Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.250 கோடி சொத்து.. மனைவிக்கு 1 தங்க செயின் வாங்கி தரல.. ஆனால் ஊருக்கே கொட்டித்தரும் பிரபல நடிகர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரூ.250 கோடி சொத்துக்காக, 4வது திருமணம் செய்துள்ளதாக, நடிகர் பாலா மீது சோஷியல் மீடியாவில் விமர்சனங்களும், சலசலப்புகளும் எழுந்தன.. இப்படிப்பட்ட சூழலில், இந்த விமர்சனங்களுக்கு நடிகர் பாலா பதிலடி ஒன்றை தந்திருக்கிறார்.

41 வயதாகும் நடிகர் பாலா, சமீபத்தில்தான் மறுமணம் செய்திருந்தார்.. கடந்த 2010 முதல் 2019 வரை முதல் மனைவி பாடகி அம்ருதா சுரேஷுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில், இந்த தம்பதிக்கு ஒரு மகளும் இருக்கிறார். இதற்கு பிறகு, 2வதாக டாக்டர் எலிசபெத் என்பவருடன் லிவ்விங் இன் உறவில் இருந்ததாக தெரிகிறது. பிறகு ஒரு நடிகையுடன் திருமணம் என்றார்கள்.

television bala

வாரிசு: இப்படிப்பட்ட சூழலில், செய்தியாளர்களைச் சந்தித்த பாலா, "மறுபடியும் முறையாக சட்ட ரீதியாக திருமணம் செய்து குடும்பத்துடன் வாழ விரும்புகிறேன். தன்னுடைய ரூ.250 கோடி சொத்துக்கு நான் சொல்பவரே வாரிசு" என்று அறிவித்திருந்தார். இதையடுத்து, கடந்த அக்டோபர் 23ம் தேதியன்று கேரள மாநிலம் கழூர் பாவக்குளம் கோவிலில் தன்னுடைய உறவினர் கோகிலா என்பவரை 4வதாக திருமணத்தை செய்திருந்தார்.

தன்னுடைய ஆபரேஷனுக்கு பிறகு, ஒரு துணை வேண்டும் என்று நினைத்ததால், திருமணம் செய்துகொண்டதாகவும், இதனால் தன்னுடைய அம்மாவின் ஆசையும் நிறைவேறும் என்றும் கூறியிருந்தார். ஆனால், பாலாவின் 4வது திருமணத்தை சிலர் சோஷியல் மீடியாக்களில் கிண்டல் கேலி செய்து விமர்சித்தார்கள். குறிப்பாக, "பெண் கிடைக்காமல் வீட்டில் வேலைக்காரியாக இருந்தவரை கல்யாணம் செய்துள்ளார்"என்று கிண்டலடித்தனர்.

வேலைக்காரி: ஒருஅளவுக்கு மேல் பொறுமை இழந்த பாலா, "என் மனைவியை நீங்கள் எப்படி வேலைக்காரி என சொல்ல முடியும்? நான் உங்கள் மனைவி பற்றி இப்படி பேசட்டுமா? கோகிலாவை காயப்படுத்த யாரும் நினைக்காதீங்க.. என் மனைவி மீது இப்படி திட்டமிட்டே சுமத்தப்படும் அவதூறுகளுக்கு எல்லாம் யார் காரணம் என்று எனக்கு தெரியும். கண்டிப்பாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர்களை நான் சும்மா விடமாட்டேன்" என்று கோபப்பட்டிருந்தார்.

தம்பதி: இப்படிப்பட்ட சூழலில், Galatta சேனலுக்கு நடிகர் பாலா தம்பதியினர் பேட்டி தந்துள்ளனர்.. அந்த பேட்டியில், ரூ.250 கோடி சொத்துக்காகத்தான் இந்த திருமணம் நடந்ததாக கூறுகிறார்களே? அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று பாலாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பாலா, "நான் எதுக்கு அவங்களுக்கெல்லாம பதில் சொல்லணும்? என்னுடைய மனசாட்சிக்கு தெரியும்.. அப்படியே இருந்தாலும் அதில் என்ன தப்பு? நான் கடந்த 25 வருஷமாக சமூக சேவை செய்துட்டு இருக்கேன். கல்யாணம் ஆகி, என் மனைவிக்கு 1 செயின்கூட வாங்கித்தந்தது இல்லை.. ஆனால் , இப்போகூட, ஒரு நபருக்கு, ஹார்ட் ஆபரேஷனுக்கு நிதியுதவி செய்துட்டுதான் வந்திருக்கேன்.. அதேபோல, எங்கள் வீட்டு பக்கத்தில், பள்ளிக்கூடம் ஒன்றை கட்டித்தந்துள்ளேன்.

லட்சியம்: இதுவே வேறொரு மனைவியாக இருந்தால், இப்படி ஊருக்காக பணம் செலவு செய்வதை அனுமதிப்பார்களா? என்னுடைய லட்சியம், பார்வை தெரிந்துள்ளதால்தான், நான் பிறருக்கு செய்யும் உதவிகளுக்கு துணையாக என்னுடைய மனைவி இருந்து வருகிறார். என்னுடைய பணம், காசு, சொத்து எதுவானாலும், அது நல்ல விதத்தில் பிறருக்கு பயனுள்ள வகையில் போய் சேரும். நாளைக்கு எங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தாலும், அதுவும் இந்த லட்சியங்களையே ஃபாலோ செய்யும்" என்று கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+