ரம்யா பாண்டியன்.. பார்த்ததும் பற்றிக்கொள்ளும்.. ஒய்யார அழகில்.. சலசலக்கும் சகலமும்!
சென்னை: புடவையில் கலக்கி ரொம்ப நாள் ஆகிவிட்டது . அதனால் அது ஓல்டு என தற்போது புடவையை கழற்றி தூக்கி வீசிவிட்டு பளபளக்கும் பாவாடை ஜாக்கெட்டோடு ரசிகர்கள் பார்த்ததும் கண்ணெடுக்காமல் ரசிக்கும் வகையில் ரம்யா பாண்டியன் வெளியிட்ட போட்டோஸ்கள் அனைவரையும் ஷாக்காக்கி இருக்கிறது.
ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் சினிமாக்களில் காலடி எடுத்து வைத்தாலும் குக் வித் கோமாளி மூலமாகத்தான் ரசிகர்களின் மனதில் சிரிப்பழகி யாக வலம் வந்துகொண்டிருந்தார் .
என்னோட தேடல் என்ன தெரியுமா.. கால் மடக்கி முரட்டு போஸ் கொடுத்த சனம்!
ஆனாலும் இவருக்கு சினிமாக்களை தாண்டியும் இணைய தளங்களில் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது .இன்ஸ்டாகிராம் ,டிக் டாக் ,ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் இவருக்கு ரசிகர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர் .
நல்லா என்ஜாய்
லாக் டவுன் நேரத்தில் நன்றாகவே என்ஜாய் பண்ணி வருகிறார் .அவர் எஞ்சாய் பண்ணுவது காணாது என்று அவரை பாலோ பண்ணும் ரசிகர்களுக்கும் பார்த்து ரசித்துப் போங்க என கண்ணுக்கு அழகாகவும் குளுமையாகவும் தரிசனத்தை காட்டிக் கொண்டிருக்கிறார். தற்போது இன்ஸ்டாகிராமில் பல நடிகைகளும் போட்டி போட்டு ஆரம்பித்திருக்கும் ஃபோட்டோஷூட்டை முதல் முதலில் ஆரம்பித்து இவர் தான்.
யாருடா இந்தப் பொண்ணு
யாருடா இந்த பொண்ணு என பலரும் திரும்பிப் பார்க்கும் வகையில் ரொம்பவே பாப்புலர் ஆகிவிட்டார் .சினிமாக்களிலும் நடித்து கிடைக்காத பெயரும் புகழும் இவருக்கு போட்டோ சூட்டினால் தான் இப்ப வரைக்கும் கிடைத்துக் கொண்டிருக்கிறது என பல ரசிகர்கள் இவரிடம் கூறி வருகின்றனர் ஆனாலும சினிமாவில் பெரிய இடத்திற்கு வர வேண்டும் என்பது இவருடைய ஆசை.
மயக்கும் புன்னகை
இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் இவருக்கு இருக்கும் ரசிகர்களை வைத்து இவர் பெரிய இடத்திற்கு வந்து விட்டார் என அவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர் .அந்த அளவிற்கு தன்னுடைய மயக்கும் சிரிப்பினால் பார்ப்பவர்களை மயக்கி வருகிறார். இவருடைய ரசிகர்களின் எண்ணிக்கையை வைத்துதான் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது.
சிங்கப் பெண்
ஆனால் அதே ரசிகர்களால் தான் இவரால் கடைசி நாள் வரைக்கும் இந்த வீட்டிற்குள் இருக்க முடிந்தது .இவருடைய துணிச்சலையும் எதற்கும் கலங்காத சிரித்த முகத்தையும் பலபேருக்கு பிடித்துவிட்டது .பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக இவர் இதுவரை இல்லாத வகையில் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாகிவிட்டார் .வெளியே வரும் போது கூட இவருக்கு சிங்கப்பெண் என்று பட்டம் கொடுத்தது தான் கொடுத்தார்கள்.
செம கூட்டம்
பெண்கள் முதல் இளைஞர்கள் வரை எல்லோரும் இப்ப வரைக்கும் அவரை அதே பேரை சொல்லித்தான் அழைத்து வருகின்றனர் .ஆண் நடிகர்களுக்கு நிகராக பேனர்கள் வைத்து இவருக்கும் பாலாபிஷேகம் செய்த வெறித்தனமான ரசிகர்கள் இருக்கும் வரை இவரது காட்டில் நல்ல மழைதான். எப்போதுமே இழுத்துப் போர்த்திக் கொண்டு சிரித்த முகமாக இருப்பது எனக்கு பிடிக்காது .
இடுப்பழகு
நான் மாடல் உடை போட்டுக்கொண்டு வந்தாலும் என்னை பார்த்ததும் ரசிகர்கள் கண்கள் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் எந்தப் பக்கமும் போய்விடக்கூடாது என தன் மீது மொத்தமாக மேயவிட்டு கொள்ளுங்கள் என இவர் பளபளக்கும் உடையில் தன்னுடைய இடுப்பழகை காட்டி கிறங்கடிக்கும் பார்வையால் அதை அப்படியே போட்டோவாக எடுத்து தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் .
வீடியோ வைரல்
இவருடைய போட்டோஸ்கள் இவர் பதிவிட்ட சிறிது வினாடிகளுக்கு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது .ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைத்துறையில் இவருடன் நடித்துக்கொண்டிருக்கும் நடிகர்களும் இவருடைய இந்த லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து தீப்பொறிகளையும் பறக்கும் ஹார்டின் களையும் பறக்க விட்டு வருகின்றனர்.