இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல்.. கணவர் யார் தெரியுமா? குதர்க்கமான பதிவு
சென்னை: நடிகை காஜல் தனக்கு இரண்டாவது திருமணம் முடிந்து விட்டது என்று புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
காஜல் ஏற்கனவே சாண்டி மாஸ்டரை காதலித்து திருமணம் செய்திருந்த நிலையில் பிறகு அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து இருந்தனர்.

இந்தநிலையில் காஜல் தன்னுடைய திருமண புகைப்படங்கள் என்று தான் தனியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கும் நிலையில் அவரிடம் ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக சின்னதிரையில் அறிமுகமானார். பரிசு பிறகு ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.. அதிலும் முதல் முறையாக காஜல் வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் தான் நடித்திருந்தார். அதை தொடர்ந்து ஜீவா நடிப்பில் வெளியான டிஷ்யூம் திரைப்படத்திலும் சந்தியாவின் தோழியாக படம் முழுக்க நடித்திருப்பார். அதைத்தொடர்ந்து சிங்கம், கோ, மௌனகுரு, கௌரவம், இரும்பு குதிரை, கலகலப்பு 2 என பல்வேறு படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் காஜல் நடித்திருந்தார். அது மட்டுமல்லாமல் தன்னோடு டிவி நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடிய சாண்டி மாஸ்டரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். பிறகு இருவருக்கும் விவாகரத்து கிடைத்த பிறகு சாண்டி வேறு திருமணம் செய்து கொண்டார். சாண்டிக்கு இரண்டாவது ஆகவும் காதல் திருமணம் தான் நடைபெற்றது. இந்த நிலையில் சாண்டிக்கு இப்போது ஒரு மகனும் மகளும் இருக்கின்றனர். அதோடு திருமணத்திற்கு பிறகு சான்டியோடு காஜல் நல்ல தோழியாக இருந்து வருகிறார். அது குறித்து பல பேட்டிகளிலும் காஜல் பேசியிருக்கிறார். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டோம்.
எங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர் விருப்பம் தெரிவிக்க மாட்டார்கள் என்பதால் அவர்களிடம் மறைத்து தனியாக வாழ்ந்தோம். ஆனால் அதனை லிவிங் டு முறையில் வாழ்ந்ததாக கூறிவிட்டார்கள். சாண்டி என்னை பிரிவதற்கு நான் தான் முக்கிய காரணம். சான்டி மீது அதிகப்படியான பாசத்தால் அவரை நான் மிகவும் கஷ்டப்படுத்தி இருக்கிறேன். அதனால் எங்களுக்குள் சண்டை ஏற்பட்டு நாங்கள் பிரிந்து விட்டோம். அதோடு தற்போது சாண்டியோடு மட்டுமல்லாமல் அவருடைய மனைவியோடும் நட்பாக நான் இருந்து வருகிறேன் என்று பேட்டியில் பேசி இருந்தார். அதற்கு பிறகு தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து வந்த காஜல் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார். இப்படியான நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு திருமணம் முடிந்து விட்டதாக திருமண கோணத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.
அதில், அவர் ஒரு வழியாக இரண்டாம் திருமணம் முடிந்துவிட்டது. நீங்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நம்புகிறேன். திடீர்னு முடிவு பண்ணியதால யாருக்கும் சொல்ல முடியல... மன்னித்துவிடுங்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதை நம்ப முடியாத ரசிகர்கள் பலரும் காஜலிடம் இது பழைய புகைப்படம் மாதிரி இருக்கு... உண்மையில் உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா? என்று கேள்வி கேட்க அதற்கு கோபமான எமோஜிகளை காஜல் கொடுத்து வருகிறார். அதேபோல அந்த பதிவில் காஜல் தன்னுடைய புகைப்படத்தை மட்டுமே பகிர்ந்திருக்கும் நிலையில் உங்களுடைய கணவர் யார் என்று அதிகமான ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் காஜல் தன்னுடைய கணவர் யார் என்பதை பற்றி அதில் தெரியப்படுத்தவில்லை.












Click it and Unblock the Notifications