ரொமான்ஸ் அள்ளித்தர அவங்க ரெடி.. கண்களால் பருக நீங்க ரெடியா?
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலின் நேரத்தை 9 மணிக்கு மாற்றி கொடுத்தது சன் டிவி நிறுவனம். சீரியலை தயாரித்து வழங்கும் நிறுவனமும் பெரிய நிறுவனம்.
எனவே, சீரியலுக்கான தங்களது ப்ரைம் நேரத்தை தக்க வைத்துக் கொள்ள அனைத்து விதத்திலும் யோசித்து களம் இறங்கத் தயாராகி உள்ளது என்று ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தோம். நதியா வந்ததில் இருந்து ரோஜா சீரியல் சூடு பிடிக்க துவங்கியது உண்மைதான்.

நதியாவுக்கு பிறகு அடுத்தடுத்து ஸ்டார்களை இறக்க திட்டமிட்டு இருந்த நேரத்தில் இனி நடிகர் ராஜேஷ் அடிக்கடி தலை காட்டுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகும் வகையில் கதை நகர இருக்கிறது. நடிகர் ராஜேஷ் 80 களில் மிகவும் புகழ்பெற்ற ஹீரோவாகத் திகழ்ந்தவர் பிறகு நல்ல குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்து, இப்போதும் பெரிய திரையில் நல்ல இடத்தில் இருக்கிறார்.
இயக்குநர் பாக்கியராஜின் அந்த 7 நாட்கள் படத்தின் மூலம் குணச்சித்திர நடிகரானவர். இவர் நடிப்பில் வெளிவந்த அச்சமில்லை அச்சமில்லை படம் இவருக்கு ஒரு மைல்கல் எனலாம். இந்த படத்தை இயக்கி இருந்தவர் இயக்குநர் சிகரம் பாலச்சந்தர்.
ரோஜா சீரியல் மூலம் தடம் பதித்து இருக்கும் ராஜேஷ். கதைப்படி வடிவுக்கரசியின் மருமகனாக, இறந்து போன மகளின் கணவராக வேடம் ஏற்று நடிக்கிறார்.
இது முக்கியமான கதாபாத்திரம் என்பதால், நடிகர் ராஜேஷை இனி அடிக்கடி ரோஜா சீரியலில் பார்க்கலா,ம் என்கிற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
இருப்பினும், நதியா போல நல்ல வொர்த்தான நடிகைகளையும் களம் இறக்கத் திட்டமிட்டு உள்ள ரோஜா கதைக்குழு, மற்றும் நிறுவனம் கதையில் திடீர்த் திருப்பங்களையும், பரபரப்பையும் கூடவே ரோஜா-அர்ஜுன் நெருக்கமான நடிப்பின் மூலம் ரொமான்ஸையும் அள்ளித் தரத் தயாராக இருக்கிறதாம்..
கண்களால் பருக நீங்கள் தயார்தானே..!












Click it and Unblock the Notifications