Sembaruthi Serial: என்ன ஆச்சரியம் மாமியார் எப்படி இருக்க வேண்டும்...சீரியலை வச்சு சொல்றாங்க...!
சென்னை: மாமியார் என்பவர் மருமகளுக்கு இன்னொரு அம்மாவாக இருக்க வேண்டும் என்றால் எப்படிப்பட்ட தகுதியுடன் இருக்க வேண்டும் என்று ஜீ தமிழ் டிவியின் இரண்டு ரசிகர்கள் தீர்மானிச்சு இருக்காங்க.
மொத்தம் 5 .குவாலிட்டீஸ் இருக்கணுமாம்.அதுவும் ஜீ தமிழ் டிவியின் ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி சீரியல் மாமியார். செம்பருத்தி சீரியல் மாமியார் ரெண்டு பேரையும் ஒப்பிட்டு சொல்லி இருக்காங்க..
இந்த சீரியலில் வரும் இரண்டு மாமியார்களில் அகிலாண்டேஸ்வரி தி பெஸ்ட் மாமியார்னு சொல்லலாம்.
முதல் குவாலிட்டி
ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி மாமியார், சீரியலில் மகனிடம்..நான் இல்லேன்னா இங்கே நடக்கறது எதுவும் தெரியாதுன்னு நினைச்சுகிட்டியா? ஏதோ அவசரத்துல நான் இல்லாத சமயத்துல யார் கிட்டேயும் கேட்க்காம பணத்தை எடுத்து கொடுத்துட்டா.இதை போயி பெரிசு பண்ணிக்கிட்டு இருப்பியான்னு கேட்கறாங்க.
புருஷன் பொண்டாட்டிக்கு நடுவுல பிரச்சனையைத் தீர்த்து வைப்பாங்க...இதுதான் நல்ல மாமியாருக்கான முதல் குவாலிட்டி
உப்பு அதிகம்
சாம்பாரில் உப்பு அதிகமா கொட்டி வச்சு இருக்கே.. இதை எப்படி சாப்பிடறதாம்னு செம்பருத்தி சீரியலில் வனஜா கேட்கறாங்க.. வனஜா..சாம்பாரில் உப்பு அதிகமாப் போனது நிஜம்தான்.இதை ஏன் ஊதி பெரிசாக்கற...இத்தனை நாள் பார்வதி நல்லாத்தானே சமைச்சுக்கிட்டு இருந்தா. இன்னிக்கு ஏதோ அதிகமா போச்சுன்னு அகிலாண்டேஸ்வரி சப்போர்ட் பண்றாங்க .
குவாலிட்டி நம்பர் 3
மாமியார் செம்பருத்தி சீரியலில் அகிலாண்டேஸ்வரி மாதிரி எல்லாப் பிரச்சனைகளையும் சின்னதாக்கி தட்டிக் கழிச்சுருவாங்க. எதாவது உதவி செய்தால் நன்றி சொல்ல மறக்க மாட்டாங்க..இது 3 வது குவாலிட்டி.
குவாலிட்டி நம்பர் 4
இதுக்கு மேல என் மருமக மேல கையை வச்ச நடக்கறதே வேற..என்று ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி மாமியார் தன் மருமகள் மேல இன்னொருத்தி கையை வச்சா உடனே கொந்தளிச்சு பேசறாங்க. மருமகளுக்கு ஃபுல் சப்போர்ட் குடுக்கணும் இது மாமியாருக்கான 4 வது குவாலிட்டி.
மாமியார் செம்பருத்தி
பார்வதி நீ எது செய்தாலும் பார்க்கும்போது அது சரி இல்லாதது போலத்தான் தெரியும். ஆனா, கடைசியில் அது இந்த குடும்பத்துக்கு நல்லதா முடியும்..நீ நல்லாருக்கனும்மா...ஆசிர்வாதம் எப்பவும் இருக்கும். இது நல்ல மாமியாருக்கான 5 வது குவாலிட்டியாம்.
அவங்களே கணக்கிட்டு சொன்னதுங்க இது!