திருமண நாளிலே கர்ப்பத்தை அறிவித்த செம்பருத்தி சீரியல் நடிகை.. இத்தனை நாளாக மறைத்து வைத்த ரகசியம்!
செம்பருத்தி சீரியல் வில்லியாக நடித்த நடிகை திருமண நாளில் தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.
சென்னை: செம்பருத்தி சீரியல் மித்ரா கேரக்டரில் வில்லியாக நடித்த நடிகை பாரத நாயுடு தற்போது கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.
தன்னுடைய திருமண நாளிலே இவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியை பகிர்ந்து கொண்டதால் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் கழித்து தற்போது தான் பாரத நாயுடு கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தி அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறதாம்.

செம்பருத்தி வில்லி
ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் நடித்து வந்த பாரத நாயுடு அந்த சீரியலில் இருந்து பாதியிலே வெளியேறி பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான தாலாட்டு சீரியலில் கோகிலாவாக நடித்திருந்தார். ஜீ தமிழில் இவருடைய நடிப்பை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் இவர் வில்லி கெல்லாம் வில்லியா என்று கலாய்த்து கொண்டிருந்தனர். வில்லியாக அகிலாண்டேஸ்வரியை பழிவாங்க செய்த பிளான்கள் எல்லாம் சொதப்பும் போது அதிகமான ரசிகர்கள் இவரை திட்டி தீர்ந்து வந்தனர். முதல் சீரியலில் இவருக்கு ரசிகர்கள் மட்டுமில்லாமல் நெகட்டிவர்ஸ் அதிகரித்து விட்டனர்.

கதாநாயகியாக அறிமுகம்
ஹைதராபாத்தை சொந்த ஊராக கொண்ட இவர் அங்கேதான் பள்ளி கல்லூரியை படித்திருக்கிறார். பிறகு மாடல்ங்கில் கலக்கி இருக்கிறார். பிறகு முதல் முறையாக தேன்மிட்டாய் என்கிற திரைப்படத்தில் அறிமுகமாகி அதைத்தொடர்ந்து மிர்ச்சி சிவா இயக்கத்தில் வெளியான அட்ரா மச்சான் விசிலு என்ற திரைப்படத்திலும் இவர் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து இருக்கிறார். அதைத் தொடர்ந்து 2017ல் வெளியான நிரஞ்சனா என்கிற திகில் படத்திலும் இவர் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

சீரியலில் அறிமுகம்
அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து பல திரைப்படங்களில் இவர் சைட் ரோலிலும் கதாநாயகியாகவும் நடித்துக் கொண்டிருந்தாலும் இவர் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களின் மத்தியில் இவருக்கு பாப்புலர் கிடைக்கவில்லை என்பதாலே இவர் சின்ன திரையை நோக்கி அடியெடுத்து இருக்கிறார். முதல் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அறிமுகமாகி, அதைத்தொடர்ந்து தேவதை கண்டேன் என்கிற சீரியலிலும் பிறகு செம்பருத்தி சீரியலில் மித்ராவாகவும் இவர் நடித்திருக்கிறார்.

மகிழ்ச்சியான செய்தி தான்
இந்த நிலையில் இவர் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி போட்டோ ஷூட் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இளைஞர்களையும் தன்னுடைய ரசிகர்களாக பாலோ பண்ண வைத்திருக்கிறார். இந்த நிலையில் சில மாதங்களாகவே இவருடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவுகள் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது இவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அதுவும் தன்னுடைய திருமண நாளில் இவர் தன்னுடைய கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இதற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல சின்னத்திரை பிரபலங்களும் தொடர்ந்து வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications