வெளியே நடப்பதை லெட்டரில் எனக்கு சொல்லிட்டு இருந்தாங்க! பிக் பாஸ் ரகசியத்தை அம்பலப்படுத்திய ரவீந்தர்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ரவீந்தர் தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் இருக்கும் போது வெளியே நடக்கும் நிகழ்வுகளை தனக்கு லெட்டரில் உள்ளே தெரியப்படுத்திட்டு இருந்தாங்க என்று பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
பிக் பாஸ் ரசிகர்களுக்கு பரீட்சையமான ரவீந்தர் 6 சீசன்களாக அந்த நிகழ்ச்சியை ரிவ்யூ செய்திருந்தார். ஆனால் எட்டாவது சீசனில் இந்த வீட்டிற்குள் முதல் ஆளாக சென்ற ரவீந்தர் முதல் எலிமினேஷனாகி வெளியே வந்திருந்தார். ஆனால் ஒரு வாரம் இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தாலும் அதற்குள்ள தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு தான் வெளியே வந்திருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் எலிமினேஷன் ஆனதும் இது அன்எவிக்ஷன் என்று பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதோடு விஜய் சேதுபதி முன்பு உள்ளிருக்கும் போட்டியாளர்கள் பற்றி அவர்களுடைய முகத்துக்கு நேராகவே தன்னுடைய ரிவ்யூ கொடுத்து விட்டு வந்திருந்தார். ஒரு சிலரை அதிகப்படியாக புகழ்ந்திருந்தார். ஒரு சிலரை எதிர்பார்க்காத அளவிற்கு நோஸ்கட் செய்திருந்தார்.
அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அந்த நிகழ்ச்சியில் உள்ளே என்னவெல்லாம் நடந்தது என்று பல பேட்டிகளில் பேசிக்கொண்டிருக்கிறார். சும்மாவே மணி கணக்கில் பேசுவார் இப்போது அவரே அந்த நிகழ்ச்சிக்குள் என்ன நடக்கிறது என்று பார்த்துவிட்டு வந்திருக்கிறார். அதனால் இந்த நிகழ்ச்சி பற்றி அக்கு வேறு ஆணிவேராக எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியே நடக்கும் எந்த நிகழ்வுகளும் உள்ளிருக்கும் போட்டியாளர்களுக்கு தெரியாத வகையில் தான் விளையாடப்படுவதாக கூறப்படுகிறது. உள்ளிருக்கும் போட்டியாளர்கள் செல்போன், வாட்ச் என்ற எந்த சாதனத்தையும் பயன்படுத்தக் கூடாது. அது போல உள்ளே அங்கு கிளீனிங் உட்பட வேலைக்கு வரும் நபர்களை கூட போட்டியாளர்கள் பார்த்து விடக்கூடாது என்பதற்காக ஸ்கிரீன் போட்டு தான் வேலை பார்த்து இருக்கிறார்கள்.
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வெளியே என்ன நடக்கிறது என்று தனக்கு கடிதம் அனுப்பியதாக ரவீந்தர் பேசி இருக்கிறார். அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் அதே நாளில்தான் தன்னுடைய அப்பாவுக்கு ஆபரேஷன் நடைபெற்றது. அவருக்கு நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று அதிகமான ஆசை இருந்தது.
அதனால் தான் நான் இந்த சீசனில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். முக்கிய காரணம் அப்பாவின் ஆசையாக இருந்தாலும், இன்னொரு காரணம் பணம் ஒரு முக்கிய தேவையாகவும் இருந்தது. அதனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். இதற்கு முன்பு இரண்டு முறை எனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சில சந்தர்ப்பங்களால் உள்ளே போக முடியாமல் ஆகிவிட்டது.
அதனால் இந்த முறையை தவிர்க்கக்கூடாது என்று நினைத்தேன். இதுவரைக்கும் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறேன் என்று உறுதியாகாமல் இருந்தது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முந்தைய நாள் தான் நான் உறுதி செய்யப்பட்டேன். ஆனால் ஏற்கனவே என்னுடைய அப்பாவிற்கு ஆபரேஷன் செய்வதற்கு நாள் பிக்ஸ் பண்ணி விட்டதால் வேறு வழியில்லாமல் அப்பாவோடு இல்லாமல் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
உள்ளிருக்கும்போது எனக்கு ஹாஸ்பிடலில் இருந்து கடிதம் அனுப்பிக்கொண்டே இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் என்னுடைய அப்பாவின் நிலைமை எப்படி இருக்கிறது என்று எனக்கு பிக்பாஸ்க்குள் கடிதம் வந்து கொண்டிருந்தது. என்னுடைய அப்பா ஐ சியூவில் இருந்து ரூமுக்கு வந்துவிட்டது எனக்கு தெரியும் என்று அந்த பேட்டியில் ரவீந்தர் பேசியிருக்கிறார். இதனால் இதுபோல மற்ற போட்டியாளர்களுக்கும் வெளியே நடக்கும் நிகழ்வுகள் உள்ளே கடிதம் அனுப்பி தெரிவிப்பார்களா? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்திருக்கிறது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications