ஷூட்டிங் ஸ்பாட்டில்.. மடியில் வைத்து கொஞ்சிய ரக்ஷிதா.. செம!
சென்னை: சூட்டிங் ஸ்பாட்டில் குட்டி ரசிகரை மடியில் வைத்து கொஞ்சிய ரக்ஷிதா வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோக்களை பார்த்த அவருடைய ரசிகர்கள் ஹாப்பி அடைந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் நமக்கும் இந்த மாதிரி ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று ஏங்கி வருகிறார்களாம்.
ரக்ஷிதா என்று சொல்வதை விடவும் சரவணன் மீனாட்சி "மீனாட்சி" என்று சொன்னால்தான் டக்கென்று ஞாபகத்திற்கு வந்துவிடும்.

ரசிகர்களின் மீனாட்சி
அப்படி சொல்லும் அளவிற்கு ரசிகர்களின் மனதில் மீனாட்சியாக குடி கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டிருக்கும் வீடியோவை பார்த்து தான் ரசிகர்கள் பொறாமை படுகிறார்கள் .அடிக்கடி இவர் சூட்டிங் ஸ்பாட்டில் செய்யும் சேட்டைகளை ரசிகர்கள் வீடியோ எடுத்து அதை பரப்பி வருகிறார்கள்.

குடும்ப குத்துவிளக்கு
அந்த மாதிரி இவரே இப்போது இவரைப் பற்றிய வீடியோவை வெளியிட்டிருக்கிறார் . பலர் மாடல் உடைகளில் கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை கவரும் நிலையில் இவர் எப்போதுமே புடவையிலும் குடும்ப குத்துவிளக்காக ஜொலித்திருக்கிறார்.

புடவைப் புயல்
அதுமட்டுமல்லாமல் சூட்டிங் ஸ்பாட்டில் அடிக்கடி புது புடவை கட்டிக்கொண்டு இருக்கும்போது அப்படியே அதை போட்டோக்களாக எடுத்து வைத்துக் கொள்கிறார் .எடுத்த போட்டோவை நாம் மட்டும் பார்த்தால் போதாது என்றுதான் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

உச்சு கொட்டும் ரசிகர்கள்
இவருடைய போட்டோவை பார்த்ததும் கமெண்டுகளை பொழியும் ரசிகர்கள் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் வீடியோவை பார்த்து உச்சுக் கொட்டி ரசித்து வருகிறார்கள் .குழந்தைகள் மீது பேரன்பு கொண்ட இவர் சூட்டிங் ஸ்பாட்டில் ஒரு குழந்தையுடன் கொஞ்சி விளையாடிய வீடியோக்கள் தான் அது.

மகாவின் மடியில்
நாம் இருவர் நமக்கு இருவர் என்னும் சீரியலில் தற்போது இவர் மகாவாக நடித்துக் கொண்டிருக்கிறார் .இந்த சீரியலின் சூட்டிங் பார்ப்பதற்காக ரசிகர்கள் அடிக்கடி வந்து குவிந்து விடுகின்றனர். அந்த மாதிரிதான் தற்போது இந்த சூட்டிங் பார்ப்பதற்காக வந்த ரசிகர்களின் இவர் மனதை கவர்ந்த ஒரு குட்டி ரசிகர் இவரிடம் இருந்து அவர் அம்மாவிடம் செல்வதற்கு கூட மனம் இல்லாமல் அப்படியே ரஞ்சிதாவின் மடியில் உட்கார்ந்து விட்டார்.

எழுந்திருக்கலையே
அதைப் பார்த்து ரசிகர்கள் அதை அப்படியே வீடியோ எடுத்து இருக்கிறார்கள். அதில் அந்த குட்டி ரசிகர் ரக்ஷிதாவின் மடியில் உட்கார்ந்திருந்த தோரணை பற்றி ரக்ஷிதா அருகில் இருப்பவர்களிடம் என்ன நடந்தாலும் எனக்கு கவலை இல்லை எனும் தோரணையில் அப்படியே ஹாயாக உட்கார்ந்து இருக்கிறார் என்று ஜாலியாக சொல்லிக் கொண்டிருந்ததை வீடியோவாக எடுத்து இருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

செம ஜாலிதான்
அதுவும் சுற்றி அனைவரும் சந்தோஷமாக சிரிச்சி ஜாலி பண்ணிக் கொண்டிருக்கும்போது இவரின் மடியில் உட்கார்ந்தாலே போதும் என்று அந்த குட்டி ரசிகரும் அமைதியாக திரு திருவென முழித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்து பல நெட்டிசன்கள் பொறாமைப்பட்டு கமெண்டுகளை போட்டு வருகிறார்கள் .இந்த மாதிரி எங்களுக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்று கலாய்த்து வருகிறார்கள்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications