சமந்தாவை விட செம க்யூட்... ரோஜா நாயகியின் கலக்கல் ரீல்ஸ் பார்த்து ரசிகர்கள் கமெண்ட்
சமந்தாவை விட க்யூட் ஆக பேசி ரீல்ஸ் போட்டுள்ளார் ரோஜா சீரியல் நாயகி பிரியங்கா நல்கரி.
சென்னை: ரோஜா சீரியல் நாயகி பிரியங்காவின் ரீல்ஸ்களை ரசிக்க தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. சமீபத்தில் அவர் பதிவிட்ட ரீல்ஸ் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா டிவி சீரியல் ஆயிரம் எபிசோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. நமக்கு இப்படி ஒரு மருமகள் கிடைக்க மாட்டாளா என்று எதிர்பார்க்கும் அளவிற்கு க்யூட்டாக புடவையில் பாந்தமாக நடித்து குடும்ப குத்து விளக்கு என்று பெயர் எடுத்துள்ளார் பிரியங்கா நல்கரி.
அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் டிரஸ்சில் கலக்கலாக ரீல்ஸ் போட்டு தனது ஒரிஜினல் இதுதான் என்று பதிவு செய்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் பிரியங்கா நல்கரி.
சாய்பாபா பக்தை
டிவி சீரியலில் நடிப்பது மட்டுமல்லது அவ்வப்போது ஆன்மீக டூர் ஜாலி டூர் என்று சுற்றி வருவார் பிரியங்கா. அவர் ஒரு சாய்பாபா பக்தை. மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா ஆலயத்திற்கு அடிக்கடி சென்று தரிசனம் செய்து வருவார். சமீபத்தில் மைசூர் சாமுண்டீஸ்வரி கோவில், சீரடி சாய்பாபா கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்த கையோடு அந்த புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
மகாராணி உடையில்
சீரியலில் எப்போதுமே புடவை கட்டி நடிக்கும் ரோஜா திடீரென மகாராணி உடையில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த உடை உங்களுக்கு அழகாக இருக்கிறது என்று பலரும் கமெண்ட்டில் பதிவிட்டுள்ளனர்.
அது மட்டுமல்லாது தனது மாமியாருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தைப் போட்டு சூப்பர் மாமியார்... சூப்பர் மருமகள் என்று பதிவிட்டுள்ளார்.
ரோஜா ஆயிரம்
ரோஜா சீரியலில் முதன் முதலாக நடித்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள பிரியங்கா நல்கரி, நேற்றைய தினம் 1000மாவது நாள் சூட்டிங் என்று குறிப்பிட்டிருக்கிறார். கடந்த 2020ஆவது ஆண்டில் கொரோனா காரணமாக பல மாதங்கள் சூட்டிங் தடை பட்டது. அப்போது பழைய எபிசோடுகளே ஒளிபரப்பானது. இந்த ஆண்டு கொரோனாவிற்கு மத்தியிலும் பாதுகாப்பாக சூட்டிங் நடத்தப்பட்டது.
என்ன பண்ணிட்டான்
சூட்டிங்கிற்கு இடையே அவ்வப்போது ரீல்ஸ் போடுவது ரோஜா நாயகியின் வழக்கம். சமீபத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் வரும் வசனத்தை ஏராளமானோர் ரீல்ஸ் ஆக பதிவிட்டு வருகின்றனர். ரோஜா நாயகியும் சமந்தா வாய்ஸை பேசியுள்ளார். நீ ஏம்மா சோகமா இருக்க... உன்னையுமா கல்யாணம் பண்ணிட்டான் என்று நயன்தாரா கேட்க... " பண்ணிட்டான்..." உன்ன கல்யாணம் பண்ணிட்டான்... என்ன பண்ணிட்டான்" என்ற வசனத்தை க்யூட்டாக சொல்கிறார்.