மதுரை முத்துவுக்கே.. எடுத்துக் கொடுத்து.. கோர்த்து விட்ட தெறி பேபி.. ரம்யா பாண்டியன்!
சென்னை: விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு சீசன் 9 நிகழ்ச்சியில் மதுரை முத்து, ஈரோடு மகேஷ், ஆதவன், வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.
ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் மதுரை முத்து சொல்லப் போகும் காமெடியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கும் ரசிகர்களை அவர் எப்போதும் ஏமாற்றியதில்லை. மனம் லேசாகும்படி சிரிக்க வைத்துவிடுவார்.
இந்த நிகழ்ச்சியில் ஆன்டிராய்டு போன் பற்றி ஜோக் சொன்னார் பங்கேற்பாளர் ஒருவர்...அப்போது பதிலுக்கு ஜோக் சொன்ன மதுரை முத்துவுக்கே ஒரு ஜோக் எடுத்துக் கொடுத்தார் ரம்யா பாண்டியன்.
பேசணும்னா ரேட் கார்டு
இந்த போன் வந்ததுக்குப் பிறகு பேசணும்னா கூட ரேட் கார்டுப் படிதான் பேசறான்னு சொன்னார். உதாரணமாக சொல்லும்போது கல்யாணம் ஆகி ஆறே மாசத்துல குழந்தை என்னடான்னு கேட்டால் 4ஜி ன்னு சொல்றான்னு சொன்னார். கல்யாணம் ஆகி 18 மாசம் கழிச்சு குழந்தை என்று சொல்லிவிட்டு கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.
2ஜி சிம்
கல்யாணம் ஆகி 18 மாசம் கழிச்சு குழந்தை என்னடான்னா 2ஜி சிம்முன்னு சொல்றான். கல்யாணம் ஆகி 7 வருஷம் குழந்தை இல்லை... அவன் போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டேன்னு சொல்றான்னு மதுரை முத்து சொல்ல. இல்லை...அது அப்படி இல்லை.. நாட் ரீச்சபுள்னு ரம்யா பாண்டியன் எடுத்துக் கொடுத்தார்.
முத்து அமைதி
மதுரை முத்துவே உணர்ச்சி வசப்பட்டு எழுந்து நின்று அமைதி அமைதி என்று பார்வையாளர்களை அமைதி படுத்தினார். மதுரை முத்துவுக்கே காமெடி எடுத்துக் கொடுக்கும் அளவுக்கு கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் தெறி பேபியாகி தேறி இருக்கார் ரம்யா பாண்டியன்.
விஜய் டிவி ஜெயச்சந்திரன்
விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனவர் ஜெயச்சந்திரன். இவர் விஜய் டிவியில் அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் அவ்வப்போது பங்கு பெற்று வந்தார். அடுத்து மதுரை முத்துவுடன் சன் டிவிக்கு சென்று நிகழ்ச்சிகளை நடத்தியவர், மீண்டும் கலக்கப் போவது யாரு 9 சீசனில் போட்டியாளராக வந்து இருக்கார்.