kanmani serial: கண்மணிக்கு சஞ்சீவ்தான் பிளஸ்...!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலுக்கு சஞ்சீவ்தான் பிளஸ். இவருக்கு ஏற்ற கதையாகவும் கண்மணி சீரியல் இருக்கிறது.
டிவி சீரியல்கள் ஆண்களை மையப்படுத்தி கதை அமைவதும், அதற்கேற்ப சின்னத்திரையில் டெடிகேஷனான ஆர்ட்டிஸ்ட் கிடைப்பதும் அரிதுதான்.
அந்த வகையில் நடிகர் சஞ்சீவ் சின்னத்திரைக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.

கண்ணன் சின்னவர்
சின்னத்திரை பெரிய திரை என்கிற பாகுபாடு இல்லாமல், முழுக்க முழுக்க அர்ப்பணிப்போடு ஒவ்வொருகாட்சி, சின்ன சின்ன வசனம் என்று பார்த்து பார்த்து நடிப்பவர் சஞ்சீவ். தனக்கு கிடைத்த வாய்ப்பை அருமையான சந்தர்ப்பமாக மாற்றி ஜெயிக்க வேண்டும் என்கிற வெறியை இவர் நடிக்கும் ஒவ்வொரு இடத்திலும் பார்க்கலாம். கண்மணி சீரியலில் சின்னவராக இப்படித்தான் ஸ்கோர் பண்ணுகிறார்.

காலத்துக்கு ஏற்ப
காலத்துக்கு ஏற்ப நாமும் மாற்றிக்கொள்ளலாம் என்று எண்ணாமல், டயலாக் பேப்பர் கையில் வேண்டும் என்று கேட்டு வாங்கி மனப்பாடம் செய்து வசனம் பேசுவது.. கிளிசரின் போடாமல் கூடியவரை வசனம் பேசும்போது இயற்கையாக அழ பார்ப்பது.. அழுகிறேன் என்று பாவ்லா செய்யாமல் கண்ணீரோடு வசனம் பேசி பரிதாபப்பட வைப்பது என்பதில் சஞ்சீவ் வல்லவர்.

திருமதி செல்வம்
திருமதி செல்வம் சீரியல் தனது நடிப்பு பாதையை மாற்றி அமைத்தது என்று கூறியுள்ளார். திருமதி செல்வம் சீரியல் முதல் இவர் சீரியலில் நடித்தார் என்றால் அது நல்ல சீரியலாக இருக்கும் என்கிற உத்திரவாதத்துடன் பெண்கள் இன்றும் இவர் நடிக்கும் சீரியலை பார்க்கின்றனர்.

திறமை வெற்றி
கண்மணியில் இவர் திறமையை கண்டு இவருக்கு வெள்ளித் திரை வாய்ப்புக்கள் வர ஆரம்பித்து இருக்கிறது. சன் குடும்ப விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த கதாநாயகன் விருது கண்மணி சீரியலில் இவருக்கு கிடைத்து இருக்கிறது.திறமைக்கு என்றைக்கும் வெற்றி வந்து சேரும் என்பதற்கு காத்து இருந்து வாய்ப்பு கிடைக்கும்போது தனது திறமையை நிரூபித்து ஜெயிக்கும் சஞ்சீவ் சாட்சி.












Click it and Unblock the Notifications