இது என்ன மண்டை மேல நூதன கொண்டை.. ரித்விகாவின் ரசனையான ரகளை..!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல நிகழ்ச்சியாளர்கள் வந்தாலும் அதில் கடைசி வரைக்கும் இருந்து வெற்றி பெறும் நிகழ்ச்சியாளர்க்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பை விடவும் திரைத்துறையில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
அந்த மாதிரி சீசன் 2 வில் கடைசி வரைக்கும் அந்த வீட்டிற்குள் இருந்து வெற்றிக் கொடியை பெற்றார் இவர். அதற்கு முன்பு பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் அதில் எல்லாம் கிடைக்காத பெயரும் புகழும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகு இவருக்கு கிடைத்தது .
இவர் முதல் முதலில் இயக்குனர் பாலாவின் பரதேசி படத்தில் கிராமத்து சாயலில் நடித்திருப்பார். இந்த படத்தில் இவரது நடிப்பு நிறைய ரசிகர்களுக்கு பிடித்து இருந்தாலும் இவர் யாரென்று தெரியாத அளவில் தான் இருந்து கொண்டிருந்தார்.

ஒரு நாள் கூத்து
பா .ரஞ்சித் இயக்கத்தில் மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்து அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மெட்ராஸ் படத்தில் இவருடைய நடிப்பு இயல்பாக அப்படியே அமைந்திருந்ததால் அனைவருக்கும் இது பிடித்திருந்தது. அந்த படத்திற்கு பின்னர் கபாலி, ஆறுமுன், இசை , ஒரு நாள் கூத்து போன்ற பல படங்களிலும் நடித்துக் கொண்டு வந்தார்.

பிக் பாஸ் ராணி
இந்தத் திரைப்படங்களில் இவர் நடிப்பு அனைவருக்கும் பிடித்து இருந்தாலும் அந்த அளவிற்கு இவர் நினைத்த இடத்தை அடைய வில்லை. அந்த நேரத்தில் தான் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது .பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகு தான் யார் இந்த ரித்விகா என்று பலருக்கும் தெரிய ஆரம்பித்தது .அதன்பிறகு மக்களின் பேராதரவோடு இரண்டாவது சீசனில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

நிறைய படங்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெற்றி பெற்று வந்த பிறகு இவருக்கு படவாய்ப்புகள் அந்த அளவிற்கு இல்லை என்றாலும் ஒரு சில வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன . அதில் குண்டு படம் சென்ற வருடம் டிசம்பர் மாதம் ரிலீசானது இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தது. இதுவரைக்கும் இவர் குடும்ப பாங்கான பாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்தார். உடைகளிலும் கண்ணியத்தோடு நடந்து கொண்டிருந்த இவர் தற்போது இந்த மாதிரி போய்க்கொண்டிருந்தால் நமக்கு செட்டாகாது என்பதை புரிந்து கொண்டு விட்டார் போல.

கவர்ச்சியும் ஓகேதான்
அதனால் பல நடிகைகளும் கையில் எடுத்திருக்கும் போட்டோ ஷூட்டில் குதித்துவிட்டார். அதுவும் அவற்றில் கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டார் என்று சொல்லும் அளவிற்கு போட்டோக்களாக எடுத்து குவித்திருக்கிறார். இதுவரைக்கும் சேலைகளிலும் மாடல் உடைகளாக இருந்தாலும் சரி அதிலும் அதிக கவர்ச்சி காட்டாமல் இருந்து கொண்டிருந்த இவர் தற்போது விதவிதமான போட்டோக்களை எடுத்து குதித்திருக்கிறார். அதுவும் வித்தியாசமான கருப்பு உடையில் இவர் கொடுத்திருக்கும் கலக்கல் போஸ் வைரலாக பரவி வருகிறது.

ஆனால் அது தெரியலையே
சில நெட்டிசன்கள் இந்த போட்டோஸ் களிலும் இவர் இடுப்பு தெரிகின்றதே தவிர அதிலிருக்கும் தொப்புள் தெரியவில்லை என்று வருத்தத்தோடு பதிவிட்டு வருகிறார்கள். கருப்பு கலர் தான் உங்களுக்கு முழுமையாக சூட்டாகிறது என்று கூறிவருகிறார்கள். தற்போது இவர் வால்டர், எம்ஜிஆர் , ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது , யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அனைத்தும் ரிலீஸாகும்போது தான் கவனிக்கப்படுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

நூதன கொண்டை
பிஸியாக இருந்தாலும் ரசிகர்களை சும்மா இருக்கவும் கூடாது, நம்மள பத்தி நினைப்பு அவர்களின் மனதில் இருந்து நீங்கி விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் இவர் போட்டோக்களை பார்த்து பல ரசிகர்கள் உருகி உருகி கமெண்டுகளை போட்டாலும் சில ரசிகர்கள் கலாய்த்து தள்ளி கொண்டு தான் இருக்கிறார்கள். இப்போ எடுத்திருக்கும் போட்டோவில் இவருடைய ஹேர் ஸ்டைலை பார்த்து சில ரசிகர்கள் இது என்ன மண்டை மேல கொண்ட என்று கலாய்த்து வருகிறார்கள்.
Image Credits: https://twitter.com/Riythvika












Click it and Unblock the Notifications