"தேவர் மகன்" - திரைக்கதை, நடிப்பால், 90-களில் தமிழ் சினிமாவை உலுக்கிய காவியம்!
தமிழ் சினிமாவின் வரலாற்றில் சில படங்கள் வெறும் திரைப்படங்களாக இல்லாமல், ஒரு சமூகத்தின் உரையாடலைத் தொடங்கி வைத்திருக்கின்றன. 1992-ல் வெளியான 'தேவர் மகன்' அப்படிப்பட்ட ஒரு படைப்பு. இது வெறும் ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான கதை அல்ல; அது குடும்ப உறவுகள், பாரம்பரியம், சாதி, மற்றும் வன்முறை எனப் பல சிக்கலான விஷயங்களை ஆழமாக அலசியது. உலகநாயகன் கமல்ஹாசனின் கதை, திரைக்கதையில், இயக்குநர் பரதன் இயக்கிய இந்தப் படம், இன்றும் ஏன் கொண்டாடப்படுகிறது, அது ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பதைக் காண்போம்.

பரம்பரை vs. பகுத்தறிவு
படத்தின் மையக் கருத்தே இதுதான். லண்டனில் படித்துவிட்டு பகுத்தறிவுக் கொள்கைகளுடன் ஊருக்குத் திரும்பும் சக்திவேல் (கமல்ஹாசன்), தன் தந்தையான பெரிய தேவர் (சிவாஜி கணேசன்) வாழ்ந்து வரும் பாரம்பரியமான கிராமத்து வாழ்வியலுடன் மோதுகிறார். தந்தை ஒரு கிராமத்தின் பெரியவர், பழமைவாதி, தன் மண்ணின் பெருமைகளில் நம்பிக்கை கொண்டவர். மகன், நவீன உலகத்தின் பிரதிநிதி, சமாதானத்தை விரும்புபவர். இந்த இரு வேறுபட்ட குணாதிசயங்களின் மோதல், படத்தை ஒரு அழுத்தமான திரைக்கதையாக மாற்றுகிறது.
கமல்ஹாசனின் நுட்பமான நடிப்புப் பரிமாணம்
இந்தப் படம் கமல்ஹாசனின் நடிப்புத் திறனுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. தொடக்கத்தில் நகரத்து இளைஞனின் கூச்சம், பின்னர் தந்தையின் மரணத்துக்குப் பிறகு ஏற்படும் துயரம், பொறுப்பு, மற்றும் வன்முறைக்குள் சிக்கிக்கொண்டதன் விரக்தி எனப் பல உணர்ச்சிகளை அநாயசமாக வெளிப்படுத்தியிருப்பார். குறிப்பாக, படத்தில் ஒரு காட்சியில், தனது தந்தை இறந்த பிறகு, அவர் விட்டுச் சென்ற நாற்காலியில் அமர்ந்து அவர் அணிந்திருந்த சட்டையை வாசனை பிடிப்பார். இந்தக் காட்சி, வசனங்கள் இல்லாமல் ஒரு மகனின் ஆழ்மனத் துயரத்தை உணர்த்தும் ஒரு மகத்தான நடிப்புப் பதிவு. நாசர் அவரது வாழ்நாளில் சிறந்த நடிப்பை இதில் காட்டியிருப்பார். செங்கல்பட்டுக்காரரான நாசர், தெற்கத்தி வழக்கத்தை உள்வாங்கி, அப்படியே திரைக்கு கொண்டு வந்ததெல்லாம் மேஜிக்.
நடிப்பின் இமயம் - சிவாஜி கணேசன்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இந்தப் படத்தில் பெரிய தேவராகவே வாழ்ந்திருப்பார். ஒரு கிராமத்துத் தலைவரின் கம்பீரம், பாசம், கோபம் என அத்தனை உணர்ச்சிகளையும் அள்ளித் தெளித்திருப்பார். 'இந்த காட்டுமிராண்டிங்க கூட்டத்துல உங்கப்பனும் ஒருத்தன்றதை மறந்துடாதே!' என மகனிடம் அவர் பேசும் காட்சி, வெறும் வசனம் அல்ல, அது பல தலைமுறைகளின் ஆதிக்க உணர்ச்சியை உணர்த்தும் ஒரு மகா நடிப்பு. இந்தக் கதாபாத்திரத்திற்கு சிவாஜிதான் சரியான தேர்வு என கமல்ஹாசன் உறுதியாக இருந்ததன் பலனை திரையில் கண்டோம். இந்தப் படத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்புக்காக தேசிய விருதும் பெற்றார்.
பரதனின் இயக்கம்: ஒரு கலைநயம் கொண்ட பார்வை
மலையாள சினிமாவின் ஆளுமையான இயக்குநர் பரதன், இந்தப் படத்தை இயக்கியது ஒரு முக்கிய காரணம். அவரது இயக்கம், கிராமத்து வாழ்வின் அழகியலையும், அதன் வன்முறை நிறைந்த யதார்த்தத்தையும் மிக நேர்த்தியாகப் பதிவு செய்தது. ஒவ்வொரு காட்சியிலும் ஒரு கவித்துவமான தன்மையைக் கொண்டுவந்தார். குறிப்பாக, இளையராஜாவின் இசை, பாடல்கள், மற்றும் பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு என அனைத்தும் இணைந்து படத்திற்கு ஒரு தனித்துவமான அழகியலைக் கொடுத்தன. "இஞ்சி இடுப்பழகி" பாடலின் காட்சிப்படுத்தல், அதன் காமிக் டோன் என அனைத்தும் புதுமையாக அமைந்தன.
பட்டிமன்றம் பேசுபொருள் - சாதியும், வன்முறையும்
'தேவர் மகன்' திரைப்படம் வெளியான பிறகு, அது சாதிப் பெருமையை முன்வைக்கிறது என்ற விமர்சனம் பரவலாக எழுந்தது. படத்தின் தலைப்பு, சில வசனங்கள், மற்றும் கதாபாத்திரங்களின் பெயர்கள் ஆகியவை சாதிய உணர்வுகளைத் தூண்டுவதாகக் குற்றம் சாட்டப்பட்டன. ஆனால், படத்தின் கரு, "வன்முறை ஒரு தீர்வாகாது, படிக்க வைப்பதே முன்னேற்றம்" என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தது. கிளைமாக்ஸில் சக்திவேல், "புள்ள குட்டிகளைப் படிக்க வைங்கடா, நம்ம மாதிரி ஆகாம இருக்கட்டும்" எனப் பேசும் வசனம், படத்தின் உண்மையான செய்தியை உணர்த்துகிறது. இது சாதிக்கு எதிராகப் பேசிய ஒரு படம் என்று ஒரு சாராரும், அது வன்முறையை நியாயப்படுத்தியது என்று மற்றொரு சாராரும் இன்றும் விவாதிக்கின்றனர்.
படத்தின் நீடித்த தாக்கம்
'தேவர் மகன்' திரைப்படம் ஐந்து தேசிய விருதுகளை வென்றது, ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. இந்தி மொழியில் 'விரசாத்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இது சினிமாவுக்கு அப்பாற்பட்ட ஒரு பேசுபொருளாக இன்றும் நிலைத்திருக்கிறது. ஒரு திரைப்படம், ஒரு குடும்பத்தின் கதை வழியாக ஒரு சமூகத்தின் சிக்கலான அடுக்குகளை எப்படி அவிழ்த்துப் போட்டது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications