Roja Serial: பொறக்கும் போதே உங்க பேர் பாட்டியா? அன்னபூரணிதானே?
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியல் ஒரே வீட்டுக்குள் காட்சிகள் வைத்தாலும், காட்சி அமைப்பு, வசனங்களில் சீரியலை பார்க்க வைத்துவிடுகிறார்கள்.
இன்று வரை சாக்ஷி கதாபாத்திரத்துக்கு ஒரு வீடு என்று காண்பிக்கவில்லை. ஆனால், கதையில் இவரும் ஒன்றித்தான் வருகிறார். எங்காவது சாலை ஓரத்தில், காரில் என்று இவருக்கான காட்சிகளை வைத்து விடுகிறார்கள்.
என்றாலும், கதை சமூகத்துக்கு ஒரு நல்ல கருத்தை சொல்வதாகவும், அதே சமயம் இந்த மாதிரி கதையை அலுப்பு ஏற்படாமல் கொண்டு செல்வதற்கும் கதைக் குழு, இயக்குநரை பாராட்டலாம்.

ரோஜா அனாதை
அனாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்த ரோஜா ஒரு நல்ல அழகான பொறுப்பு உள்ள ஒரு பெண்.ஆனால், இவளின் குடும்பம்தான் அன்னபூரணி அம்மா குடும்பம் என்று தெரியாமலே லாயராக சந்தித்த அந்த குடும்பத்தின் வாரிசு அர்ஜுனின் மனைவியாக வீட்டுக்குள் வந்து விடுகிறாள். காரணம், ஆஸ்ரமம் பிரச்சனையாகி சீல் வைக்கப் பட்டதனால்.

அணுவும் இதே
அணுவும் இதே ஆஸ்ரமத்தில் வளர்ந்தவள். ரோஜாவின் சிறு வயது போட்டோ, உடைகளை திருடிக்கொண்டு, தான்தான் அன்னபூரணி அம்மாவின் மக்கள் வயிற்று பேத்தி என்று, ரோஜா மருமகளாக வந்த அதே வீட்டில் அடைக்கலம் புகுந்துக்கறா.அன்றிலிருந்து ரோஜாவை வீட்டை விட்டு விரட்டி அடிக்க வேண்டும் என்று பாட்டியிடம் தூண்டுதல் போட்டுக்கொண்டே இருக்கிறாள்.

பேத்தியும் பாட்டியும்
பாட்டியும் பேத்தியும் ரோஜா என்ன குலமோ, கோத்திரமோ..தப்பான வழியில் பிறந்தவளோ என்னவோ..அவளை இந்த வீட்டில் வச்சு அழகு பார்க்காதே மருமகளேன்னு அடிக்கடி அன்ன பூரணி அம்மா பேத்தியின் பேச்சைக் கேட்டு தூபம் போட்டுக்கொண்டே இருக்காங்க. சரி பேரன் அர்ஜூனுக்குத்தான் ரோஜா என்றாகிவிட்டது .சின்ன பேரன் அஷ்வினுக்காவது அணுவை கல்யாணம் செய்து வைக்கலாம் என்று ஏற்பாடு செய்யறாங்க.

ஜெயிலுக்கு அணு
பையா கணேஷ் கொலை வழக்கில் அணு ஜெயிலுக்கு போக வேண்டியவள்.அவள் அஷ்வினை கல்யாணம் செய்துக்க கூடாதுன்னு ரோஜாவும், அர்ஜுனும் முட்டுக்கு கட்டையாக இருப்பதால், அர்ஜுன் இல்லாத நேரத்தில் வீட்டில் பாட்டி, யசோதா, பாலு மூவரும் ரோஜாவை அடித்து வெளியே அனுப்புகிறார்கள்.

இல்லை பேரே பாட்டியா?
இந்த நேரத்தில்தான் இதைக் கேட்டு பதை பதைத்து வந்த அர்ஜுன், பாட்டியை நடு ஹாலில் நின்று அன்னபூரணி அன்ன பூரணி என்று கத்துகிறான். பாட்டியை பேர் சொல்லி கூப்பிடறான்.மருமகளே பார்த்துகிட்டு நிக்கறேன்னு பாட்டி சொல்ல, பிறக்கும்போது அன்னபூரணின்னு பேர் வச்சு மூணு தடவை பேர் சொல்லித்தானே கூப்பிட்டாங்க. இல்லை அப்பவே பாட்டி பாட்டின்னு மூணு தடவை கூப்பிட்டாங்களா?.என் பட்டத்து மகாராணியை எல்லாரும் அடிச்சு வீட்டை விட்டு துரத்தி இருக்கீங்க.போலீசுக்கு போன் பண்ணி இருக்கேன்..வரட்டும் அவங்ககிட்ட பதில் சொல்லுங்கன்னு சொல்றான்.
இப்படி பரபரப்பாக போகுது கதை!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications