ரம்யாவுக்கு கூடக்கூட ஆதவனுக்கு குறைஞ்சுகிட்டே...!
சென்னை: விஜய் டிவியின் கலக்க போவது யாரு சீசன் 9 இல் ரம்யா பாண்டியனும் ஒரு ஜட்ஜாக பங்கேற்று இருக்கார். இவருடன் வனிதா விஜயகுமார், ஆதவன், மதுரை முத்து, ஈரோடு மகேஷ் உள்ளிட்டவர்கள் ஜட்ஜ் என்பது தெரிந்த விஷயம்.
நிகழ்ச்சியில் அவ்வப்போது கவுண்டர் கொடுத்து, ரம்யா பாண்டியனும் தன் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தி அனைவரையும் ரசிக்கவும், சிரிக்கவும் வைக்கிறார்.
இது பற்றி பேசும்போதுதான் ரம்யாவுக்கு நகைச்சுவை உணர்வு கூடக்கூட ஆதவனுக்கு கம்மியாகிக்கிட்டே போகுதுன்னு மதுரை முத்து விளையாட்டாக சொன்னார்.
ரம்யா பாண்டியன்
நடிகை ரம்யா பாண்டியன் நடித்த அபடங்களை விட அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்து இருப்பது விஜய் டிவிதான். விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் ரம்யா கலந்துக்கொண்டதில் உலகத் தமிழர் மத்தியில் பெரும் புகழ் அடைந்து பெருமளவில் ரசிகர்களை பெற்றுவிட்டார் ரம்யா.
கலக்க போவது யாரது 9
விஜய் டிவி குக்கு வித் கோமாளி முடிந்த கையோடு ரம்யாவுக்கு கலக்க போவது யாரு சீசன் 9 லும் வாய்ப்பு தந்து அவரை ஜட்ஜாக உட்கார வைத்துள்ளது.நகைச்சுவை நிகழ்ச்சிக்கு ரம்யாவை உட்கார அவைத்து இருக்கிறதே விஜய் டிவி.. ரம்யாவுக்கு என்ன தெரியும் என்று பேச்சு அடிபட்ட நிலையில் ரம்யா நிகழ்ச்சிக்கு ஏற்ப கவுண்டர் கொடுத்து தனது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தி, இந்த நிகழ்ச்சி மூலமும் ரசிகர்களை தக்க வைத்து வருகிறார்.
மதுரை முத்து
ரம்யாவுக்கு நகைச்சுவை உணர்வு கூடக்கூட ஆதவனுக்கு கம்மியாகிக்கிட்டே வருது என்று சொன்ன மதுரை முத்து ஒரு ஜோக் சொன்னார். ஏன் சிரிக்கணும்.. எதுக்கு சிரிக்கணும் என்று கேள்வி கேட்டவன் 35 வயசில் ஆஸ்பிடலில் படுத்து கிடக்கிறான். மனிதனை வாழ வைப்பது நகைச்சுவை என்று சொன்னார்.
வாரத்துக்கு ஒருவர்
என்னதான் போட்டியாளர்கள் வந்து கலக்கப் போவது யாரது நிகழ்ச்சியில் ஜோக் சொன்னாலும், நகைச்சுவை நிகழ்ச்சி செய்தாலும்.. நிகழ்ச்சியில் ஜட்ஜாக இருக்கும் மதுரை முத்து, ஆதவன், ஈரோடு மகேஷ் மூவரும் வாரத்துக்கு ஒருவர் என்று மேடைக்கு வந்து ஜோக் சொல்வது நிகழ்ச்சியின் சிறப்பு.