும் அவருடைய குறுகுறுவென பார்க்கும் கண்களை பார்த்து ரசிகர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

உழைப்பிற்கு கிடைத்த வெற்றி
கேமரா முன்பு தான் நடித்ததை விடவும் அதற்குப் பின்னாடி தன்னுடைய உழைப்பை அதிகமாக செலுத்தி தற்போது பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்து இருக்கும் ராஜூவிருக்கு அதிகமான ரசிகர்கள் உருவாக்கி வருகின்றனர். சின்னத்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகி முதல் முறையாக ரசிகர்களின் மத்தியில் தன்னுடைய முகத்தை காட்டி இருந்தார். அதற்கு பிறகு இவருக்கு நான்கு வருட போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த ஐந்தாவது சீசனில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து விட்டார்.

வெள்ளித்திரையில் வரும் வாய்ப்பு
இதற்கு முன்பு ஒளிபரப்பான சீசன்களை போலவே இந்த சீசனிலும் ஆரம்பத்திலிருந்து ராஜூ தான் ஐந்தாவது சீசன் வின்னர் என்று ரசிகர்கள் கூறிவந்தனர். ரசிகர்கள் இவருக்கு அளித்த ஆதரவின் காரணமாகவே இவர் அதிகளவில் வாக்குகளை பெற்று இந்த வெற்றி பெற்றிருக்கிறார். இவர் வெற்றி பெற்றதும் வெள்ளித்திரையில் வலம் வர வேண்டும் என்று ரசிகர்கள் பலர் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். ரசிகர்களின் அன்பை பார்த்து இவரும் ஒரு பல நேரங்களில் நெகிழ்ச்சியாக ரசிகர்களுக்கு நன்றி கூறி வருகிறார் .இதுவரைக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வந்த வண்ணமாகவே இவருக்கு இருந்து வருகிறதாம். ஆனால் இவர் இன்னும் எந்த திரைப்படங்களிலும் நடிப்பதற்காக உறுதி செய்யவில்லையாம்.

குழந்தைப்பருவ புகைப்படம்
இவர் மீண்டும் சீரியலில் வருவாரா??என்று இவருடைய சீரியல் ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இவர் வாய்ப்பு கிடைத்தால் வருவேன் என்று கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் தனக்கு பிடித்தமான கதையை கேட்டு அதில் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி ரசிகர்களுக்கு தன்னுடைய வெற்றி மூலமாகவே நன்றி கூறுவேன் என்று கூறியிருக்கிறார். இந்நிலையில் இவருடைய குழந்தைப்பருவ புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வந்து கொண்டிருந்தாலும் இவருக்கு வாழ்த்து மழைகளும் அதிகமாக பொழிந்து வருகிறது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications